மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% ஆக (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக) அதிகரித்தது.



கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,483 மில்லியன் (3.5 பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்கும்.
மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% ஆக (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக) அதிகரித்தது. மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% ஆக (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக) அதிகரித்தது. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய்.... கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.



(ஏயெஸ் மெளலானா)

நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 08 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக மாடு அறுப்பது தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சில மாடுகள் கல்முனை பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது ஏனைய மாடுகளுக்கு விரைவாக பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதனாலும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி மக்களின் நுகர்வுக்கு உகந்ததல்ல என்றும் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் குறித்த காலப்பகுதியில் மாடு அறுத்தல், மாட்டிறைச்சியை விற்பனை செய்தல் மற்றும் மாட்டிறைச்சிறைச்சியை பொதி செய்தல் என்பா தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தடை உத்தரவை மீறி செயற்படுகின்ற மாட்டிறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய்.... கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய்....  கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவாலேயே ஏற்படுகிறது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர்



எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவால் ஏற்படுவதாகும். டெங்கு பரவுவதைத் தடைசெய்வதற்காக சகல பிரஜைகளும் இவ்வாரத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் பொறியியளாலர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றாடல் தினத்துக்கு சமமாக சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்துகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கடந்தவாரம் சுற்றாடலில் ஆதிக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பாக மக்களின் அவதானத்தை ஈர்க்கச் செய்யும் முகமாக மரநடு தினம், காற்று மாசடைவதற்கான காரணிகளை குறைக்கும் தினம், சுற்றுப்புர சூழலை சுத்தமாக்கும் தினம், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் தினம், நீர் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாக்கும் தினம், நிலைபேறான காணி முகாமைப்படுத்தல் தினம் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் முகாமைப்படுத்தல் தினம் முதலான தினங்களைப் பிறகடனப்படுத்தி அதற்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தியுள்ளது.

மேலும் எமது நாட்டில் பாரிய உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய டெங்கு நோயை முற்றாக அழிக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் நடிவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 1972ஆம் ஆண்டு முதல் உலகின் எல்லா நாடுகளிலும் சுற்றாடல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் நடத்தி வருவது விஷேட அம்சமாகும்.

அன்று முதல் கடந்த 5 தசாப்த காலங்களுக்கு மேலாக நடைமுறையில் ஏற்படக்கூய பல்வேறு பிரச்சனைகளைத் திர்க்கும் வகையில் சுற்றாடல் தினத்தை உலகமக்கள் அனுஷ்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டமானது இவ்வருடத்தை பிலாஸ்டிக் மாசுபடுவதனை வெற்றிகொள்வோம் என்பதாகும்.

அதற்கமைவாக எமது நாட்டிலும் எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் முதல் அவற்றை பயன்படுத்துபவர்கள் வரை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

மேலும் சுற்றாடலுக்குத் தீங்கு விழைவிக்காத உற்பத்திகளை ஊக்குவித்தல தவறான பயன்படுத்தல் முறைகளைக் கட்டுப்படுத்தல், முறையான அப்புறப்படுத்தல், சுழற்சி முறையில் மீள் உற்பத்திக்கு ஊக்குவித்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் அறிவூட்டுவது அவசியம் என உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவாலேயே ஏற்படுகிறது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர் எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவாலேயே ஏற்படுகிறது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர் Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

கொழும்பில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வந்து நூதனமாக கொள்ளையில் ஈடுபடும் கும்பல் சிக்கியது..



 கொழும்பில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பேருந்துகளில் மாறுவேடத்தில் பயணித்து கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடும் குறித்த நபர் 5200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்து லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இருபது கைத்தொலைபேசிகள் திருடப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


பேரூந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போவது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிலியந்தலை பொலிஸ் குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தினேஷ் ஹெட்டியாராச்சி கடந்த 6 மாதங்களாக அவதானம் செலுத்தியுள்ளார்.


சந்தேகநபரின் உருவம் அடங்கிய சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட பொலிஸார் பிலியந்தலை மிரிஸ்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தோற்றம் கொண்ட ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.


வாதுவ பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிலியந்தலை பிரதேசத்திற்கு வந்தமை தொடர்பில் தெளிவான தகவல்களை வெளியிட தவறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் அந்த நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சந்தேகநபரால் திருடப்பட்ட பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கல்கிசை மற்றும் புறக்கோட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வந்து நூதனமாக கொள்ளையில் ஈடுபடும் கும்பல் சிக்கியது.. கொழும்பில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்  வந்து நூதனமாக கொள்ளையில் ஈடுபடும் கும்பல் சிக்கியது.. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

ரோந்து சென்ற பொலீஸாரின் ஜீப் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது... காயமடைந்த மூவரை மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர்.



 ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் நிலையத்​தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியில், வெஞ்சர் தேயிலைத்தொழிற்சாலைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டுகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்ஜோன்டிலரி தோட்டத்தில் இருந்து நியூவெளி​யை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


காயமடைந்த பொலிஸாரை அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ரோந்து சென்ற பொலீஸாரின் ஜீப் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது... காயமடைந்த மூவரை மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர்.  ரோந்து சென்ற பொலீஸாரின் ஜீப் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது...  காயமடைந்த மூவரை மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர். Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய தேவையில்லை.



 பாறுக் ஷிஹான்

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்   றயீஸ் தெரிவித்தார்.


 அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் மற்றும் இறைச்சி பாவினை சம்பந்தமாகவும் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


மாடுகள் அறுக்கின்ற போது   பிரதேச சபை   கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை   சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் 

அக்கறையுடன் செயற்படுவதனால்  மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை.இதே வேளை உத்தியோகபூர்வமற்ற ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் அவைகள் ஏனைய நாடுகளில் பிரதேசங்களில் நடந்தவற்றை திரிவு படுத்தி  வருகின்றன.ஆனால் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுக்கப்படுகின்ற மாட்டு இறைச்சியை நுகர்வதனால் எவ்வித நோய்களும் ஏற்பட போவதில்லை.மாடுகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோயினை மையமாக கொண்டு பொதுமக்கள்  பீதி அடைந்துள்ளனர்.நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்விடயத்தை மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக விலங்கறுமனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை  கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றது .


அதுமாத்திரமன்றி நிந்நவூர் பகுதியில் உள்ள வளர்ப்பு மாடுகள் கூட எவ்வாறான நிலைமைகளில் உள்ளது என்பதை கண்டறிவதற்கும் ஆராயப்படுகின்றது.இவ்வாறான மாடுகளில் நோய் நிலைமையில் உள்ள மாடுகள் இனங்காணப்பட்டிருக்கின்றது.அவ்வாறு இனங்காணப்பட்ட மாடுகள் வேறாக்கி அவற்றை அறுக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.அதனை நாம் கண்காணித்து கொண்டு இருக்கின்றோம்.அத்துடன் விலங்கறுமனைகள் கூட பிரதேச சபையின் பங்களிப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.அது முறையாக பராமரிக்க படுகின்றது.


அதே போன்று எமது பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் மாடுகள் அறுக்க படுவதற்கு முன்னர் அங்கு சென்று கண்காணிக்கின்றார்கள்.அது மாத்திரமன்றி அன்றைய நாள் அறுபட தயாராக இருக்கின்ற மாடுகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றது.இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடுகள்  உட்பட  இறைச்சிக்கடை உரிமையாளர் ஆகியொரை  பரிசோதனை மேற்கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர்  புகைப்படம்  எடுத்து  சுகாதார வைத்திய அதிகாரியாகிய எனக்கும் நிறுவன தொலைபேசிக்கும் அனுப்பி வைக்கின்றார்.இவ்வாறான கடும் நிபந்தனைக்கு பின்னர் தான் இந்த மாடு அறுக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.மேலும் மாடு அறுக்கப்பட்ட பின்னரும்  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோக பூர்வ முத்திரையை மாட்டின் ஒரு பகுதியில்  பதிவு செய்கின்றோம்.


அது மாத்திரமன்றி  நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள சகல இறைச்சி கடைகளுக்கும் நாமும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் கள விஜயம் செய்து ஆராய்கின்றோம்.இந்த  ஆராய்வின் போது எமது முத்திரை பொறிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இறைச்சிகளை மனித நுகர்விற்கு பொருத்தமற்றது என கூறி அந்த இடத்தில் அழிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.இச்செயற்பாடு நாளாந்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.விலங்கறுமனையில்  மாடுகள்  அறுக்கப்படாமல் தனியார் வளவு வெளிஇடங்களில் அறுக்கப்பட்டு இறைச்சி கடைகளில் விற்பனை  செய்யப்படுமாயின் அந்த இறைச்சியில் எமது முத்திரை பொறிக்கப்பட்டிருக்காது.அவ்வாறான இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறான இறைச்சிகளை விற்பதற்கு அனுமதி நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்.


