வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறி சஹ்ரான் என்ற இளைஞன் கைது. I

இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்காக கட்சி நிற பேதங்களை மறந்து முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.
இத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (3ஆம் திகதி) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்கப்பால் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் தெரிவித்துள்ளார்.
– காவியன்-
நாளை (04) திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா, கண்டி அலுவலகங்களில், முன்கூட்டியே பதிவு செய்த தலா 100 பேருக்கு 'ஒரு நாள் சேவை' கடவுச்சீட்டு வழங்கப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் 2022 ஜூலை மாதம் 04 ஆம் திகதி முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன் ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் முன்கூட்டியே நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரிகள் 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும்.
www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசித்து உரிய பிராந்திய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும்.
மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது விண்ணப்பதாரிகளுக்கு நாட்கள் மற்றும் நேரங்கள் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டியுள்ளது. எனவே, அந்த அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு முன்கூட்டியே நாளையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாதவர்கள் சமூகமளிக்க வேண்டாமென தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
மேலும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் 60 நாட்களுக்கான காலப் பகுதிக்கு திகதியும் நேரமும் ஒதுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. எனவே அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 0706311711 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அ ப் (WhatsApp) செய்தி மூலம் அனுப்பிய பின்னர் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு விரைவில் நாளொன்றும் நேரமும் திணைக்களத்தினால் வழங்கப்படும். சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே துரிதமாக நாளொன்றும் திகதியும் வழங்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியுடன்,ஜா எல நகரில் பெரும்பாலான பொது மக்களும், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்களும் தங்களது கடமைகள் மற்றும் இதர தேவைகளுக்காக சைக்கிளை தெரிவு செய்வதை காணமுடிந்தது.
இதனால் ஜாஎல பகுதியில் உள்ள சைக்கிள் நிறுவனத்தில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
தற்போது, டாக்டர்கள், வங்கி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சைக்கிளை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள், அந்த நிலை அதிகரித்து வருவதாக, ஜா எல பொலிஸ் நிலைய தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர் கே.டி.எஸ். திரு.பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவிலான ஊழியர்களைக் கொண்ட அரச சேவை நாட்டுக்கு தேவையற்ற சுமையாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்காலத்திலும் அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும், ஆட்குறைப்பு செய்ய வேண்டும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முடிந்தவரை சிறியதாக இருக்க வேண்டும். தேவையற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வளர்ந்த நாடுகளைப் போல் தொழில் முனைவோருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும். மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாத இழுபறி நிலையிலேயே தொடர்வதாக முன்னாள் ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு என்ன? ” என்ற தலைப்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“நம்மிடம் உள்ள நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக சில வெளிநாட்டுக் கடனைப் பெறுவது என்பது அனைவருக்கும் தெரியும். IMF பேச்சுவார்த்தையில் இருந்து அரசாங்கம் அதையே எதிர்பார்க்கிறது. ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நீண்ட கால வேலை திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் வரை யாரும் எங்களுக்கு கடன் வழங்க மாட்டார்கள். எனவே, நீண்டகால தீர்வுகளை நாம் காண வேண்டும். எனவே, 4 அம்சங்களில் அரசின் நிலைப்பாட்டை இப்போதும் கூற வேண்டும்.
• வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது எப்படி?
• வெளிநாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
• உள்ளூர் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?
• உள்ளூர் செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஆனால், இந்த அரசு சாக்குப்போக்கு சொல்கிறதே தவிர, இந்த விஷயங்களை ஆழமாக விவாதிப்பதாக நான் பார்க்கவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பல்வேறு அரசாங்கங்கள் காலங்காலமாக செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான பொன்னான வாய்ப்பு அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. வழக்கத்தை விட இந்த நேரத்தில் கடுமையான முடிவுகளுக்கு மக்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெறுவது எளிது. ஆனால் அதற்குத் தேவையான தொலைநோக்கு பார்வையும் அர்ப்பணிப்பும் அரசுக்கு உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.
உதாரணமாக, அரசாங்க செலவினக் கட்டுப்பாடு பற்றி நான் சில கருத்துக்களைச் சொல்கிறேன். 2021 ஆம் ஆண்டில், நமது பட்ஜெட் இடைவெளி GDPயின் சதவீதமாக 12% ஐத் தாண்டியிருக்கும். இது ஒரு பெரிய பிரச்சினை. இருக்கும் கடனை அடைக்க முடியாவிட்டால், வரவு செலவுத் திட்டத்தை ஈடுகட்ட தொடர்ந்து பணத்தைச் சுருட்டி நாடு மேலும் பாதாளத்திற்குச் செல்லும். எனவே, உள்ளூர் செலவுகளை கட்டுப்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
செலவினங்களைக் குறைப்பதைக் காட்டிலும், செலவினங்களைக் கட்டுப்படுத்துவதிலும், வீண் விரயம் மற்றும் ஊழலைக் குறைப்பதிலும் அதிக கவனம் செலுத்துவதே பொதுச் செலவு தொடர்பான கொள்கையாக இருக்க வேண்டும்.
நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன் சேர்க்காத பதவிகள் அனைத்தும் குறைக்கப்பட வேண்டும். அதற்கான தொலைநோக்கு பார்வையும் அர்ப்பணிப்பும் அரசுக்கு உள்ளதா என்பதுதான் மீண்டும் கேட்க வேண்டிய கேள்வி. 1000க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வணிகங்கள், அதிகாரிகள், துறைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் பல நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எந்தவிதமான வருமானத்தையும் வழங்குவதில்லை, மேலும் இந்த நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் நாட்டின் செயல்திறனுக்கு பெரும் தடையாக உள்ளனர்.
அடுத்த சில மாதங்கள் இன்னும் கடினமாக இருக்கும் என்று அறிவிப்புகளை வெளியிடுவதற்குப் பதிலாக, அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை நாட்டிற்கும் நமது கடன்காரர்களுக்கும் முன்வைக்க வேண்டும்.
அப்படி ஒரு திட்டத்தை முன்வைக்கும் வரை எங்களை யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள். அரசாங்கம் அத்தகைய திட்டத்தை முன்வைக்காததால் IMF பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றன என கலாநிதி நாலக கொடஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
-காவியன்-
மகிந்த ராஜபக்சவிடம் குறைபாடுகள் இருந்தாலும் அவர் இந்நாட்டிற்கு முக்கிய பணியை ஆற்றிய வரலாற்று நாயகன் ஆவார் என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட ஒரு தலைவன் இறக்கும் சந்தர்ப்பத்தை பலர் ஆவலாக எதிர்பார்த்திருப்பது துரதிஷ்டவசமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலைகாரன் பிரபாகரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பால் சோறு சாப்பிட்டு, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய இந்த நாட்டிலுள்ளவர்கள்; அந்த பிரபாகரனை அழிப்பதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவின் மரணத்திற்காக காத்திருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நேற்றுமுன்தினம் தான் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் மிக நலமுடன் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.