தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.. சில மணித்தியாலங்களில் நாடு முழுதும் மின் விநியோகம் ; மின்சார சபை அறிவிப்பு



கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் மின்சார லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.


“தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,
மற்ற அனைத்து பகுதிகளுக்கும் விநியோகத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன,

சில மணிநேரங்களில் நாடு முழுதும் மின்சாரம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபை சற்று முன் அறிவித்துள்ளது.
தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.. சில மணித்தியாலங்களில் நாடு முழுதும் மின் விநியோகம் ; மின்சார சபை அறிவிப்பு தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.. சில மணித்தியாலங்களில் நாடு முழுதும் மின் விநியோகம் ; மின்சார சபை அறிவிப்பு Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் CEB பொறியியலாளர்கள்...



நாடு முழுதும் ஏற்பட்டுள்ள மின் தடை Update > 💡 🔌
மின்சாரத் தடைக்கான காரணத்தை கண்டறிந்து மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் CEB பொறியியலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர் என மின்சார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் CEB பொறியியலாளர்கள்... மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் CEB பொறியியலாளர்கள்... Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை



இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுடள்ளது.

System failure  காரணமாக நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக CEB தெரிவித்துள்ளது.

மேலும் மின்சார விநியோகத்தை சீரமைக்க,  மின்சாரத் தடைக்கான காரணத்தை கண்டறியும் பணியில் CEB பொறியியலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர் என மின்சார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில்  மின்தடை Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை எனக்கு உள்ளது.



இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,



2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனால் தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளாம்.



இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதுடன், சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும்.



அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.



நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும்.



கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, அணிகள் இணைந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. மாலுமிகள் வரும்போதும், அவர்களும் தற்காலிக கிரிக்கெட் அணியை உருவாக்கினர். மலாய் படைப்பிரிவின் படைமுகாமில் தங்கியிருந்த வீரர்கள் கோல்ட்ஸ் என்ற அவர்களின் கிரிக்கெட் அணியை உருவாக்கினர்.



ஒருமுறை கோல்ஸ் மற்றும் றோயல் கல்லூரி, புனித தோமஸ் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் பின்னர், சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் மற்றொரு கழகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் யூனியன் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, இன அடிப்படையில் பல விளையாட்டுக் கழகங்கள் உருவாகின. இவை மலாய், பறங்கியர், சிங்களம், தமிழ் ஆகிய வார்த்தைகளால் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் அனைத்து இன மக்களும் இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.



துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இதனைக் கண்டுகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நாம் இன்று இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உங்களது பங்களிப்பு இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.



இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்திருக்கிறோம், அந்தக் காலத்தைக் கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.



இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவுசெலவுத்திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது, வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.



இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



படங்கள்



கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனால் தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளாம்.



இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதுடன், சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும்.



அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.



நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும்.



கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150 ஆவது ஆண்டு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, அணிகள் இணைந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. மாலுமிகள் வரும்போதும், அவர்களும் தற்காலிக கிரிக்கெட் அணியை உருவாக்கினர். மலாய் படைப்பிரிவின் படைமுகாமில் தங்கியிருந்த வீரர்கள் கோல்ட்ஸ் என்ற அவர்களின் கிரிக்கெட் அணியை உருவாக்கினர்.



ஒருமுறை கோல்ஸ் மற்றும் றோயல் கல்லூரி, புனித தோமஸ் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் பின்னர், சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் மற்றொரு கழகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் யூனியன் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, இன அடிப்படையில் பல விளையாட்டுக் கழகங்கள் உருவாகின. இவை மலாய், பறங்கியர், சிங்களம், தமிழ் ஆகிய வார்த்தைகளால் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் அனைத்து இன மக்களும் இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.



துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இதனைக் கண்டுகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நாம் இன்று இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உங்களது பங்களிப்பு இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.



இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்திருக்கிறோம், அந்தக் காலத்தைக் கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.



இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவுசெலவுத்திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது, வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.



இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

2030 இல் இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது. எனவேதான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கு மட்டுமன்றி இந்த இலக்கு நிறைவேறும் வரை இந்த நிதியை வழங்குவோம். இதனை வருடத்திற்கு 02 பில்லியன் வரை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும்.



