கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை வாசிக்க நான் ஆர்வம் காட்டவில்லை..
மின் கம்பத்தில் வயர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் திடீரென உயிரிழப்பு
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீன் தோட்ட மேற் பிரிவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிருப்பு வீட்டு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் திடீரென மின் இணைப்பு வயர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுப்பையா சண்முகம் (வயது 58) என்பவர் உயிரிழ்ழுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
சீன் மேல் பிரிவு தோட்டத்தில் மின் இணைப்பு வயர்கள் அடிக்கடி தீப்பிடிப்பதாக தெரிவிக்கும் தோட்ட மக்கள் இத் தோட்டத்தில் தொடர் குடியிருப்புகள் அருகில் காணப்படும் மின் கம்பங்களில் மின் கசிவுகள் மற்றும் இணைப்பு வயர்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை பிராந்திய தொழிநுட்ப அதிகாரிகள் பார்வையிட்டு சீர்த்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (18) பாரிய சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியதோடு இதனால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கட்டடம் ஒன்றில் தீ பரவியதாகவும் பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனையை ஹமாஸ் மூத்த தலைவர்கள் பயன்படுத்துவதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து முக்கியம் வாய்ந்த இந்த சுற்றிவளைப்பை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்துக்குள் படையினர் நுழைந்ததும் சூடு நடத்தப்பட்டதாகவும் அது கூறியது.
இந்த மருத்துவமனையை சூழ டாங்கிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.
போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் இந்த மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் இந்த மருத்துவமனை வளாத்தில் இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு காரணமானது.
தற்போது முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பை கண்டித்திருக்கும் காசாவின் ஹமாஸ் அரச ஊடக அலுவலகம், ‘டாங்கிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதங்களுடன் அல் ஷிபா மருத்துவ வளாகத்திற்குள் ஊடுருவியதாகவும் அங்கு சூடு நடத்தியது ஒரு போர் குற்றமாகும்’ என்றும் தெரிவித்துள்ளது.
இதன்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நடத்திய தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தின் வாயில் பகுதியில் தீ பரவியதால் அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அங்கு சுமார் 30,000 இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலியப் படை விசேட சத்திரசிகிச்சை கட்டிடம் மற்றும் அவசர வரவேற்பு கட்டடத்திற்குள் ஊடுருவி அங்கு நகரும் அனைவர் மீதும் சூடு நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜன்னல் பகுதியை நெருங்கும் அனைவர் மீதும் இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவ குழுக்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வபா குறிப்பிட்டுள்ளது.
இதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவமனைக்கு அருகில் இருப்பவர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது என்று காசா சுகாதார அமைச்சு கூறியது. ‘கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் காரணமாக யாரையும் மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல முடியாதுள்ளது’ என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போருக்கு முன்னர் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்த அல் ஷிபா, வடக்கு காசாவில் பகுதி அளவு மாத்திரம் இயங்கும் ஒரு மருத்துவ பராமரிப்பு நிலையமாக மாறியுள்ளது.
‘திடீரென்று வெடிப்புகள் மற்றும் குண்டு சத்தங்கள் கேட்டதோடு, உடன் டாங்கிகள் வர ஆரம்பித்தன. அவை மேற்குப் பாதையான அல் ஷிபாவை நோக்கி வந்த நிலையில் துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் அதிகரித்தன’ என்று மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டத்தில் இருக்கும் இரு குழந்தைகளின் தந்தையான முஹமது அலி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்நிலையில் காசா நகரில் உள்ள இந்த மருத்துவமனையை சூழ இஸ்ரேல் இராணுவம் புதிய துண்டுப்பிரசுரத்தை வீசியுள்ளது.
