சிறிய தேசிக்காய் ஒன்று 50 ரூபாயை தாண்டியது - கிலோ 2100 ரூபாவானது.



இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.



இதன்படி, மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவாக எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என வர்க்கர்கள் தெரிவித்துள்ளனர்.



ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரிக்க காரணம் என தகவல் வெளியாகியுள்ளது
சிறிய தேசிக்காய் ஒன்று 50 ரூபாயை தாண்டியது - கிலோ 2100 ரூபாவானது. சிறிய தேசிக்காய் ஒன்று 50 ரூபாயை தாண்டியது - கிலோ 2100 ரூபாவானது. Reviewed by Madawala News on October 02, 2023 Rating: 5

அரசியலை அந்நியமாகப் பார்ப்பதன் விளைவும், எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலையும்.



அரசியலை அந்நியமாகப் பார்ப்பதன் விளைவு!*

அரசியலை ஒரு சாக்கடையாக பார்க்கும் நிலை நெடுங்காலமாக இருந்து வருவதை அறிவோம்!

அதிகார மோகம், கட்சிவெறி, பிளவுகள், பிணக்குகள், மக்களது வரிப்பணத்தில் சுகபோகம் அனுபவிக்கும் சுரண்டல்கள், ஊழல் மோசடிகள், ஆட்சிக் கதிரைகளைக் கைப்பற்றவும் தக்க வைத்துக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைப் புரிதல், சதி மோசடிகள், பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுதல் என அனைத்து விதமான சீர்கேடுகளினதும் தலங்களாக களங்களாக அரசியல் அரங்குகள் இருப்பதே அது சாக்கடையாக பார்க்கப்படுவதற்கான காரணமாகும்!

ஆக, சமூகத்தில் தேசத்தில் கெளரவமாக வாழ விரும்புபவர்கள், கல்வி உயர்கல்விச் சமூகத்தினர், சமய சன்மார்க்கத் தலைமைகள் என உண்மை நீதி நேர்மை மற்றும் உயரிய நாகரீகம் பண்பாடுகளை நேசிப்பவர்கள் தாமோ தமது பிள்ளைகள் சந்ததிகளோ அரசியல் செய்வதனை விரும்புவதில்லை!

இவ்வாறான மனநிலையின் காரணமாக தேசத்தின் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற பொறுப்பை காவாலிகளிடமும் பாதாள உலக கோஷ்டிகளிடமும், இனமத வெறியர்களிடமும், குறுக்கு வழிகளில் முதலீட்ட விரும்பும் பண முதலைகளிடமும், ஊழல் மோசடிப் பேர்வழிகளிடமும், போதை வஸ்த்து, ஆயுதம் ஆட்களை கடத்துவோரிடமும் மக்கள் விட்டு விடுகின்றனர்.

ஆனால், மக்களுக்காக மக்களால் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஜனநாயகத்தில் மேலே சொன்ன சகல நாகரீகமான நேர்மையான தேச சமய சமூக பற்றுள்ள வகையறாக்களும் நம்பிக்கை கொண்டு தேர்தல் காலங்களில் வாக்களிக்கச் செல்வதோடு கெளரவ வேடங்களில் அரங்கேறும் காவலிகளையும் காடையர்களையும் தெரிவு செய்து கொள்கின்றனர்.

ஊராட்சி, நகராட்சி, மாகாண ஆட்சி, மத்திய ஆட்சி என சகல ஆட்சிக் கட்டமைப்புகளிலும் ஊழல் மோசடிப் பேர்வழிகளை பஞ்சமா பாதகங்கள் புரியும் பாதாள உலகத்தினரை பாதிக்கு மேல் மக்களுக்காக மக்களே தெரிவு செய்து கொள்கின்றனர்.

விளைவு நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது, மொத்த தேசிய உற்பத்தியை விடவும் 110% கடன் சுமை அதிகரித்துள்ளது, நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன, மக்கள் மீதான தலைவீத கடன் பத்து இலட்சத்தை தாண்டி விட்டது, பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகள் உயர்ந்து மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது, தரமற்ற உணவு, மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப் படுகின்றன, போஷாக்கின்மை அதிகரித்திருக்கிறது..!