இந்த விடயத்தில் பொதுமக்களாகிய நீங்கள் பீதி அடைய வேண்டிய ஒரு காரணமும்  கிடையாது.ஏனெனில் இது ஒரு வைரஸ் நோய்.இந்நோய் எல்லா மாடுகளுக்கும் பரவுவதில்லை.குறிப்பிட்ட மாடுகளுக்கு தான் பரவி இரக்கின்றது.அந்த குறிப்பிட்ட மாடுகளை வேறாக்கி வைத்துள்ளோம்.அவற்றை நாளாந்தம் உன்னிப்பாக பார்வையிடுகின்றோம்.அந்த மாடுகள் அறுக்கப்படும் எந்த ஒரு வாய்ப்பினையும் நாம் விட்டு வைக்கவில்லை.அந்த மாடுகள் வேறாக வைத்து  கண்காணிக்கப்படுகின்றது.அந்த வகையில் நோய்கள் அற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றது.


அதுவும் விலங்கறுமனையில் மாத்திரம் தான் மாடுகள் யாவும் அறுக்கப்படுகின்றது.விலங்கறுமனைக்கு வெளியில் மாடுகளை அறுப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்படுமிடத்து பொதுமக்களாகிய நீங்கள் எமக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகள் வருகை தந்து சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளிக்கின்றேன்.பொதுமக்களாகிய நீங்கள் இறைச்சி சாப்பிட அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டார்.



இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில்  நிந்தவூர்  பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன்,  நிந்தவூர்  பிரதேச அரச  கால்நடை வைத்திய அதிகாரி கதீஸ்வரன்,   நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய தேவையில்லை. மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

சினம்கொண்ட சிங்கம் .... 🇱🇰 மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது.



ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை, சூாியவெவ மைதானத்தில் இடம்பெற்றது .


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.


ஆப்கானிஸ்தான் அணி சாா்பில் மொஹமட் நபி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா்.


பந்துவீச்சில் இலங்கை அணியின் துக்ஷ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினா்.


இந்த ஒருநாள் கிாிக்கெட் தொடாில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.


எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்த நிலையில் ,

பதிலுக்கு துடுப்ப்டுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கட் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியை பெற்றது.


சினம்கொண்ட சிங்கம் .... 🇱🇰 மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது. சினம்கொண்ட சிங்கம் .... 🇱🇰  மூன்றாவது  ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஹரீஸ் எம்.பி, கலீல் ரஹ்மான் ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்



நூருல் ஹுதா உமர்

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக நீதிமன்றம் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு நீதிபதிகள் குழாமினால் விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றுக்கு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற குழாமுக்கு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கடந்த தவணையில் கோரிக்கை விடுத்திருந்த போது வழக்காளியான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த கோரிக்கைக்கு எதிராக தனது கடுமையான ஆட்சபனையை அன்று வெளியிட்டார். அத்துடன் இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்க கூடாது என்றும் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதத்தில் நீதிமன்றுக்கு கடந்த தவணையில் போது முன்வைத்தார்.

எதிர்தரப்பினரிடமும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் இந்த இடையீட்டு மனு தொடர்பில் வினவிய நீதிபதிகள் குழாம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினது ஆட்சபனையை வழங்க ஒரு வார கால அவகாசமும் இடையீட்டு மனுதாரர்களின் ஆட்சபனைக்கான பதிலை நீதிமன்றுக்கு வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில் இன்று இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதிட்டனர். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரியியிருந்த இடைக்கால தீர்வுக்கும் தமது ஆட்சபனைகளை அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுவிடயமாக எழுத்துமூல ஆட்சபனை அறிக்கையை வழங்க இடையீட்டு மனுதாரர்களுக்கு ஒருவாரமும் அந்த அறிக்கைக்கு பதிலறிக்கை வழங்க கலையரசன் எம்.பி சார்பிலான சட்டத்தரணிகளுக்கு ஒருவார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த தவணை ஜூலை 12 இல் நடைபெறவுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் பலத்த வாதபிரதி வாதங்கள் சில தினங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர் பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஹரீஸ் எம்.பி, கலீல் ரஹ்மான் ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றுக்கொண்டது நீதிமன்றம் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஹரீஸ் எம்.பி, கலீல் ரஹ்மான் ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றுக்கொண்டது நீதிமன்றம் Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

துபாயில் இருந்து இலங்கை திரும்பிய தாய் மற்றும் மகளுக்கு குரங்கு காய்ச்சல்.



 வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்களுக்கு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கருத்துப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இருந்து நாடு திரும்பிய தாயும் அவரது குழந்தையும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடத்தப்பட்ட சோதனையில் குரங்கு காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தொற்றுநோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2022 நவம்பரில் இலங்கை தமது முதல் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்களை உறுதிப்படுத்தியது.

துபாயில் இருந்து இலங்கை திரும்பிய தாய் மற்றும் மகளுக்கு குரங்கு காய்ச்சல்.  துபாயில் இருந்து இலங்கை  திரும்பிய  தாய் மற்றும் மகளுக்கு குரங்கு காய்ச்சல். Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

இலங்கை வங்கிக்குள் புகுந்த நாகப்பாம்பு ... பாம்பை வெளியேற்ற கடும் போராட்டம் .



 திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் வங்கி பூட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது. இதை அடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினார்.


பின்பு வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்தும் பயனளிக்காத நிலையில், பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்தும் அவர்களால் அதனை பிடிக்கும் முயற்சி கைகொடுக்காத போதும் இரவு 9 மணி வரை 5 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பாம்பை பிடித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


இலங்கை வங்கிக்குள் புகுந்த நாகப்பாம்பு ... பாம்பை வெளியேற்ற கடும் போராட்டம் . இலங்கை வங்கிக்குள் புகுந்த நாகப்பாம்பு ...  பாம்பை வெளியேற்ற கடும் போராட்டம் . Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி... நடைபெறும் சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்ற முடியாத நிலைமையும் ஏற்பட்டது



 வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி... நடைபெறும் சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்ற முடியாத நிலைமையும் ஏற்பட்டது மாணவியை  துஷ்பிரயோகம் செய்ய முயற்சி... நடைபெறும் சாதாரணத் தரப்பரீட்சையில்  தோற்ற முடியாத நிலைமையும்  ஏற்பட்டது Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் 100 mm வரையிலான மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு.



மத்திய,  சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.


சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்    காலி, மாத்தறை மற்றும்  களுத்துறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  100 mm வரையிலான  ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் .


ஊவா மாகாணத்தின்  பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும்  மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km  வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  


கடல் பிராந்தியங்களில் 

****************************

அரபிக்கடலில் தாழ் அமுக்கம் ஒன்று சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு வங்காளதேஷ் அரசினால் முன் மொழியப்பட்ட "விபர்ஜோய் " எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இக் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 75 - 80 km இலும் கூடிய வேகத்தில் காற்று வீசுவதுடன் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும்  காணப்படும். இதேவேளை இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். 


ஆகையினால் மீனவர்கள், கடல் சார்ஊழியர்கள் மற்றும் நீண்ட நாட்களுக்கு கடலுக்கு செல்லும் மீனவர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.  


புத்தளம்   தொடக்கம் கொழும்பு,  காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


புத்தளம்  தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக்  காணப்படும். 


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாக் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் 100 mm வரையிலான மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு. இன்று நாட்டின் சில பிரதேசங்களில் 100 mm வரையிலான  மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

ஹெல்மட் அணியாமல் செல்வோரை ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அவதானித்து சட்ட நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்.



மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக டீ சில்வா (வடமேற்கு) தெரிவித்தார்.


புத்தளம் நகரத்தில் கள மேற்பார்வையை மேற்கொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இத்திட்டம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது;

 இதற்கமைய மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணியாமல் செல்வோர், மூன்று பேரை ஏற்றிச் செல்வோர், சட்டத்துக்கு முரணாக வாகனத்தை செலுத்துவோர் போன்றோரின் படத்தை, நாலக டி சில்வாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘வாட்ஸ்ஆப்’  குழுமத்தில் பதிவேற்றப்படும்.


 அப்படத்தில் காணப்படும் வாகனத்துக்கு (வாகன இலக்கம் உரியமையாளருக்கு) எதிராக, பொலிஸ் வாகன போக்குவரத்துப் பிரிவால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களின் ஒத்துழைப்புடன் முறைகேடாக வாகனம் ஓட்டுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் வாகன, வீதி விபத்துகளை தவிர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மட் அணியாமல் செல்வோரை ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அவதானித்து சட்ட நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம். ஹெல்மட்  அணியாமல் செல்வோரை ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அவதானித்து சட்ட நடவடிக்கை -  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம். Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிலர் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போகிறார்கலாம் - இவர்களை மக்களே விரட்டியடிப்பர் ; ரோஹித



ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போவதாக கூறியுள்ள சிலருக்கு நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றும் அவர்களை, மக்களே விரட்டியடிப்பார்கள் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சிவில் விமான சேவை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “மக்கள் கஷ்டத்தில் இருக்க வேண்டும். எரிபொருளுக்கான, எரிவாயுக்கான, பால்மாவுக்கான வரிசைகளில் மக்கள் நாள்கணக்காக காத்திருக்க வேண்டும். அப்படியானால்தான் தமது விருப்பத்துக்கேற்ப நாட்டை வைத்திருக்க முடியும் என சிலர் நினைக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் தான் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக சிலர் கூறியுள்ளனர். இவர்களுக்கு நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை. இந்த நிலைமையை கெடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால்தான் வீதிக்கிறங்கி சுற்றி வளைக்கப் போ கின்றனராம். 


ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக கூறியுள்ளவர்களை இராணுவமோ பொலிஸாரோ விரட்டத்தேவையில்லை. மக்களே விரட்டியடிப்பார்கள் .


நோயாளி ஒருவருக்கு ஏற்றப்பட்டுள்ள ‘சேலைன் ‘ போத்தலை பிடுங்கி எறிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது செய்ய முயன்றால் மக்களுக்கு கோபம் வரும். அவர்களை விரட்டியடிப்பார்கள். அதேவேளை சில நோய்களை குணமாக்க சில சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இவ்வாறான நோய்கள் உள்ளவர்களை குணமாக்க அந்த சிகிச்சை ஜனாதிபதி கையில் எடுக்க வேண்டும் .அதுதான் நோயைக் குணமாக்க ஒரே வழி” என தெரிவித்தார்.

நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிலர் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போகிறார்கலாம் - இவர்களை மக்களே விரட்டியடிப்பர் ; ரோஹித நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிலர் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போகிறார்கலாம் - இவர்களை மக்களே விரட்டியடிப்பர் ; ரோஹித Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!



ஹஸ்பர்_

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(06) கொழும்பில் இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின்  நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  கோரிக்கை முன்வைத்துள்ளார்.


ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ளார்.

வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!  வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின்  நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்! Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

ஹஜ் கடமை : தவறான புரிதல்கள்!



ஸகாத் வாஜிப் ஆகாதவர்களுக்கு ஹஜ் கடமையில்லை, அதனால் தான் அதனை இறுதிக் கடமை என்கிறோம்!


குடும்பத்தின், தங்கியிருப்போரின் அடிப்படைத் தேவைகளுக்கான வருவாய் மூலங்களை முதலீடுகளை ஹஜ்ஜுக்காக செலவிட  முடியாது, கூடாது..!


ஹஜ் கடமையை முந்திய பொறுப்புக்களும் கடமைகளும் அல்லாஹ்விற்கான கடமைகள் தான்!


குடும்ப உறுப்பினர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பின் அவர்கள் மீதான செலவுகளும் தமக்கு கீழிருப்போர் மீதான செலவுகளாகும்!


வருடா வருடம் ஹஜ் செய்யும் வழக்கமுடைய அதிகமானோர் பல குடும்ப சமூகப் பொறுப்புக்களை மறந்து விடுகின்றனர்.


அதே போன்றே அதிகமான உம்ராக்களை செய்வோரும் மேற்படி முன்னுரிமைகளை கடமைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்!


ஹஜ் கடமையானவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தாலும் மக்கா மதீனா மற்றும் மினா அரபா முஸ்தலிபா இடவசதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு ஒவ்வொரு நாட்டிற்கும் தரப்படும் கோட்டாவும் மார்க்க அடிப்படைகளை கொண்டவை!


ஹஜ் உம்ரா செய்ய வசதியற்றவர்களுக்கு பூரணமாக அவற்றை நிறைவேற்றிய இம்மை மறுமை பேறுகளை ஈட்டித் தரும் நற்கருமங்கள் பற்றி உலமாக்கள் சொல்லித்தர வேண்டும்!

ஒருவரிடம் ஒரு வீடு இருக்கிறது, ஒரு கடை இருக்கிறது, அல்லது அன்றாட செலவுகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு தொழிற்சாலை மற்றும் உபகரணங்கள் இருக்கின்றன,  அவை சிறுகச் சிறுகச் சேர்த்த அவரது உழைப்பின் பிரதிபலன்கள், சில சந்தர்ப்பங்களில் அவரது வருவாய் மூலங்கள் ஸகாத் கொடுக்கும் நிஸாபை எட்டி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஸகாத் கொடுத்தும் கொடுக்காதும் இருந்திருக்கலாம்!


