நாங்களும் கட்டணத்தை குறைக்கிறோம் ; அறிவித்தது முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் .



எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.  


முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.


அதன்படி, இன்றுமுதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 80 என கட்டணம் அறவிடப்படும்.


அதேவேளை, தமது வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றர்களாக உயர்த்தாதது குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மீதான அதிருப்தியையும் சங்கத்தினர் வெளிப்படுத்தினர்.


பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தும் அமைச்சர் மறுமொழி எதுவும் தரவில்லை எனத் தெரிவித்தனர்.


இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி கட்டணமானது முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 120 ஆகவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


 

நாங்களும் கட்டணத்தை குறைக்கிறோம் ; அறிவித்தது முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் . நாங்களும் கட்டணத்தை குறைக்கிறோம் ; அறிவித்தது முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் . Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.



இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.



இது தொடர்பான அறிக்கை இன்று(29) வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

இலங்கையில் போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பு .



கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 67,900 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிக்கிறது என்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.


போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 52% பேர் ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 37% பேர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று NDDCB இன் இயக்குநர் ஜெனரல் பத்ராணி சேனாநாயக்க தெரிவித்தார்.


எட்டு மாத காலப்பகுதியில் மொத்தம் 6,728 நபர்கள் ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


“இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ஆகியவற்றின் கணிசமான அளவு பயன்பாடு மற்றும் பரவல் காணப்படுகிறது . எனினும் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்க போதிய வசதிகள் இல்லாதது வருத்தத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கையில் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் குறைந்தது 100,000 பெரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள்

சுமார் 350,000 இருந்த போதிலும் அவர்களில் 4000 பேர் மட்டுமே சிகிச்சை மற்றும் புனர்வாழ்விற்காக வருகை தருவதாக அவர் மேலும் கூறினார்.


“போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்தினாலும், போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிறுவனங்களில் வசதிகள் போதுமானதாக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பு . இலங்கையில் போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பு . Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

பாரிய அளவிலான பொதி செய்யபப்ட்ட கஞ்சா மீட்பு.

 


இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் - மாரீசன் கூடல் பகுதியில் நேற்றிரவு 150 கிலோ எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.


மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பாரிய அளவிலான பொதி செய்யபப்ட்ட கஞ்சா மீட்பு. பாரிய அளவிலான பொதி செய்யபப்ட்ட கஞ்சா மீட்பு. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது ; அமைச்சர் டக்ளஸ்



 இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 


அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், தெரிவித்தார்.


அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது ; அமைச்சர் டக்ளஸ்  இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது ;  அமைச்சர் டக்ளஸ் Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

சிபட்கோவை அடுத்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவிப்பு.



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.



இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபா



95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபா



அத்தோடு, ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 405 ரூபாவிலிருந்தது 80 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 325 ரூபா



ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாவிலிருந்து 45 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 465 ரூபா



மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிபட்கோவை அடுத்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவிப்பு. சிபட்கோவை அடுத்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவிப்பு. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

பெற்றோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டது.



விலை சூத்திரத்தின் படி
பெற்றோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

பெற்றோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டது. பெற்றோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து 20 பேரை கட்டாய விடுமுறையில் அனுப்பி விட்டோம் : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; அமைச்சர் காஞ்சன



போராட்டம் என்ற பெயரில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சீர்குலைவுகளை ஏற்படுத்த முயன்ற 20 பேர் இருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.



எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



மேலும், தொழிற்சங்க நடவடிக்கை என்ற பெயரில் இவ்வாறு பெற்றோலிய கூட்டுத்தாபன நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் எந்தவொரு கட்சியினராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



இந்த நடவடிக்கையின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பொதுமக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.



எரிபொருள் களஞ்சியம், விநியோகம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதாக அபிவிருத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கை எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து 20 பேரை கட்டாய விடுமுறையில் அனுப்பி விட்டோம் : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; அமைச்சர் காஞ்சன பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து 20 பேரை  கட்டாய விடுமுறையில் அனுப்பி விட்டோம் : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; அமைச்சர் காஞ்சன Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

நீதவானை தகாத வார்த்தைகளால் திட்டிய இரு பெண்கள்.. ( அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான்)



 எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்த்தலத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை அச்சுறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அத்துமீறு உள் நுழைந்து, மேலதிக நீதவானுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டிய  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா பிணையில் விடுதலை செய்துள்ளார்.


குறித்த பெண்ணின் கணவர் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மனைவி வேறொரு பெண்ணுடன் மேலதிக நீதவானின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்திற்கு சென்று தகறாரில் ஈடுபட்ட நிலையில் குறித்த இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் நேற்று (28) ஆஜர் செய்த போது, இது தொடர்பாக சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கும் வரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்

நீதவானை தகாத வார்த்தைகளால் திட்டிய இரு பெண்கள்.. ( அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான்)  நீதவானை தகாத வார்த்தைகளால் திட்டிய இரு பெண்கள்..  ( அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான்) Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது.



 மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புத்தளம் பொலிஸ் பிரிவின்  பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட  முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்களாவர்.


புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட பின் சந்தேக நபர்கள் இருவரும் தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

News souce ; tamil mirror 

மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது. மூன்று  பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவர்  பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

வெயிலுடன் கூடிய காலநிலையில் மாலை வேளையில் மாற்றம்.



சப்ரகமுவ,மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

வெயிலுடன் கூடிய காலநிலையில் மாலை வேளையில் மாற்றம். வெயிலுடன் கூடிய காலநிலையில் மாலை வேளையில் மாற்றம். Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா பணம் வழங்கி வைப்பு.



(அபு அலா)

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.


இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.


சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா பணம் வழங்கி வைப்பு. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா பணம் வழங்கி வைப்பு. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் விபத்தில் பலி.



(எஸ்.அஷ்ரப்கான்)

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின்
அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் விபத்தில் பலி. அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் விபத்தில் பலி. Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

மஹரகம களஞ்சியத்தில் இருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயம்... கண்டுபிடிக்க 17 பேர் கொண்ட குழு நியமனம்.



மஹரகம களஞ்சியத்தில் கடந்த வருடம் சேமித்து வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வருட இறுதி வரையான காலப்பகுதியில் இந்த எரிபொருள் மாயமாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு இலட்சத்து எழுபது இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.



வருட இறுதிக் கணக்கீட்டின் போது இது தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக, போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) மங்கள ஜயதிலக்க, கணக்காளர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்
மஹரகம களஞ்சியத்தில் இருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயம்... கண்டுபிடிக்க 17 பேர் கொண்ட குழு நியமனம். மஹரகம களஞ்சியத்தில் இருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயம்... கண்டுபிடிக்க 17 பேர் கொண்ட குழு நியமனம். Reviewed by Madawala News on March 29, 2023 Rating: 5

எரிபொருள் தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் ; அமைச்சர் காஞ்சன



போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாலும் விநியோகம் தொடரும் என்பதாலும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
எரிபொருள் தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் ; அமைச்சர் காஞ்சன எரிபொருள் தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் ; அமைச்சர் காஞ்சன Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 90% மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன.



கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 90% மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன. கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 90% மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

புனித நோன்பு காலத்தில் சம்ஸா, பெட்டிஸ், றோல்ஸ், கட்லட், மரக்கறி றொட்டி ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையாக 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய தீர்மானம்.



40/= ரூபாய்க்கு சிற்றுண்டி விற்பனை செய்யப்பட வேண்டும் : சம்மாந்துறையில் தீர்மானம்

சம்மாந்துறையில் புனித நோன்பு காலத்தில் சிற்றூண்டிகளின் விலை மற்றும் உணவுகளின் தரம், பாதுகாப்பு தொடர்பாக தேனீர்சாலை உரிமையாளர்களுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.


அதிகமதிகம் நன்மைகளை சேகரிக்க வேண்டிய இந்த மாதத்தில் நியாயமான விலைகளில் சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் தயாரித்த உணவுகளை மக்களுக்கு வழங்க உணவகங்கள் முன்வர வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்கள் தேனீர்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.


இதன்போது தேனீர்சாலை உரிமையாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் பின்னர் தரமான உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும் சம்ஸா, பெட்டிஸ், றோல்ஸ், கட்லட், ஜம்பர், மரக்கறி றொட்டி ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையாக ரூபாய் 40 (நாற்பது) வாக விற்பனை செய்வதுடன் இருப்பினும் முட்டை உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுடன், சிற்றுண்டிச்சாலைகளில் குறித்த உணவுப் பொருட்களின் விலை பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே.றம்சின் காரியப்பர், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரனை அதிகாரி ஏ.ஏ.அஹம்மட் சர்பான், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் பீ.வரதராஜன், மாவட்ட மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், சம்மாந்துறை பிரதேச செயலக கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.தாஸிம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சம்மாந்துறை வர்த்தக மற்றும் தொழில்கள் சம்மேளனம் தலைவர் ஏ.ஹக்கீம், செயலாளர் எம்.எச்.எம்.ஹாரிஸ், சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் செயலாளர் டி.எல்.கபீர், தேனீர்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புனித நோன்பு காலத்தில் சம்ஸா, பெட்டிஸ், றோல்ஸ், கட்லட், மரக்கறி றொட்டி ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையாக 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய தீர்மானம். புனித நோன்பு காலத்தில் சம்ஸா, பெட்டிஸ், றோல்ஸ், கட்லட், மரக்கறி றொட்டி ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையாக 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய தீர்மானம். Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்.