கல்வி உயர்கல்வித் துறை பாதிக்கப்பட்டுள்ளது, ஆறு இலட்சம் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சை எழுதும் நாட்டில் 35000 பேருக்கு மாத்திரமே பல்கலைக் கழகங்களில் இடமிருக்கிறது, வேலவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, வருடாவருடம் நிபுணத்துவம் இல்லாத பணியாட்களாக சுமார் மூன்று இலட்சம் இளைஞர்கள் மாதர்கள் மத்திய கிழக்கிற்கு படை எடுக்கிறார்கள், நாட்டில் தொழில் செய்பவர்களும் வாழ்க்கைச் செலாணிக்கு ஈடுகொடுக்கும் ஊதியம் போதாமையால் தவிக்கின்றனர்.

இப்போது நாம் சொன்ன நேர்மையான நல்ல மனிதர்கள் படித்தவர்கள் துறைசார் நிபுணர்கள்.. இது தமக்கும் தமது பிள்ளைகள் சந்ததிகளுக்கும் வாழ உகந்த நாடு இதுவல்ல என நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கேடுகெட்ட வங்குரோத்து கொந்தராத்து அரசியல் கலாசாராத்தை முழுமையாக மாற்றியமைக்க களமிறங்கும் தேசப்பற்றாளர்கள் தேசத்துரோகிகளாக தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இயற்கை வளங்கள், மனித வளங்கள் நிறைந்த எழில்மிகு எங்கள் தேசம் மீட்கப்பட வேண்டும், இந்த தேசத்தைவிட வேறு எந்த தேசமும் எமக்கோ எமது சந்ததிகளுக்கோ நிரந்தரமான நிம்மதியான வாழ்விடமாக அமையப் போவதில்லை, நாட்டை விட்டு எங்கு தான் ஓடி உழைத்தாலும் சேமிப்புக்களுடன் இந்த நாட்டிற்கே நாம் மீள வேண்டும், எமது கூட்டம் குடும்பங்களும் உறவுகளும் இங்கேதான் வாழப் போகிறார்கள்!

நீதியை நிலை நிறுத்துவதும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராக எழுந்து நிற்பதும் தார்மீகக் கடமையாகும், சகல சமய சன்மார்க்கங்களும் போதிக்கும் யுகத்திற்கான அறப்பணியும் போராட்டமுமாகும்!

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 02.10.2023
அரசியலை அந்நியமாகப் பார்ப்பதன் விளைவும், எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலையும். அரசியலை அந்நியமாகப் பார்ப்பதன் விளைவும், எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலையும். Reviewed by Madawala News on October 02, 2023 Rating: 5

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ள சிபெட்கோ எரிபொருள் விலை விபரம்..



சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ள சிபெட்கோ எரிபொருள் விலை விபரம்.. இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ள சிபெட்கோ எரிபொருள் விலை விபரம்.. Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.



இலங்கையில் இயங்கும் சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

அதன்படி

92 Oct Petrol – Rs. 358

95 Oct Petrol – Rs. 420

Auto Diesel – Rs. 348

Super Diesel – Rs. 417

China Petroleum & Chemical Corporation (Sinopec) has increased its retail fuel prices (per litre) in Sri Lanka with effect from today (Oct. 01).

சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது. சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது. Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை?



இலங்கையில் உத்தேச மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமானால் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் எனத் எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் அதிகூடிய மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட முதல் மூன்று நாடுகளில் இலங்கை தற்போது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மின் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்க புதிய முறையொன்று உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை? தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை? Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முயிஸ் இன் ஆட்சியில் சுபீட்சம் கிடைக்கும் என ரணில் வாழ்த்து.



மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிஸ்க்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.


இலங்கை - மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்தார்.


அதேபோல் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.


மாலைதீவின் புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் சுபீட்சம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அந்நாட்டின் புதிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்
மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முயிஸ் இன் ஆட்சியில் சுபீட்சம் கிடைக்கும் என ரணில் வாழ்த்து. மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முயிஸ் இன் ஆட்சியில் சுபீட்சம் கிடைக்கும் என ரணில் வாழ்த்து. Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

ஏற்கனவே பலரை பலி எடுத்த யானை.., யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்கி பலத்த சேதம்.



அனுராதபுரம் - தந்திரிமலை பிரதான வீதியின் மானிங்கமுவ - ஓயாமடுவ பிரதேசத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

நேற்றிரவு (30) இடம்பெற்ற தாக்குதலில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாத்தறையிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீதே யானை தாக்கியுள்ளது.