வீடு அவரது குடும்பத்திற்கு வாழ்வதற்கு போதுமான சாதாரண வீடு ஆகும், வியாபாரம், விவசாயம், காலநடை வளர்ப்பு, கைத்தொழில் அவரது அன்றாட அடிப்படைச் செலவுகள் மற்றும் கடமைகள் பொறுப்புக்களை நிறைவேற்றப் போதுமானவை!


இவரது நிரந்தர வருமானம் அன்றாட செலவுகளுக்கும், கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் போதுமானதாக இருந்து மேலதிக வருவாய், சேமிப்பு இருப்பின் அவற்றிற்கு ஸகாத்தும் கொடுத்து தூய்மைப்படுத்தப் பட்ட செல்வம் ஆயின் அவருக்கு ஹஜ் கடமையாகிறது.


மக்காவில் அல்லது ஸவூதியில் வசிப்பவர்களாயின் ஸகாத் நிஸாபை அடையாத போதும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஹஜ் செய்வார்கள், ஆனால் தொழிலுக்காக அங்கு இருப்பவர்கள் தாய் நாட்டில் தமது அடிப்படை செலவுகள் கடன்கள் கடமைகள் பொறுப்புக்களையும் கவனத்தில் கொள்வார்கள்!


ஆக, தனது மற்றும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்க்கான நிரந்தர வருமானம் தரும் தொழில் வியாபாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் ஆகியவற்றை பாதிக்காத விதத்தில் அவர் தனது ஹஜ் பயணத்தை திட்டமிட்டுக் கொள்வார்.


மாறாக அவற்றில் உள்ள அடிப்படை முதலை, முதலீட்டை ஹஜ் பயணத்திற்காக செலவு செய்ய மாட்டார், செய்யவும் கூடாது அவ்வாறு மார்க்கம் அவரை பலவந்தப் படுத்துவதுமில்லை! 


உதாரணமாக அவரது அடிப்படை வாழ்வாதார முதலீடு 20 இலட்சம் ஆக இருக்க  ஹஜ்ஜுக்கான செலவும் 20 இலட்சமாக இருக்க தனது  கையிருப்பில் மேலதிகமாக இருக்கும் ஒரு 5 இலட்சத்தை  வைத்துக் கொண்டு ஹஜ் கடமையை செய்ய முயற்சித்தால் அது அறியாமையாகும்!


ஸகாத் கொடுப்பதாயினும் அடிப்படை தேவைகளுக்கான நிரந்தர வருவாய் மூலங்களை முதலீடுகளை பாதிக்கின்ற விதத்தில் கணிப்பீடுகள் செய்யப்படுவதில்லை, இவ்வாறான கரிசனைகள் கவனத்திற் கொள்ளப்பட்டுதான் அவற்றிற்குரிய கால எல்லை நிஸாபுகள் தீர்மானிக்கப் படுகின்றன.


ஆனால் அடிப்படைத் தேவைகள் கடமைகள் பொறுப்புக்கள் போக மேலதிகமான அல்லது ஆடம்பரமான வீடுகள், வளவுகள், வாகனங்கள், வியாபாரங்கள், சேமிப்புகள் இருப்பவர்கள் கடமையாகும் ஹஜ்ஜினை ஒரு தாமதப் படுத்துதல் கூடாது, அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யும் பொழுது தனது குடும்பம் சமூகம் சார்ந்த ஏனைய முன்னுரிமைகள் கடமைகள் பற்றிய சன்மார்க்க வழிகாட்டலை அறிந்து கொள்ள வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

ஹஜ் கடமை : தவறான புரிதல்கள்!  ஹஜ் கடமை : தவறான புரிதல்கள்! Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

VIDEO : தீ விபத்துக்குள்ளாகி முற்று முழுதாக எரிந்து சேதமடைந்த தெல்தோட்டை ஜுமனாஸ் பேக்கர்ஸ்.



கண்டி - தெல்தோட்டை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது எனவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட தீ விபத்து தொடர்பில் பேக்கரி உரிமையாளரின் சகோதரர் தெரிவித்த கருத்து

தெல்தோட்டை நகரில் அமைந்திருக்கும் எமது வியாபார நிறுவனம் (ஜுமனாஸ் பேக்கர்ஸ்) #jumanas Bake House நேற்று இரவு ஏற்பட்ட சிறு அசம்பாவிதம் காரணாமாக முற்று முழுதாக சேதமடைந்து விட்டது...


இறைவன் அருளால் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாத்தான்...


அல் ஹம்துலில்லாஹ்...