இந்த நிதி நிர்வாகத்தையும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் ஒரு சுயாதீன நிதியத்திற்கு நாம் ஒப்படைப்போம். மீதமுள்ள பகுதி நிர்வாக சபைக்கு உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது. மைதானங்கள், உபகரணங்கள் என எதற்கு இந்த நிதி செலவிடபபட்டாலும் அது மூலதனச் செலவில் குறிப்பிடப்படும். எனவே, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பாடசாலை கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதே அதன் அர்த்தம். அதன் பின்னர் எமக்கு மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்ற முடியும்.


நாம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நிதியை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவே நாம் பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு கொண்டு வருவோம்.



மேல்மாகாணத்தில் கிரிக்கெட் பற்றிப் பேசும்போது கொழும்பில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர பாதுக்க, கிரிந்திவெல, அகலவத்தை போன்ற பகுதிகளில் கிரிக்கெட் எந்த வகையிலும் வளர்ச்சியடையவில்லை. எனவே அனைத்து பாடசாலைகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.



கிரிக்கெட் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு. எல்லா ஆட்டத்திலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நம்மால் வெல்ல முடியும். எனவே இதற்காக பணத்தை செலவிட தயாராக உள்ளோம். அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.



நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வளமான தேசமாக மாற்றவும் அவசியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் மட்டுமன்றி பாடசாலைகளில் கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ்வதை உறுதி செய்வோம். பொருளாதாரம் என்பது பணம். விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டால் நாமும் அதற்குள் நுழைவோம். மேலும், விளையாட்டை வணிகமயமாக்கினால், அதை அரசியல் தலையீடு இல்லாமல் பேணிக் கொள்வோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.



1996 உலகக் கிண்ணத்தை வென்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் 2014 பந்துவீச்சு 20 (T20) உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கும் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்துவம் இதன்போது வழங்கப்பட்டது.



இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வாழ்நாள் அங்கத்துவம் அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்கவினால் வழங்கப்பட்டது.



பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, தற்போதைய மற்றும் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கழக அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை எனக்கு உள்ளது. 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை எனக்கு உள்ளது. Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளி (சி.எம். இப்ராஹிம்) கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு.



ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் (வயது - 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.


அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


" அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச்சென்றுள்ளார்." என ஹட்டன் பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.



பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.



நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.



ஸ்தல பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் ஜனாசா , பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

கொலையாளியை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளி (சி.எம். இப்ராஹிம்) கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு. ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளி (சி.எம். இப்ராஹிம்) கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு. Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

நாடு இருக்கும் நிலமையில் இப்போது 4ஆவது சர்வதேச விமான நிலையம் தேவையா?



நாடு இருக்கும் நிலமையில் இப்போது 4ஆவது சர்வதேச விமான நிலையம் தேவையா என சாணக்கியன் M.P கேள்வி எழுப்பி உள்ளார்.

என்னை நோக்கி நேற்றைய தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி
ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார்.


அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.


நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே.
இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார்.


கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் மாத்திரம் அல்ல எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன.


இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம்.


இன்றும் வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர். நேற்றும் ஐபிசி தமிழ் ஊடகத்தினுடைய மட்டக்களப்பு மாவட்டதிற்கான பிராந்திய செய்தி சேகரிப்பாளர்கள் சிலருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தபோது செய்தி சேகரிக்க சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றின் முன் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.



இது தொடர்கிறது. வடக்கு - கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது. அண்மையில் கூட '' Online Safty Bill'' என்ற ஒரு சட்டமூலத்தை உருவாக்கி அச்சுறுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கிறது.



இது தொடருமானால் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகளும் எதிர்ப்புக்களை மக்களால் அதிகரிக்கப்படும். அரச ஊடகங்களில் கூட வடக்கு - கிழக்கில் தமிழ் மொழி செய்தி சேகரிப்பாளருக்கு ஒரு தொகையும், சிங்கள மொழியில் செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு தொகையிலும் வழங்கப்படுகிறது.


இது தான் இந்த நாட்டில் உள்ள ஊடக நியதி. மேலும் தென்னிலங்கை ஊடகவியாளர்களுக்கு கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற சலுகைகள் எதுவும், வடக்கு - கிழக்கு ஊடகவியாளர்களுக்கு கிடைக்கவில்லை.