இந்த யானை அப்பகுதியில் பல உயிர்களை பலிவாங்கியுள்ளதுடன் வீடுகளுக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த யானை இதற்கு முன்னரும் வீதியில் செல்லும் வாகனங்களை தாக்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே பலரை பலி எடுத்த யானை.., யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்கி பலத்த சேதம். ஏற்கனவே பலரை பலி எடுத்த யானை.., யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்கி பலத்த சேதம். Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

நாளை (02) நள்ளிரவு எரிபொருள் விலை திருத்தம் அறிவிக்கப்படும்; மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு



விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படாததால் நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது.

இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தமும் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை (02) நள்ளிரவு எரிபொருள் விலை திருத்தம் அறிவிக்கப்படும்; மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நாளை (02) நள்ளிரவு  எரிபொருள் விலை திருத்தம் அறிவிக்கப்படும்;  மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

தனது 19 வயது மனைவியை 19 ஆம் திகதி முதல் காணவில்லை என 28 வயது கணவன் 28 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.



தன்னுடைய இளம் மனைவியை காணவில்லை என, அவளுடைய இளம் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை என அப்பெண்ணின் கணவனான 28 வயதான நபர், செப்டெம்பர் 28ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டிலிருந்து வெளியே சென்று மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, மனைவி வீட்டில் இருக்கவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்தபோதும் அங்கும் அவர் இருக்கவில்லை என்று தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி 19ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தாலும், வீட்டுக்குத் திரும்புவாள் என 28 ஆம் திகதி வரையிலும் காத்திருந்ததாக அவர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தனது 19 வயது மனைவியை 19 ஆம் திகதி முதல் காணவில்லை என 28 வயது கணவன் 28 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. தனது 19 வயது மனைவியை 19 ஆம் திகதி முதல் காணவில்லை என 28 வயது கணவன் 28 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

திருகோணமலை (தம்பலகாமம்) பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல் - பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம்



திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01)காலை ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கினால் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன.


மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரியவந்துள்ளது.


இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள், ஆய்வு கூட உபகரணங்கள் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

தீயை கட்டுப்படுத்த திருகோணமலை தீ அனைக்கும் பிரிவு மற்றும் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இரானுவத்தினர் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


குறித்த சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்டோர் சென்று தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்தனர்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


கிண்ணியா நிருபர்
திருகோணமலை (தம்பலகாமம்) பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல் - பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம் திருகோணமலை (தம்பலகாமம்)  பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல் - பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம் Reviewed by Madawala News on October 01, 2023 Rating: 5

பாகிஸ்தான் - இந்தியா உள்ளிட்ட 4 அணிகளே உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்; கிறிஸ் கெய்ல்



மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைசிறந்த வீரர் கிறிஸ் கெய்ல் இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்குள் நுழையும் 4 அணிகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

2023 உலககிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 05 ஆம் தேதி தொடங்குகிறது.


கிறிஸ் கெயிலின் கணிப்பீடு படி அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஆகும்
பாகிஸ்தான் - இந்தியா உள்ளிட்ட 4 அணிகளே உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்; கிறிஸ் கெய்ல் பாகிஸ்தான் - இந்தியா உள்ளிட்ட 4 அணிகளே உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்; கிறிஸ் கெய்ல் Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடும் அதிகாரி கைது.



வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனைகளை மேற்கொள்ளும் 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் தமது கடமையின்போது இந்த தங்க நகைகளை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருடிய நகைகளை, அவர் நீர்கொழும்பில் உள்ள அடகு நிலையம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடும் அதிகாரி கைது. கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடும் அதிகாரி கைது. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

அரச சாஹித்திய விருதை பெற்ற 'வெய்யில் மனிதர்கள்' நூல் அறிமுக விழா.



சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப் தீன் மொழி பெயர்த்த 'வெய்யில் மனிதர்கள்' எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் 07ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொடை வீதி, இல். 77 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் ஏற்பாட்டிலும் மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பா ளருமான கவிஞர் அல் அஸூமத் தலைமையிலும் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி ஸூஹைர் எச்.எம்.தார் ஸெய்த் கலந்துகொள்ளவுள்ளார்.