இந்த விபத்து ஏற்பட்ட உடன் பாதிக்கப் பட்ட அனைவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், மேலும் 🔥 தீ பரவி கட்டிடம் சேதமடையாமல் இருக்கவும், தீயை கட்டுபடுத்தவும் அருகில் இருந்து இனம் மதம் மொழி பாராமல் பாடுபட்ட அனைத்து தெல்தோட்டை பிரதேச உறவுகளுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, விடயம் செவியுற்ற அடுத்த வினாடியே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..



இன்ஷா அல்லாஹ் இந்த துயரில் இருந்து மிகவும் அவசரமாக மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாக... ஆமீன்


- Asm Nisthar

VIDEO : தீ விபத்துக்குள்ளாகி முற்று முழுதாக எரிந்து சேதமடைந்த தெல்தோட்டை ஜுமனாஸ் பேக்கர்ஸ்.  VIDEO : தீ விபத்துக்குள்ளாகி முற்று முழுதாக எரிந்து சேதமடைந்த தெல்தோட்டை ஜுமனாஸ் பேக்கர்ஸ். Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

பரிந்துரைகளை மற்ற நாடுகள் ஏற்க மறுப்பு... ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்பு.



பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.



இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை விடுத்தது.



இந்தியாவுடனான போட்டிகளை டுபாயில் நடத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும், இந்த பரிந்துரையை இலங்கை, பங்காங்கதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இதனால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது
பரிந்துரைகளை மற்ற நாடுகள் ஏற்க மறுப்பு... ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்பு.  பரிந்துரைகளை மற்ற நாடுகள் ஏற்க மறுப்பு...  ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக  வாய்ப்பு. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

பரீட்சை எழுதிய மூன்று மாணவர்கள் வினாத்தாளை வாட்சப்பில் அனுப்பி, பதிலை பெற்றுக் கொண்ட போது மாட்டிக் கொண்ட சம்பவங்கள் பதிவு.



நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத் தராதரப் சாதாரணத்தரப் பரீட்சையின் மூன்று பரீட்சை நிலையங்களில் மூன்று மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் கணித வினாத்தாளை ஆசிரியை ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் அனுப்பி பதில்களை வட்ஸ்அப் ஊடாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.


மேலும், ஹெனேகம மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் இருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவத்தை பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.


சீதுவ த்விஸ்மர வித்தியாலய பரீட்சை நிலையத்தில் ஐந்து பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பரீட்சை எழுதிய மூன்று மாணவர்கள் வினாத்தாளை வாட்சப்பில் அனுப்பி, பதிலை பெற்றுக் கொண்ட போது மாட்டிக் கொண்ட சம்பவங்கள் பதிவு. பரீட்சை எழுதிய மூன்று மாணவர்கள் வினாத்தாளை வாட்சப்பில் அனுப்பி, பதிலை பெற்றுக் கொண்ட போது மாட்டிக் கொண்ட சம்பவங்கள் பதிவு. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து அதிகரிப்பதால் கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய போகிறோம் ; தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவிப்பு,


கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார்.


சுஜிவ தம்மிக மேலும் கருத்து தொிவிக்கையில்,


விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பின் பெறுபேறாக அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும்.


கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காண்பித்து அதனை உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்பார்க்கிறார்கள்.


இன்னும் சில நாட்களுக்கு பின்னர் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானியை அறிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் கோருவர்.


வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் கோழி உற்பத்தி அழிவடையும்.


உடனடியாக தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும்.


எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து அதிகரிப்பதால் கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய போகிறோம் ; தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவிப்பு,  விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து அதிகரிப்பதால் கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய போகிறோம் ;  தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவிப்பு, Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

கொழும்பில் ட்ரோன் பறக்கவிட்ட புத்தளம் பிரதேச இளைஞன் விமானப்படையினரால் கைது.



வானில் ட்ரோன் பறக்க விட்ட இளைஞன் கைது!

பாருக் சிஹான்

❇️கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு ட்ரோன் விமானத்தை அனுமதியின்றி பறக்க விட்ட பல்கலைக்கழக மாணவனை விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.

❇️புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் 22 வயதான மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

❇️இந்த இளைஞன் ரயில் நிலையத்திற்கு அருகில் ட்ரோன் விமானத்தை பறக்க விட்டுக்கொண்டிருந்த போது, பம்பலப்பிட்டி ஓஷன் டவரில் அமைந்துள்ள விமானப்படை காவலரணை சேர்ந்த படையினர், அவரை கைது செய்துள்ளனர்.