கனிய எண்ணெய் இறக்குமதி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோக அதிகாரத்தை இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியமை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பல தொழிற்சங்கங்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தம் காரணமாக எரிபொருள் கொள்கலன்களுக்கு எரிபொருள் ஏற்றுவதும் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பல பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல். மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல். Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியது.



பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை சுற்றிவளைத்ததாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் இருவருடன் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 33,750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட், மூன்று கோடா பீப்பாய்கள், எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டர் மற்றும் வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


பண்டாரகம, ஹொரணை, பாணந்துறை, கஹதுடுவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பல்வேறு நபர்கள் ஊடாக சில காலமாக சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானம் விநியோகிக்கப் பட்டுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியது. சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியது. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

இந்த வருடம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்...



Ø  இந்த வருடம்  ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்...


Ø  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்…


Ø  நகரத்தை அழகுபடுத்துவது சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துவதோடு, நகரத்தில் வசிக்கும் மக்களின் தூய்மையைப் பாதுகாப்பதற்கும் தொற்று நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு காரணமாகும்.


                                     - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் இணைந்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இந்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இந்த திட்டத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார்.


ஒழுங்கமைக்கப்படாத நகர அபிவிருத்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது. எனவே, நாட்டின் அனைத்து நகரங்களையும் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாரிய பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  இங்கு வலியுறுத்தினார்.


வளர்ந்து வரும் நாட்டை நூறு நகரங்களை அழகுபடுத்தல் திட்டம் - 2021/2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அதிகாரிகளை மதிப்பீடு செய்து வெற்றி பெற்ற நகர  திட்டங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இன்று (28) கலந்து கொண்ட போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணையின் பிரகாரம், நாடு முழுவதும் குறைந்த வசதிகளைக் கொண்ட 100 நகரங்களை இனங்கண்டு அவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அவற்றை அழகுபடுத்துவதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் 2020ஆம் ஆண்டு இந்த நூறு நகர அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது..


அதன்படி, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 116 சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த நூறு நகரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி 20 மில்லியன் ரூபா ஒரு நகரின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட்டது.


பணிகள் நிறைவடைந்த 116 நகரங்களில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான நடைபாதைகள், திறந்தவெளிப் பகுதிகளில் வடிகால் வசதிகள், பயணிகள் தங்குமிடங்கள், சுகாதார வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


இந்த 100 நகர அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய நகர அபிவிருத்தித் திட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட நகர அபிவிருத்தித் திட்டமும், மூன்றாம் இடத்தை களுத்துறை மாவட்டத்தின் மொரகஹஹேன நகர அபிவிருத்தித் திட்டமும் பெற்றன.


மேலும் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது:


நகர அபிவிருத்தி ஒரு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க முடியும். நகரங்களை ஏன் அழகுபடுத்துகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அந்தப் பணத்தில் இன்னும் பயனுள்ள ஒன்றைச் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நகரத்தை அழகுபடுத்துவதால் சுற்றுலா ஈர்ப்பு மேம்படுவதைப் போல, நகரத்தில் வசிக்கும் மக்களின் தூய்மை மற்றும் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்தல் போன்றனவும், நகர வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டு நகரத்தை அழகுபடுத்துகிறது.


மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், கொழும்பு ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் மற்றும் கவர்ச்சிகரமான நகரமாக மாறியது. ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்த அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தியதால் கொழும்பு நகரம் நரகமாக மாறியது.


கடந்த காலங்களில் உலகளாவிய கொரோனா தொற்றுநோய் நிலைமை மற்றும் நமது நாடு எதிர்கொண்ட மோசமான பொருளாதார நிலைமை காரணமாக, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறிது காலத்திற்கு நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நாம் ஒரு நாடாக வலுவடைந்து வருகிறோம். எனவே, நாட்டில் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார நிலையைச் சிறப்பாக நிர்வகித்து, மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாமல், மக்களுக்குப் பயனளிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.


இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஸ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட மற்றும் வலய பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


 

இந்த வருடம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்...  இந்த வருடம்  ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்... Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

சைக்கிளில் பயணித்த இளைஞன் வேன் ஒன்றில் மோதி உயிரிழப்பு... காத்தான்குடி பொலிஸார் விசாரணை.



 கல்முனை - மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கல்முனை - மட்டக்களப்பு வீதியில் நாவக்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சைக்கிள் வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.


விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


சுங்கவில, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

( பொலன்னருவ சுங்காவில்லை பிறப்பிடமாக கொண்ட சகோதரர் அன்பாஸ் வயது 17 காத்தான்குடியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வந்த wp PG-6795 இலக்கத்துடைய வேன் ஒன்று மோதியதில் உயிரிழந்தார் குறிப்பிட்ட வாகனம் தப்பிச்சென்று விட்டது .. அந்த வேனை காத்தான்குடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்) 

விபத்தை ஏற்படுத்திய வேன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சைக்கிளில் பயணித்த இளைஞன் வேன் ஒன்றில் மோதி உயிரிழப்பு... காத்தான்குடி பொலிஸார் விசாரணை. சைக்கிளில் பயணித்த இளைஞன் வேன் ஒன்றில் மோதி உயிரிழப்பு...  காத்தான்குடி பொலிஸார்  விசாரணை. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும், குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும்.



 இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும், குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


குருநாகல் மாவட்டத்தில் வார இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய விஜேவர்தன, அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கை தற்போது 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


சில மாதங்களுக்கு முன்னர் உலகில் மூன்றாவது அதிக பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. ஆனால் இன்று அது தரவரிசையில் 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


இலங்கையை மிகக் குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார் என்றார்.


இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது.


இந்தநிலையில், எரிபொருள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதால், வருட இறுதிக்குள் மக்கள் சில சலுகைகளை அனுபவிக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும், குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும். இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும், குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும். Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை 5 சதவீதத்தால் குறைக்கப்படுகிறது.





 இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை களஞ்சியத்தில் உள்ளமையினால் ஐந்து வீதம் மாத்திரமே விலைக்குறைப்பு செய்ய முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளது.


எனினும் தற்போது டொலருக்க நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளமையினால் தற்காலிகமாக ஐந்து சதவீதத்தினால் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் மூன்று மாதங்களில் 15 சதவீதமாக விலையினை குறைக்க முடியும் எனவும் டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை 5 சதவீதத்தால் குறைக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை 5 சதவீதத்தால் குறைக்கப்படுகிறது. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

யாரும் இல்லாத மூடிய வீட்டில் 2 கோடி மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை என செல்வந்தர் ஒருவர் பொலிசில் முறைப்பாடு.



 வாத்துவ சுற்றுலா விடுதி உரிமையாளரும் செல்வந்த தொழிலதிபருமான ஒருவரின் பன்னிபிட்டிய தென்னந்தோப்பில் மூடியிருந்த வீட்டிற்குள் நுழைந்த ஒரு குழுவினர் அறையினுள் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் வெளிநாட்டு மதுபானங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று தமக்குக் கிடைத்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   


கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களில் தங்க சங்கிலிகள், வளையல்கள், கைச்சங்கிலிகள் ,பெறுமதியான கைக்கடிகாரம் உட்பட திருடப்பட்ட தங்கப் பொருட்கள் 102 பவுண்கள் எடையுள்ளவை எனவும் , 300 அமெரிக்க டொலர் பெறுமதியான 40 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்களும்  திருடப்பட்டுள்ளதாக வர்த்தகர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த வர்த்தகர் நுகேகொடையிலுள்ள வீட்டில் தங்கியிருந்ததாகவும் பன்னிப்பிட்டியவிலுள்ள இல்லம் 2 மாதங்களாக மூடியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த பன்னிபிடிய வீட்டின் பிரதான நுழைவாயிலின் திறப்பு உரிமையாளரான வர்த்தகரிடமும் பிற திறப்புகள் இரண்டு வீட்டுப் பணியாளரிடம் இருந்ததாகவும், அந்த பணியாளர் 13 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை வீட்டில் தங்கியிருந்து வீட்டு புற பகுதிகளை சுத்தம் செய்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகிறது.  


யாரும் இல்லாத மூடிய வீட்டில் இவ்வளவு தங்க நகைகளும் வெளிநாட்டு மதுப் போத்தல்களும் இருந்ததாக வர்த்தகர் அளித்த முறைப்பாட்டில் சந்தேகம் இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாரும் இல்லாத மூடிய வீட்டில் 2 கோடி மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை என செல்வந்தர் ஒருவர் பொலிசில் முறைப்பாடு. யாரும் இல்லாத மூடிய வீட்டில் 2 கோடி மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை என செல்வந்தர் ஒருவர் பொலிசில் முறைப்பாடு. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5

நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை... சில இடங்களில் பிற்பகல் / இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு.



நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை காணப்பட்டு வரும் நிலையில்,

 சப்ரகமுவ,மேல்,வடமேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா,  காலி, மாத்தறை மற்றும் மன்னார்  மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


மன்னார் தொடக்கம்  புத்தளம், கொழும்பு, காலி  ஊடாக மாத்தறை  வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை... சில இடங்களில் பிற்பகல் / இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு.   நாட்டின் பல பகுதிகளிலும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை...  சில இடங்களில்  பிற்பகல் / இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5
Powered by Blogger.