விசேட அதிதிகளாக பலஸ்தீனத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் ஹிஷாம் அபூ தாஹா, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.பி.எம். அஷ்ரஃப் ஆகியோர் கலந்துகொள் ளவுள்ளனர். கௌரவ அதிதிகளாக அரச, தனியார்துறை முக்கியஸ்தர் கள், சிரேஷ்ட இலக்கியவாதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூல் தொடர்பான திறனாய்வை சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா, எழுத்தா
ளர் ஷாகிறா இஸ்ஸதீன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நூல் முதல் பிரதியை பத்திரிகையா ளரும் எழுத்தாளருமான பஷீர் அலி பெற்றுக்கொள்ளவுள்ளார். விசேட பிரதியை இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் பெற்றுக்கொள்ள வுள்ளார்.

பிரபல பலஸ்தீன எழுத்தாளர் கஸ்ஸான் கனஃபானி எழுதிய அர்ரிஜாலு ஃபிஷ்ஷம்ஸ்' எனும் அரபுமொழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை கொண்டு இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.

2020ஆம் ஆண்டு சிறந்த மொழி பெயர்ப்பு நாவலுக்கான அரச சாஹித்திய விருதையும் இந்த நூல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


அரச சாஹித்திய விருதை பெற்ற 'வெய்யில் மனிதர்கள்' நூல் அறிமுக விழா. அரச சாஹித்திய விருதை பெற்ற 'வெய்யில் மனிதர்கள்' நூல் அறிமுக விழா. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

நாளை (ஞாயிறு) மடவளை பஸார் I pharma channeling center இல் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ பரிசோதனை.



நாளை (ஞாயிறு) காலை 7.30 மணிக்கு மடவளை பஸார்
I pharma channeling center இற்கு உங்கள் குழந்தைகளை கொண்டு வாருங்கள்.


அங்கு குழந்தைகள் தொடர்பான விசேட மருத்துவர் ஜனத்
C. அத்த நாயக உட்பட பேராதனை வைத்தியசாலை வைத்தியர்கள் மூலம் குழந்தைகளை ப‌ரிசோதனை செ‌ய்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.


● மருத்துவ ப‌ரிசோதனை மற்றும் சிகிச்சை.

●ஆவி பிடித்தல் (NEBULIZER)

●இரத்த அழுத்தம் ப‌ரிசோதனை.

●உடல் மற்றும் உள வளர்ச்சியை ப‌ரிசோதனை செ‌ய்தள்.

●கரப்பான் நோய்கள் தொடர்பான ப‌ரிசோதனை மற்றும் மருந்து வழங்கப்படும்.

●PHYSIOTHERAPY ப‌ரிசோதனை.

●மருத்துவ அறிவுரைகள்.

இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக நாளை ( 01) காலை 8 மணி முதல்.......


I PHARMA CHANNELING CENTER - MADAWALA BAZAAR

*හෙට උදේ 7.30 වන විට මඩවල i pharma channeling centre වෙත ඔබේ දරුවන් රැගෙන එන්න...*
*එහිදි ඔබට ළමා රෝග වෛද්‍ය ජනත් .c.අත්තනායක වෛද්‍යතුමන් ඇතුලු පේරාදෙණිය රෝහලේ වෛද්‍යවරුන් විසිනි ඔබේ දරුවා පූර්ණ පරීක්ෂාවකට ලක් කර ප්‍රතිකර්ම කරනූ ලැබේ...සියල්ලම නොමිලේ !!!!*

*●වෛද්‍ය පරීක්ෂාව හා ප්‍රතිකාර*
*●Nebulizer*
*●physiotherapy ප්‍රතිකාර*
*●රුධිර පීඩන පරීක්ෂාව*
*●කායික හා මානසික* *වර්ධන පරීක්ෂාව*
*●පනූ රෝග සදහා ඖෂධ ලබා දීම*
*●උපදේශන සේවා*

*මේ සියලුම දේ හෙට දින (10/01)උදේ 8 සිට නොමිලේ!!!*
*●මඩවල i pharma channeling centre හීදී...*

*●(සැ:යු)500 දෙනෙකු හට පමණී*
நாளை (ஞாயிறு) மடவளை பஸார் I pharma channeling center இல் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ பரிசோதனை. நாளை (ஞாயிறு) மடவளை பஸார் I pharma channeling center இல் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவ பரிசோதனை. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா, ஜனாசாவாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்..