மட்டக்களப்பில் கடந்த 10 வருடங்களாக ஒரே தகவல் திணைக்கள அதிகாரியே செயல்படுகிறார். அவர் ஒரு அரச அதிகாரி என்பதற்கு அப்பாற்பட்டு சில செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் எழுந்துள்ளது.
ஜனாதிபதி தற்போது 4 வது சர்வதேச விமான நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது தேவையான ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு முன்னர் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்திற்குரிய பலாலி வடக்குப் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்கும், விமான ஓடு பாதையினை முறையாக அமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். புனரமைப்பு செய்வதற்கு யாழ்ப்பாண விமான நிலையம் காணப்படினும்; அதைப் பற்றி சிந்திக்காமல் மற்றுமொரு புதிய விமான நிலையத்தினை அமைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.


வடக்கில் புனரமைப்பு செய்வதற்குரிய இடங்கள் காணப்படினும்; எதற்காக புதியனவற்றை அமைக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.
மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பல்வேறுபட்ட இடங்களிலும் 45 Seater விமானங்கள் தரை இறங்கக் கூடிய வசதிகள் உள்ளன.


ஆகவே தனியார் கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்ற போது மட்டக்களப்பு – கொழும்பு, கொழும்பு – கனடா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும். ஆகவே மேற்கொள்ள வேண்டிய இது போன்ற விடயங்களை மேற்கொள்ளாமல் 4 வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேசுவது நேரத்தினை வீணடிக்கும் ஒரு விடயம்.


அத்துடன் எங்களது பிரதேசத்தைப் பற்றி கவனம் செலுத்த தவறிவிட்டீர்கள் என்றே நாங்கள் எண்ணக்கூடும். KKS இலிருந்து ஆரம்பித்த பாதையானது 56 கடல் மைல்களாக காணப்படுகின்றது.

இதனால் நேரமும், செலவும் அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் இப் பாதையினைப் பயன்படுத்துவார்களா? என்பது தெரியாது. தலைமன்னார் – இராமேஸ்வரம் பாதையானது 18 கடல் மைல்களாக உள்ளதால் 1 மணித்தியாலத்தில் சென்றடையக் கூடியதாகவும், செலவும் குறைவாக உள்ளது. அதனால் மக்கள் கூடதலாக அப் பாதையினை பாவிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இது தொடர்பாக ஆராய வேண்டும்.


மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். விரைவில் இப் பாதையினை திறப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அத்துடன் திருகோணமலையிலுள்ள துறைமுகமும் எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் உள்ளது.

எனவே இதற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என சாணக்கியன் M.P தெரிவித்தார்.
நாடு இருக்கும் நிலமையில் இப்போது 4ஆவது சர்வதேச விமான நிலையம் தேவையா? நாடு இருக்கும் நிலமையில் இப்போது 4ஆவது சர்வதேச விமான நிலையம் தேவையா? Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள் மொத்தமாக 25 A சித்திகளை பெற்று அசத்தல்.



காலி - மாபலகமவில் ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள், கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் மூவரும் பெற்றுக்கொண்ட 25 A சித்திகளையும் தங்கள் பெற்றோருக்குப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.

அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க ஆகியோர் மாபலகமவில் பிறந்த சகோதரர்களாவர்.

இதன்படி அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 2 பி சித்திகளையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்தனர்.

இவர்கள் மூவரும் ஒன்றாகப் பிறந்து ஆரம்பக் கல்வியை நாகொட ஆரம்பப் பாடசாலையில் ஒன்றாகக் கற்று 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.

இதையடுத்து, தற்போது இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் மூவருமாக 25 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்
ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள் மொத்தமாக 25 A சித்திகளை பெற்று அசத்தல். ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்கள் மொத்தமாக 25 A சித்திகளை பெற்று அசத்தல். Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

20 கிலோ உடல் எடையை குறைத்தால், ஐபிஎல் தொடரில் விளையாட எடுத்துக் கொள்கிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷேசாத்திற்கு எம்.எஸ்.தோனி அறிவுரை



இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.


இவருக்கும் அணியின் நிர்வாகத்திற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதனால் தோனி ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்தால், நிர்வாகம் எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலத்தில் எடுத்து விடும்.


கூல் கேப்டன் எனப் பெயரெடுத்துள்ள எம்.எஸ். டோனி உடல் கட்டுக்கோப்பு (fitness), பீல்டிங் ஆகிய இரண்டு விசயத்தில் கறாராக இருப்பார். கேட்ச் மிஸ் செய்தால், அல்லது பீல்டிங்கில் கோட்டை விட்டால் கடுங்கோபம் அடைவார்.


ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருந்தவர் முகமது ஷேசாத். உடல் பருமனாக காணப்படும் ஷேசாத் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரால் விரைவாக ஓடி ரன்கள் எடுக்க முடியாது.

இருந்தபோதிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.


2018-ம் இந்தியா- ஆப்காகிஸ்தான் இடையிலான சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது எம்.எஸ். டோனியிடம் அப்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் பேசியுள்ளார்.

அப்போது எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து சமீபத்தில் அஸ்கர் ஆப்கன் விவரித்திருந்தார்.

2018-ல் எம்.எஸ். தோனியிடம் பேசியது குறித்து அஸ்கர் ஆப்கன் கூறியதாவது:-

2018-ம் ஆண்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டிக்குப்பிறகு நீண்ட நேரம் எம்.எஸ். தோனியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

 எம்.எஸ். தோனி சிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட்டிற்கு கடவுள் வழங்கிய பரிசுதான் எம்.எஸ். தோனி. அவர் தலைசிறந்த மனிதர்.


முகமது ஷேசாத் குறித்து நாங்கள் அதிகமாக பேசிக் கொண்டோம். நான் எம்.எஸ். தோனியிடம் ஷேசாத் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் எனத் தெரிவித்தேன். தோனி என்னிடம் ஷேசாத் மிகப்பெரிய பானை வைத்திருக்கிறார். அவர் 20 கிலோ எடையை குறைத்தால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரை எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார்.


 ஆனால், ஷேசாத் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு திரும்பும்போது, 5 கிலோ எடை அதிகரித்திருந்தார்.

இவ்வாறு அஸ்கர் ஆப்கன் தெரிவித்திருந்தார்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான "டை" ஆன போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இந்தியா 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில் 49.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்த போட்டியில் முகமது ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - Malai Malar 
20 கிலோ உடல் எடையை குறைத்தால், ஐபிஎல் தொடரில் விளையாட எடுத்துக் கொள்கிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷேசாத்திற்கு எம்.எஸ்.தோனி அறிவுரை 20 கிலோ உடல் எடையை குறைத்தால், ஐபிஎல் தொடரில் விளையாட எடுத்துக் கொள்கிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷேசாத்திற்கு எம்.எஸ்.தோனி அறிவுரை Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

போதைப்பொருள் குற்றங்களுக்காக இவ்வருடம் 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது.



இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்
போதைப்பொருள் குற்றங்களுக்காக இவ்வருடம் 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது. போதைப்பொருள் குற்றங்களுக்காக  இவ்வருடம் 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது. Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

வாட்சப்பில் Voice message களையும் ஒரு தடவை மட்டுமே கேட்க முடியுமான புதிய வசதி அறிமுகமாகிறது



வட்ஸ்ஆப் செயலியில் புதியதொரு சேவையை அறிமுகப்படுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடியோ குறுஞ்செய்திகளையும் இனி வன் டைம் வியூ (One time view) மூலம் அனுப்பும் புதிய வசதியை அளிக்கவிருக்கிறது.

மெட்டா நிறுவனம் கடந்த 2021இல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளுக்கு 'ஒன் டைம் வியூ' எனும் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் வசதியை அறிமுகம் செய்தது. இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் அறிமுகப்படுத்துகிறது.

இவ்வசதியை இன்னும் சில நாள்களில் புதிய அப்டேட் மூலம் அனைவரும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்சப்பில் Voice message களையும் ஒரு தடவை மட்டுமே கேட்க முடியுமான புதிய வசதி அறிமுகமாகிறது வாட்சப்பில் Voice message களையும் ஒரு தடவை மட்டுமே கேட்க முடியுமான புதிய வசதி அறிமுகமாகிறது Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா... நேற்று முதல் பயணத்தை மேற்கொண்டது.



அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா, தனது முதலாவது கன்னிப் பயணத்தை மேற்கொண்ட விமானம் நேற்று வெள்ளிக்கிழமை (8 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

158 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் 3L-197 என்ற எயார் அரேபியா விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த விமானம் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 08.00 மணிக்கு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து மீண்டும் இரவு 8.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும்.
குறிப்பிட்ட விமான சேவை Katunayaka to Abu dhabi க்கு one way மற்றும் return பயணத்திற்கு அறவிடும் கட்டணம் என வெளியிட்டுள்ள தொகை


இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா... நேற்று முதல் பயணத்தை மேற்கொண்டது. இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா... நேற்று முதல் பயணத்தை மேற்கொண்டது. Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

மத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் மாலை வேளையில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்பு.



