தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.. சில மணித்தியாலங்களில் நாடு முழுதும் மின் விநியோகம் ; மின்சார சபை அறிவிப்பு

எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தில்ஷான் மதுஸங்க அதிக விலைக்கு வாங்கப்படலாம் என இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீரின் பார்வை இம்முறை தில்ஷான் மதுஸங்க மீது இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தில்ஷான் மதுஸங்க ஆறு முதல் எட்டு கோடிக்கு ஏலத்தில் விற்கப்படலாம் எனவும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.
ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது ஜனாதிபதியின் திட்டமாகும் - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவிப்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது ஜனாதிபதியின் திட்டமாகும் என பிரதேச அபிவிருத்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் (8) இடம்பெற்றது
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது, நமது நாட்டில் அரச சேவையாளர்கள் அதிக அளவில் உள்ளனர் இவர்களுக்கான செலவினங்கள் வருடாந்தம் பல மில்லியன் ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐ.எம்.எப் அறிக்கையின் பிரகாரம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசனை வழங்கப்படுகிறது எனினும் ஒவ்வொரு ஆண்டும் இருந்த அரசியல் சூழல்கள், நெருக்கடிகளால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. திடீரென அவர்களை இப்போது தூக்க முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும் இதற்காக சுற்றுலா பயணிகளை அதிகளவில் நம் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
2023 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது ஒரு பெரிய அடைவாகும். 2024ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வர வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய எண்ணமமாகும். அண்மையில் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அதில் இலங்கையில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி இலங்கைக்கு இருக்கிறது. இலங்கையினுடைய சுற்றுலா தளங்கள், காலநிலை, இயற்கை போன்ற அம்சங்கள் இதற்கு வழி வகுக்கின்றன. ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்குள் கொண்டு வருவது ஜனாதிபதி அவர்களுடைய எண்ணத்தில் உள்ள விடயமாகும். அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து செல்வதால் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இதற்கு நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாம் ஒழுங்கமைக்கும் போது சில திணைக்களின் பொறுப்பு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை அதனால் தீர்மானங்களையும் பொதுமக்களுக்கான சேவைகளையும் வழங்குவதில் நாம் இழுத்தடிப்பு செய்கின்றோம். எனவே 2024 ல் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டி உள்ளது திணைக்களங்களுடைய பொறுப்புதாரிகள் கட்டாயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் எதிர்கொள்ளும் வீட்டு திட்டம், காணி, குடிநீர், கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், மின்சாரம், வீட்டுதிட்டம், வீதி அபிவிருத்தி, காட்டு யானைகளால் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன அதே நேரம் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளரின் கணக்காளர் றிஸ்வி யஹ்சர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராசா, பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, இவ்வருடம் ஜூலை 1ஆம் திகதி வரையான கடந்த வருடத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 268,920 ஆக குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 275,321 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2020 இல் 03 லட்சத்திற்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6,401 ஆக குறைந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,786 பிறப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் வருடாந்தப் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளது சுகாதார அமைச்சின் அறிக்கைகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு, நாடளாவிய ரீதியில் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.