பொலனறுவை- வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏறாவூர் பிரதான வீதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா அவர்கள் இன்று அதிகாலை 3மணிக்கு கடமை முடிந்து தனது அறைக்கு உறங்கச் சென்றவர் காலை 6 மணிக்கு ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்-

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தற்போது அவரது அறையில் இருந்து ஜனாசா பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது -

கையில் ஒரு பெரிய காயம் காணப்படுவதாகவும் அறை முழுக்க இரத்தம் ஓடி காணப்படுவதுடன் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தகவல் -ஏதும் திட்டமிட்ட சதியா ?
இறைவன் அறிந்தவன் -

பொலிஸ் தடயவியல் பிரிவினர் துணையுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் ,

இடம்பெறும் பிரேத பரிசோதனையின் போதே மரணத்திற்கான சரியான காரணம் தெரிய வரலாம்-

அல்லாஹ் அந்த சகோதரரை பொருந்திக் கொள்வானாக- இழப்பால் வாடி நிற்கும் உறவுகளுக்கு உள அமைதியை வழங்கிடுவானாக !

பிந்திய தகவலின் படி இது ஒரு கொலையே என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணியளவில் வெளியான Update 

UPDATE -3

வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்த ஏறாவூரை சேர்ந்த ஹனீபா எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ அறையில் இரத்த வெள்ளத்தில் ஜனாசாவாக இன்று காலை மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஸ்த்தளத்திற்கு சென்ற உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் - 

இருந்தாலும் பொலிசாரினதும் சட்ட வைத்திய அதிகாரியினதும் விசாரணை அறிக்கையை வைத்தே இந்த மர்ம மரணத்தின் உண்மை வெளிப்படும் என அங்கு சென்றுள்ள ஏறாவூரை சேர்ந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் ஹாஜி தெரிவித்தார் -

ஜனாசா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலனறுவை வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன் - விடுமுறை தினமாக காணப்படுவதால் பெரும்பாலும் நாளை அல்லது திங்கட்கிழமையே பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று உறவினர்களிடம் ஜனாசா கையளிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியினது வலது கையின் முழங்கையை அண்டிய பகுதியில் பெரிய ஒரு காயம் உள்ளதுடன் , ஜனாசா தரையிலே காணப்படுகிறது-
அவர் தங்கி இருந்த அறை முழுக்க இரத்தம் தோய்ந்து காணப்படுவதுடன் படத்திலே உள்ளவாறு ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் வெளிப்புற சுவரிலும் இரத்தக் கரை காணப்படுகிறது - 

தடயவியல் பொலிஸ் பிரிவினரின் துணையுடன் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் - 

மரணத்துக்கான காரணம் என்ன என்பது மேற்கொள்ளப்பட உள்ள பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளின் பிரகாரம் வெளிப்படுத்தப்படலாம்- 

பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் இடம்பெற்றுள்ள பொலிஸ் உத்தியோகத்தரது மரணம் குறித்து நிச்சயம் பொலிசார் இவ்விடயத்தில் உள்ள மர்மத்தினை வெளிக்கொணர்வார்கள் என நம்புகிறோம்..

முஹம்மது அஸ்மி -ஏறாவூர்
30.09.2023


பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா, ஜனாசாவாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்.. பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா,  ஜனாசாவாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்.. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

VIDEO : நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் வயது உள்ளது - நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் ; மகிந்த



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) காலை கொழும்பு 7 தர்மாயதன வளாகத்தை வந்தடைந்துள்ளார்.

விலை அதிகரித்துள்ள பொருட்களின் விலை குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்போது வலியுறுத்தியுள்ளார்.

அங்கு எல்லே குணவம்ச தேரரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எந்த நேரத்திலும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அதற்காக அச்சம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு இன்னும் வயது உள்ளது எனவும், நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.

VIDEO : நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் வயது உள்ளது - நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் ; மகிந்த VIDEO : நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் வயது உள்ளது - நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் ; மகிந்த Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் என்ன வைத்தியர்கள் தெரிவிப்பு - இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்.



கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார்.

மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர்.

குறித்த சிறுமி அதேபிரதேசத்தைச் சேர்ந்த கராச் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடைய காதலனுடன் ஏற்பட்ட உறவு காரணமாக கர்ப்பமாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த இளைஞனை நேற்று 29ம் திகதி கைது செய்த பொலிஸார் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அவரை 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் என்ன வைத்தியர்கள் தெரிவிப்பு - இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில். வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் என்ன வைத்தியர்கள் தெரிவிப்பு - இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில். Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

நீதிபதி பதவி விலகியது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை.



முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.



ஜனாதிபதியின் செயலாளருக்கு இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆய்வு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.



ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.



கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது இராஜினாமா கடிதத்தை செப்டெம்பர் 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.



சட்டமா அதிபருக்கு எதிராக நீதவான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் வினவியதோடு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதவானுடன் தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கலந்துரையாடியதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்
நீதிபதி பதவி விலகியது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை. நீதிபதி பதவி விலகியது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

காட்டு யானை என நினைத்து சீதா மீது துப்பாக்கி சூடு நடத்திய வனவிலங்கு அதிகாரி.



மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த 'சீதா' எனும் யானை மீது இன்று (30) அதிகாலை 03.30 மணியளவில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.



காட்டு யானை என நினைத்து வனவிலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாக மஹியங்கனை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.



குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது
காட்டு யானை என நினைத்து சீதா மீது துப்பாக்கி சூடு நடத்திய வனவிலங்கு அதிகாரி. காட்டு யானை என நினைத்து சீதா மீது துப்பாக்கி சூடு நடத்திய வனவிலங்கு அதிகாரி. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

கூரகல, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.



இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட வரும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமனலவௌ மற்றும் கல்தொட்ட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்குவது, செல்ஃபி புகைப்படம் எடுப்பது, நீராடுவது, மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் முற்றாக குறித்த செயற்பாடுகளை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்
கூரகல, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். கூரகல, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு.



பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயமடைந்தனர்.



படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.



இதனால் பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது
பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு. பாகிஸ்தானில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு. Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

அல் குர்ஆன், மனித வாழ்வில் ஒழுக்கத்தையும், அறநெறியையும் கற்பிக்கும் ஒரு புனித நூல்.. இதனை கற்பவர்கள் சமூகத்தில் பெரும் ஆற்றல் மிக்கவர்களாகவும் சிறந்த முறையில் வழிநடத்துபவர்களாகவும் இருப்பார்கள் - இதில் சந்தேகம் இல்லை



ஹஸ்பர்_

சம்மாந்துறை அஹதியா பாடசாலையின் விருது வழங்கும் விழா அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா நிறுவனம், பரிபாலன சபை மற்றும் மஜ்லிஸ் அஸ்-ஷூராவின் ஏற்பாட்டில், அஹதிய்யா பாடசாலைகளின் இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

32 அஹதிய்யா பாடசாலைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஆளுநர், இந்நிகழ்வில் பங்குபற்றியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், அல் குரான் புனித நூலானது வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், அறநெறியையும் கற்பிக்கும் ஒரு புனித நூல் எனவும், இக்கற்கைநெறியை கற்றவர்கள் சமூகத்தில் பெரும் ஆற்றல் மிக்கவர்களாகவும், தமது வாழ்க்கையை சிறந்த முறையில் வழிநடத்துபவர்களாகவும் திகழ்வார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என தெரிவித்தார்.



அல் குர்ஆன், மனித வாழ்வில் ஒழுக்கத்தையும், அறநெறியையும் கற்பிக்கும் ஒரு புனித நூல்.. இதனை கற்பவர்கள் சமூகத்தில் பெரும் ஆற்றல் மிக்கவர்களாகவும் சிறந்த முறையில் வழிநடத்துபவர்களாகவும் இருப்பார்கள் - இதில் சந்தேகம் இல்லை அல் குர்ஆன், மனித வாழ்வில் ஒழுக்கத்தையும், அறநெறியையும் கற்பிக்கும் ஒரு புனித நூல்.. இதனை கற்பவர்கள் சமூகத்தில் பெரும் ஆற்றல் மிக்கவர்களாகவும் சிறந்த முறையில் வழிநடத்துபவர்களாகவும் இருப்பார்கள் - இதில் சந்தேகம் இல்லை Reviewed by Madawala News on September 30, 2023 Rating: 5

கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலின் மீலாதுன் நபி வைபவ பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ்குணவர்த்தன.



