மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது.
தனது பன்னிரெண்டு வயது மகளையும் மகளின் 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.
சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளையும், மகளின் நண்பியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை மீது பிரதேச மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறிப்பிட்ட தந்தை கைது.
Reviewed by Madawala News
on
April 26, 2024
Rating: