புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. உமர் மௌலானா இன்று வியாழக்கிழமை (26) குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று வாழ்த்தினார்.
இம்முறை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 இல் இப்பாடசாலை மாணவர்கள் 20 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். சென்ற முறையிலும் பார்க்க இம்முறை அதிகமான மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாடசாலைக்கும், சம்மாந்துறை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் இதன்போது பாராட்டினார்.
மேலும் இம்மாணவர்களின் சிறந்த அடைவிற்காக மிகுந்த அர்பணிப்புடன் அயராது உழைத்த இப்பாடசாலை அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் மற்றும் ஆசிரியர்களான மஜீதா தாசிம், ஏ.எல் நிறோசின், எம்.எச். றிஸ்வி ஜாரியா ஆகியோரை பாராட்டியதோடு எதிர் காலத்தில் இப்பாடசாலை மென்மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் எனவும் வாழ்த்தினார்.
வலயக்கல்விப் பணிப்பாளரின் இவ்விஜயத்தின்போது சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர்த்தம்பி ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
மேலும் குறித்த பாடசாலையின் தரம் 5 மாணவர்களை மகிழ்விப்பதற்கு ஏதுவாகவும் அம்மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 5 மாணவர் அரங்கம் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது மிகுந்த ஆர்வத்துடனும் ஆனந்ததத்துடனும் தரம் 5 மாணவர்கள் அனைவரும் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். மாணவர்கள் அனைவரினதும் மேடைக் கூச்சம் போக்கப்பட வேண்டும் என்பதற்காக சகல மாணவர்களும் யாதாயினும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கம்பளை கலத்தா பிரதேசத்தில் புதிதாக மணம் முடித்த மணமகன் மறுவீடு வீட்டிற்கு நேற்று வந்த போது தனது நண்பர் ஒருவருடன் மதுபானம் அருந்தியதற்காக மணமகள் மணமகனை தாக்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பொறுமை இழந்த மணப்பெண், மணமகனின் காதில் ஒரு பகுதியை கடித்து, மைக் டைசன் பாணியில், அவரது சகோதரியை தாக்கியதுடன், அவரது தந்தை மற்றும் தாயை வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் திருமணம் உறவு முடிந்துவிட்டது என்று தனது திருமண மோதிரத்தை மணமகன் மீது வீசியுள்ள சம்பவம் பரிவாகியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மணமகனின் குடும்பத்தினர் சிலரை மணமகளின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தி அனுப்பியதாகக் கூறப்படுவதால், மணமகளின் குடும்பத்தினர் 119 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டனர்.
மணமகனும், மணமகளும் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மணமகள் கம்பளையைச் சேர்ந்தவர்கள் மற்றும் மணமகன் கம்பளை கலத்தா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தம்பதிகள் தேனிலவுக்கு வந்தபோது மணமகன் தனது நண்பருடன் பீர் குடித்து மகிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவர், சுப நேரத்தை தவறவிட்டதால் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரின் உறவினர்களுக்கு இடையில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க பொலிஸ் அவசர சேவை ஊடாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தகராறில் ஈடுபட்டு அவர்களது திருமணத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு பசறை பகுதியில் இடம்பெற்ற பசறை பஸ் விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ளார்.
லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, என்ற இந்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.
பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021 மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர். சுமார் 32 பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்தில் அந்தோனி நோவா (வயது - 32) என்பவரும், அவரது மனைவியான பெனடிகக் மெடோனோ (வயது 31) உயிரிழந்தனர்.
அவர்களின் மகளே யூஜீனியா. பெற்றோர் உயிரிழக்கும்போது இவர் தரம் மூன்றில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஏற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
திட்டமிட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பில் மட்டக்களப்பில் கறுப்புக்கொடி ஏற்றி தமது அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டை சீரழித்த அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்த போதிலும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும், போராட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.