(அஷ்ரப் ஏ சமத்)
கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி வைபவம் பள்ளிவாசலின் இனைத் தலைவர் முஸ்லிம் சலாஹூடீன் தலைமையல் நேற்று 28.09.2023 ல் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ்குணவர்த்தன கலந்து கொண்டார்.


இந் நிகழ்வில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாழும் மூவின வறிய 3000 குடும்பங்களுக்கு தலா 3000 ருபா பெறுமதியான 3000 உணவுப்பார்சர்கள் பகிர்ந்தளிக்க்ப்பட்டது.

அத்துடன் பாடசாலை மாணவா்களுக்கு பிரதம மந்திரி தினேஸ்குணவர்த்தனவினால் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு பிரதம மந்திரி உரையாற்றுகையில் .. இன்றைய தினம் நபி முஹம்மத் ஸல்லாஹூ அலைவசல்லம்
அவர்கள் பிறந்த தினத்தில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் வைபவத்தில் கலந்து கொண்டமை பெரிதும் பாக்கியமாக கருதுகின்றேன்.



இப்பள்ளிவாசல் முன்னால் தலைவர் காலம் சென்ற கலீல் ஹாஜியார் . இப் பள்ளிவாசலின் சொத்து பிரச்சினை சம்பந்தமாக என்னை அடிக்கடி சந்தித்து உரையாடியுள்ளார். அப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முயற்சிப்பதாகவும் பிரதமர் கூறினார். பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் பௌசி , யட்மின் குணவர்த்தன (பா.உ) அர்ஹம் உவைஸ், முன்னாள் மலேசியா நாட்டுத் துாதுவர் அன்சார் இப்ராஹிமும் மற்றும் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் நிர்வாக சபை உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.


கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலின் மீலாதுன் நபி வைபவ பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ்குணவர்த்தன. கொள்ளுப்பிட்டி  ஜம்ஆப் பள்ளிவாசலின் மீலாதுன் நபி வைபவ பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ்குணவர்த்தன. Reviewed by Madawala News on September 29, 2023 Rating: 5

மீலாதுன் நபி ஊர்வலத்தை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் ; 52 பேர் பலி



பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது, குறைந்தது 50 பேர் காயமடைந்தனர், இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


“இது ஒரு தற்கொலைத் தாக்குதலாகத் தெரிகிறது” என்று மூத்த உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜாவேத் லெஹ்ரி கூறினார், துணைக் கண்காணிப்பாளர் நவாஸ் கிஷ்கோரியின் வாகனத்தின் அருகே குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டுள்ளார்.


பலுசிஸ்தானில் “பயங்கரவாதிகளால்” நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.


“மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கேவலமான செயல்,” என்று அது நபியின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மீலாதுன் நபி ஊர்வலத்தை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் ; 52 பேர் பலி மீலாதுன் நபி ஊர்வலத்தை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் ; 52 பேர் பலி Reviewed by Madawala News on September 29, 2023 Rating: 5

YMMA ஏற்பாட்டில் மடவளையில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு.



(ஜே.எம். ஹாபீஸ்)
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.அமைப்பின் மடவளைக் கிளை 17 வது வருடமாகவும் ஒழுங்கு செய்த இரத்ததான நிகழ்வு (28ம் திகதி) மடவளை 'சன் சைன்' வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.அமைப்பின் தேசிய தலைவர் இன்சான் ஹமீட், வை.எம்.எம்.ஏ.அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் ரிஸ்மி ஷஹீத்
வை.எம்.எம்.ஏ.அமைப்பின் மடவளைக் கிளைத் தலைவர் றிசாட் லதீப், பொதுச் செயலாளர் A.M. ஹசன் பிராஸ் உற்படப் பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பெருமளவு பெண்கள் உற்பட நூற்றுக் கணக்கானோர் இதில் இரத்ததானம் செய்தனர்.

வைபவத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் காணலாம்.



YMMA ஏற்பாட்டில் மடவளையில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு. YMMA ஏற்பாட்டில்  மடவளையில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு. Reviewed by Madawala News on September 29, 2023 Rating: 5
Powered by Blogger.