❇️பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு அதனை கொண்டாடுவதற்காக ட்ரோன் விமானத்தை வானில் பறக்க விட்டதாக மாணவன், விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

❇️கைது செய்யப்பட்ட மாணவன் ட்ரோன் விமானத்துடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

**🤝
கொழும்பில் ட்ரோன் பறக்கவிட்ட புத்தளம் பிரதேச இளைஞன் விமானப்படையினரால் கைது. கொழும்பில் ட்ரோன் பறக்கவிட்ட புத்தளம் பிரதேச இளைஞன் விமானப்படையினரால் கைது. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

Goldfinchs Travels Pvt Ltd. நடாத்தும் 𝐋𝐔𝐂𝐊𝐘 𝐃𝐑𝐀𝐖 𝐂𝐀𝐌𝐏𝐀𝐈𝐆𝐍 🤩 🤩 🤩 - இதோ நீங்களும் சிறந்த பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு.




Goldfinchs Travels Pvt Ltd. நடாத்தும் 𝐋𝐔𝐂𝐊𝐘 𝐃𝐑𝐀𝐖 𝐂𝐀𝐌𝐏𝐀𝐈𝐆𝐍 🤩 🤩 🤩 - இதோ நீங்களும் சிறந்த பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு.

நீங்களும் வெற்றியாளராக மாறுவதற்கு செய்யவேண்டியவற்றின் விபரம்..

Goldfinchs Travels Pvt Ltd இன் உத்தியோகபூர்வ   Facebook Post link:- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0nTphP89giEzPNmyLRrPqVoL2CEb3usKTnVre8wLTarambfW2av4ZmSbxshrvPqFnl&id=100055390490254&mibextid=Nif5oz

Instagram Post link :- 

மேலே உள்ள Link ஜ click செய்வதன் மூலமாக  Lucky draw campaign இல் நீங்களும் இணையலாம்
Goldfinchs Travels Pvt Ltd. நடாத்தும் 𝐋𝐔𝐂𝐊𝐘 𝐃𝐑𝐀𝐖 𝐂𝐀𝐌𝐏𝐀𝐈𝐆𝐍 🤩 🤩 🤩 - இதோ நீங்களும் சிறந்த பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு. Goldfinchs Travels Pvt Ltd. நடாத்தும் 𝐋𝐔𝐂𝐊𝐘 𝐃𝐑𝐀𝐖 𝐂𝐀𝐌𝐏𝐀𝐈𝐆𝐍 🤩 🤩 🤩 - இதோ நீங்களும் சிறந்த பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

வௌ்ளத்தில் மூழ்கிய வீதிகள்.... #இலங்கை



 துசித குமார டி சில்வா

இன்று (6)  ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களுத்துறை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கேணல் அரவிந்த அமரசேகர தெரிவித்துள்ளார்.



வௌ்ளத்தில் மூழ்கிய வீதிகள்.... #இலங்கை வௌ்ளத்தில் மூழ்கிய வீதிகள்....  #இலங்கை Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

பஸ்சை செலுத்திக் கொண்டிருந்த இ. போ. ச சாரதி மீது, தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதி.



தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி, மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீதே, தனியார் பஸ்ஸின் சாரதியால் இவ்வாறு சிறுநீர் தாக்குதல் மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், சாரதிக்கு அண்மையில் உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் சிறுநீர் பட்டுத் தெறித்துள்ளது.

குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக, மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து மினுவாங்கொடையை ​நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
பஸ்சை செலுத்திக் கொண்டிருந்த இ. போ. ச சாரதி மீது, தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதி. பஸ்சை செலுத்திக் கொண்டிருந்த இ. போ. ச  சாரதி மீது,  தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதி. Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

காட்டுக்குள் புதையல் தோண்டிய எட்டுப் பேர் ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் சிக்கினர்.



காட்டுக்குள் புதையல் தோண்டிய எட்டுப் பேர் ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் சிக்கினர்.

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.


நாகஞ்சசோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர், புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைதுசெய்துள்ளதுடன், தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.


முள்ளியவளை, கணுக்கேணி, பூதன்வயல், நொச்சியாகம, ராஜாங்கனை, சாலிய அசோகபுர, அம்பலாந்தோட்டை மற்றும் தபுத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.


இதில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவப் பிரிவில் பணியாற்றும் வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் சிறப்பு அதிரடிப் படையினர் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.


முள்ளியவளை பொலிஸார், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

காட்டுக்குள் புதையல் தோண்டிய எட்டுப் பேர் ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் சிக்கினர். காட்டுக்குள் புதையல் தோண்டிய எட்டுப் பேர் ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் சிக்கினர். Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5
Powered by Blogger.