இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை மற்றும் மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவைக்கு என்ன செய்ய வேண்டும்.. மனோ விளக்கம்

இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 கடல்சார் கண்காணிப்பு விமானம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
"பரஸ்பர புரிந்துணர்வு,நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர்228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்", என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்நிகழ்வில் தெரிவித்தார்.
கட்சி சார்ந்த அரசியலை விடவும் நாட்டு மக்கள் சார்ந்த நலனில் அக்கறை கொண்ட தீர்மானத்தை கட்சி தலைமைகள் முன்னெடுத்து சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் (14) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்
பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றினைந்து கட்சி சார்ந்த நலன்களை விட பொருளாதார நிலைமைகளை சீரமைத்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றினைய வேண்டும் இதுவே எமது கட்சியினதும் தலைமையினதும் எமதும் நிலைப்பாடாக உள்ளது.
கடந்த காலங்களில் பல ஜனாதிபதியின் கீழ் அமைச்சரவை அமைச்சராக செயற்பட்டு பல நஷ்டமடைந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமா மாற்றியமைத்து றிசாத் பதியுதீன் திறம்பட எடுத்துக் காட்டியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கொள்வதாக இருந்தால் கட்சி தலைமைகளுக்கு பொறுப்பு வாய்ந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க கூடிய அமைச்சை வழங்க வேண்டும்.
இதில் கட்சி உறுப்பினர்களை விட கட்சி தலைமைகளுக்கு மதிப்பளித்து நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தியாக்க கூடிய நல்ல பல திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்..
தற்போது தட்டுப்பாடின்றி எரிவாயு ,டீசல் ,பெற்றோல் சில பொருட்களின் விலை குறுகிய காலத்தில் கிடைக்ககூடிய வாய்ப்பில் உள்ளது. ஜனாதிபதி தன்னுடைய முதலாவது அமர்வில் பயங்கரவாத சட்டம் சர்வதேசத்தில் இருக்கின்ற புலம்பெயர் சமூகங்களின், மலையக ,தமிழ் முஸ்லிம்களின் தீர்வு பற்றி கொள்ளை பிரகடனத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.
எதிர் வரும் மார்ச்,ஏப்ரல் மாதமளவில் பொதுத் தேர்தலை நடாத்தி நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற இரண்டரை வருடங்களுக்குள் ஜனாதிபதியாக அதிகாரத்தை கொண்டு மக்கள் ஆட்சியை நிலையாக நிறுத்த முடியும் என்பது ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்பாக உள்ளது.
தனி நபராக இருந்து 134 ஆசனங்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பதை கட்சி தலைமைகள் மீண்டும் ஒரு முறை சிந்திக்க வேண்டும்.
..வரும் மாதம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசை சீராக கொண்டு செல்ல மக்களுக்கு சாதகமான திட்டங்களே வகுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை கூறுபோட்ட தலைமைகள் தற்போது விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டுக்கு செல்வது என தடுமாறுகின்றனர் இது இறைவன் கொடுத்த தீர்ப்பு .பல சமூகம் வாழும் இந்த நாட்டில் ..ஏனைய நாட்டு மக்களின் நம்பிக்கை பெற வேண்டும்...இன ஒற்றுமையை சீரழிக்க தேவையற்ற ஆணைக்குழுக்கள், தனி நபர் குழுக்கள் இன்றி செயற்பட வேண்டும்
சுயநலமல்லாத நாட்டு மக்கள் மீது கரிசனை கொண்ட ஆட்சியை சகல கட்சி தலைமைகளும் இணைந்து செயற்படுவது நல்லதொரு பலன் மிக்க நாட்டை கட்டியெழுப்பு பேருதவியாக இருக்கும் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைந்துள்ள உண்மைகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் புதிய அரசாங்கம் ஈடுபடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே புதிய ஜனாதிபதியை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த தாக்குதலின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை கண்டறிவதற்காக தற்போதைய ஜனாதிபதி முயலவேண்டும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்வதற்கு முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரை தடுத்தவர்களை தண்டிக்கவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரனில் விக்ரமசிங்கவுக்கு நிகரான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
ரனில் விக்ரமசிங்க தொடர்பில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை உள்ளது என கூறிய அவர் ரனில் விக்ரமங்க இந்த நாட்டின் தேசிய சொத்து எனவும் அவரை பாதுகாப்பது அனைவரினது கடமை எனவும் கூறினார்.
நாட்டில் தற்போது வரை நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வங்குரோத்து நிலைமைகள் காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்களால் இந்நாட்டின் முதுகெழும்பு உடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2019 ஜனாதிபதி தேர்தலில்
“ஐக்கிய பாதை”க்கு பதிலாக "தவறான பாதையை" தெரிவு செய்ததன் அவலத்தை இன்று நாடு எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (13) ஹோமாகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஹோமாகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி எரந்த வெலியங்க இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பு ரீதியாக சரியானது என்றாலும், அங்கீகாரம் மற்றும் மக்கள் அபிப்பிராயம் என்ற அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்ட நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தை விட நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்களில், பெரும்பாலும் அரசியல் முடிவுகளை எடுப்பதில் முன்னுரிமை பெற்றது பெரியவர்களே என்றாலும், இன்று இளம் தலைமுறையினர் அதை வீட்டில் கூட பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். தேர்தலில் முடிவெடுப்பது குறித்து வீட்டில் செல்வாக்கு செலுத்துவது இளைஞர் சமுதாயத்தினரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களின் பிரகாரமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
தம்மிடம் இரத்தம் சிந்திய வரலாறு இல்லை எனவும்,தமது வங்கி கணக்குகளில் போதைப்பொருட்கள் விற்ற பணம் இல்லை எனவும்,தம்மிடம் எந்த வித கபடத்தனமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஓர் அணியாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த 6 சர்வதேச தமிழ் அமைப்புகளின் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், 316 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டின் படி, 577 நபர்களும் 18 அமைப்புகளும் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பாதுகாப்பு அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த அமைப்புகளில் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் பேரவை, கனேடியத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு சபையின் உடன்படிக்கையின் பிரகாரம் மேலும் மூன்று அமைப்புக்கள் மற்றும் 55 நபர்களுக்கு தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 15 சர்வதேச அமைப்புகளும் 316 நபர்களும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதே நேரம் புதிதாக 3 அமைப்புகளும் 55 நபர்களும் தடை பட்டியலுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாருல் அதர் குரான் மத்தரஸா எனப்படும் தாருல் அதர்.இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்( SLISM) எனப்படும் ஜம்மியா.சேவ் த பேர்ள் எனப்படும் சேவ் த பேர்ள் சமூகம்.ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரனில் விக்ரமசிங்க அதிகாரத்திற்கு வந்தால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நெருக்கடியை உண்டாக்குவது வழக்கம் என பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டார்.
விடுதலை புலிகளுக்கு ஆதரவான ஆறு அமைப்புகள் மீதான தடையினை அரசு நீக்கியுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள அவர், குறித்த அமைப்புகள் ஈழம் சிந்தனையில் இருந்து விடுபட்டுவிட்டனவா என தான் பாதுகாப்பு செயலாளரிடம் கேள்வி எழுப்புவதாக கூறினார்.