‘ரிமாலில் இருப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த அனைவரும் மற்றும் அல் ஷிபா மற்றும் அதற்கு அருகாமையில் இடம்பெயர்ந்திருக்கும் அனைவருக்குமானது: நீங்கள் ஆபத்தான போர் வலயத்தில் உள்ளீர்கள். பயங்கரவாத கட்டமைப்பை அழிப்பதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படை குடியிருப்பு பகுதியில் கடுமையாக செயற்படுகிறது’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரையோர வீதியை பயன்படுத்தி தெற்கு காசாவில் உள்ள அல் மவாசிக்கு செல்லும்படி அந்த அறிவித்தலில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைய முடியாததன் குழப்பம், அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே இந்த மருத்துவமனை மீதான சுற்றிவளைப்பு உள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘பாதுகாப்பு இன்றி இருக்கும் பொதுமக்களை இலக்கு வைப்பதைத் தவிர, எந்த ஒரு இராணுவ அடைவையும் எட்ட முடியாத குழப்பம் மற்றும் அவநம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்’ என்று ஹமாஸ் கூறியது.
அல் ஷிபா மருத்துவமனை மாத்திரம் அன்றி இடம்பெயர்ந்த குடும்பங்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றிலும் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் பலரை கைது செய்ததாக குடியிருப்பாளர்கள் மற்றும் ஹமாஸ் ஊடகம் குறிப்பிட்டது. கடற்கரை அகதி முகாம் ஒன்றின் விளிம்பிலும் டாங்கிகள் செயற்பட்டு அருகில் இருக்கும் சில கட்டடங்கள் மீது செல் குண்டுகளை வீசியதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
13,000 சிறுவர்கள் பலி
காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 116 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தக் காலப்பிரிவில் எட்டு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அது சுட்டிக்காட்டியது.
இதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,726 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,792 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சுமார் 8,000 பேர் காணாமல்போயிருப்பதாக நம்பப்படும் நிலையில் இவர்கள் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொல்லப்பட்ட பலஸ்தீனர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் 13,000க்கும் அதிகமான சிறுவர்களை கொன்றிருப்பதாகவும் மேலும் பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
‘மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம். உலகில் வேறு எந்த மோதலிலும் இந்த அளவு சிறுவர்களின் உயிரிழப்பை நாம் கண்டதில்லை’ என்று யுனிசெப் பணிப்பாளர் நாயகம் கெதரின் ரசல், சி.பி.எஸ். நியுஸ் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஹமாஸுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் தலைவரின் தலைமையில் இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று கட்டார் சென்றிருக்கும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 100 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 40 பேரை விடுவிப்பதற்கு பகரமாக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்டாரில் இருக்கும் ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவை தளமாகக் கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் இருக்கும் சவால்கள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாக இஸ்ரேலிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பும் கடந்த வாரம் போர் நிறுத்த பரிந்துரை ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறு மாதங்களின் பின்னர் டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாய் 300 ஆக பதிவானது ..
ஜூலை 2023க்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை இன்று 299.29. ஆக குறைந்துள்ள நிகையில் , அமெரிக்க டாலரின் விற்பனை விலையும் ரூ. 308.90 ஆக பதிவிவாகியுள்ளது.
சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட.இப்தார் நிகழ்வு ஷங்ரிலா ஹோட்டலில்..
ஆசிரியயை வெட்டிய ஆசிரியை பொலிஸாரால் கைது .
பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் உள்ளது என பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய 45 வயதுடைய ஆசிரியையிடம் இருந்து கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விரு ஆசிரியைகளும் இரு பாடசாலைகளில் பணியாற்றும் நண்பிகள் எனவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தேகநபர் கடந்த 18ஆம் திகதி அவரது வீட்டுக்குச் சென்று இவ்வாறு குற்றம் புரிந்துள்ளதாக அறியமுடிகின்றது.
பிரதேசவாசிகள் சந்தேக நபரை பிடித்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட பிரச்சினையே இந்த குற்றத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2 கோடி பெறுமதியான 200 மதுபான அனுமதிப் பத்திரங்களை அரசு விநியோகிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிக்கொணர்வு.
எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.
தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காக் கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன். இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
உச்சகட்ட நெருக்கடியில் கொழும்பு அரசியல் ! ரனில் பெசில் இடையே மீண்டும் கலந்துரையாடல்..
கொழும்பு அரசியல் நிலமை உச்சகட்ட நெருக்கடியில் இருப்பதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.
ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஜனாதிபதியும் இல்லை பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என பொதுஜனபெரமுன தலைமையும் கோரிவரும் நிலையில் இதுவரை இரு தரப்பும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் ரனில் பெசில் இடையே இடம்பெறவுள்ளதாக கூறப்படும் சந்திப்பின் பின்னர் பொதுஜன பெரமுன எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறியமுடிகிறது.
Jobs 💼 நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் வேலைவாய்ப்பு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது
பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்த தனிமையில் வாழும் பெண் கைது - குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
அத்துடன் குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.
ஏனைய கைதிகள் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட அதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை மட்டும் குழந்தைகளின் வேனில் ஏற்றிச்சென்றது ஏன் ?
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண் கைதிகளின் குழந்தைகளின் நலனுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என யுனிசெஃப் நிபந்தனை விதித்துள்ள போதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் ரம்புக்வெல்லவின் போக்குவரத்துக்கு இந்தப் பேருந்தை பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
ரம்புக்வெல்லவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனையோர் சிறைச்சாலை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ரம்புக்வெல்லவுக்கு ஏன் இவ்வாறான விசேட சலுகை வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்படுகிறது.
கோட்டபாயவின் முன்னாள் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் போதைப்பொருளுடன் கைது.
கண்டி இமாதுதீன் அமைப்பினால் குறுக்குதலை ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடாத்தப்பட்ட ஜனாஸா பயிற்சி நிகழ்வு
முதலில் ஜனாதிபதி தேர்தல் ; ரனில் அமைச்சரவைக்கு அறிவித்தார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ரனில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிவரும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் தராவீஹ் தொழச்சென்ற நேரம்பார்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து 39 இலட்சத்திற்கும் அதிக தங்கநகையை திருடிச்சென்ற 3 பேர் கைது.
நாடு முழுவதும் இரத்தினக்கற்களை கண்டறிய கணக்கெடுப்பு
தங்கும் அறை ஒன்றில் 27 வயது தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 22 வயது இளைஞன் கைது.
அரிசி உருண்டை சாப்பிட்ட 14, 28 மற்றும் 34 வயதுடைய மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்...
ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தார்.
தலசீமியா மேர்ஜர் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் M.R. ஷப்காவுக்காக நிதி உதவி கோரல்
நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்
நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுப்பதால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதுல கருணாநாயக்க கூறினார்.
இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.
குருநாகலில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கொழும்பில் 33.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேவேளை, சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக அவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளை சில வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆலோசனைகளை சில பாடசாலைகள் மீறுவதை ஊடகங்கள் வழியாக தாம் அறிவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2026 முதல் க.பொ.த (சா/த) ஏழு பாடங்கள் மட்டுமே ஏ, பி, சி பாஸ்களுக்குப் பதிலாக ( சராசரி புள்ளி) ஜிபிஏ!
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ) மூலம் உறுதி செய்யப்படும். இதன் அடிப்படியில் எந்த மாணவரும் பரீட்சை தோல்வியடைபவராக கருத்தப்படமாட்டார்.
விஞ்ஞானம், கணிதம், தாய்மொழி, ஆங்கிலம், சமயம் , ஒழுக்கக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கான க.பொ.த. O/L பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டு முதல் நடத்தவுள்ளது.
இந்த திட்டம் 2025 முதல் பாடசாலைகளில் தொடங்கப்படும், இந்த மாற்றத்தின் அடிப்படியில் 2026 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்.
மேலும் ஏ, பி சி பெறுபேறுகளை பதிலாக மாணவர்களுக்கு ஜிபிஏ (சராசரி புள்ளி) வழங்கப்படும் .
இந்த புதிய முறையின்படி, ஒவ்வொரு பரிட்சார்த்தியும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மதிப்பெண்களுடன் தோல்வி மதிப்பெண்கள் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை தொடர முடியும் .
இதன் மூலம் வருடாந்தம் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த உயர்தர கல்விக்கு தகுதி பெற முடியும் என கல்வி மறுசீரமைப்பு நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் .