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு,மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை மாவட்டத்திலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் அத்துடன் களுத்துறை தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

மத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் மாலை வேளையில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்பு. மத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் மாலை வேளையில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்பு. Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

பொலிஸார் என தெரிவித்து வந்த சிலர், இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டு, வழியில் விட்டுச் சென்ற சம்பவம்.



ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸார் எனக் கூறி காரில் வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கடத்திச் சென்று காலில் துப்பாக்கியால் சுட்டு, வழியில் விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பொலிஸார் என தெரிவித்து வந்த சிலர், இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டு, வழியில் விட்டுச் சென்ற சம்பவம். பொலிஸார் என தெரிவித்து வந்த சிலர்,  இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று  துப்பாக்கியால் சுட்டு, வழியில் விட்டுச் சென்ற சம்பவம். Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

ஒருமாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை... ஆனால் ஊடகங்கள் அதனை பொய்யாக பரப்பியதால் மக்கள் வெறுப்பில் என் வீட்டுக்கு தீ வைத்தனர்.



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஒருமாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை.சொல்லாத விடயத்துக்காகவே என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

ஊடகங்களினால் நான் அதிகளில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளேன் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம்,கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த ஆண்டு போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, '

இவர் 2,500 ரூபாவால் வாழ முடியும் என்று குறிப்பிட்டவர் ஆகவே இவரின் வீட்டுக்கு தீ வைக்க வேண்டும் 'என்று குறிப்பிட்டுக் கொண்டு போராட்டகாரர்கள் எனது வீட்டுக்கு தீ வைத்தார்கள்.


ஊடகங்களினால் தான் விமர்சிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டேன்.ஒரு மாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

அவ்வாறு நான் குறிப்பிட்டதாக ஊடகங்கள் திரிபுப்படுத்தி குறிப்பிட்டு என் மீது வெறுப்பை தோற்றுவித்தன.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நான் கல்வி அமைச்சராக பதவி வகித்தேன்.அப்போது கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாத கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்து நான் அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை முன்வைத்து கொடுப்பனவு அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத கொடுப்பனவை 500 ரூபாவால் அதிகரித்து 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் ஒருமாத செலவுக்கு 2,500 போதும் என்று நான் குறிப்பிட்டதாக வதந்தி பரப்பி விடப்பட்டது.

இதனால் என்மீது பாரிய வெறுப்புக்கள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றது.இவ்வாறான நிலை ஊடக நெறி கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது என்றார்.
ஒருமாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை... ஆனால் ஊடகங்கள் அதனை பொய்யாக பரப்பியதால் மக்கள் வெறுப்பில் என் வீட்டுக்கு தீ வைத்தனர். ஒருமாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை... ஆனால் ஊடகங்கள் அதனை பொய்யாக பரப்பியதால் மக்கள் வெறுப்பில் என் வீட்டுக்கு தீ வைத்தனர். Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியுடன் கடந்த மாதம் காணாமல் போனதாக கூறப்படும் "குஷ்" போதைப் பொருளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட "குஷ்" வகையைச் சேர்ந்த இந்த போதைப் பொருள் 10 கோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருள், கடந்த நவம்பர் மாதம் 14 ம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பயணப் பொதியில் 19 கிலோ 588 கிராம் “குஷ்” போதைப் பொருள் இருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ்  Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

வாள் மற்றும் நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு.



யாழ்ப்பாணத்தில் வாள், நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாள் மற்றும் நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு. வாள் மற்றும் நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு. Reviewed by Madawala News on December 09, 2023 Rating: 5

பிரபாகரனை நினைவு கூர்வதற்கு அவரது பெற்றோருக்கு உரிமையுண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்த அனுமதிக்க முடியாது.



(எம்.மனோசித்ரா)

பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும்.

எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைக்குள் மனித உரிமைகளை பாதுகாப்பதை நாம் பார்த்துக் கொள்கின்றோம். எம்மை விமர்சிக்கும் நாடுகளில் என்ன மனித உரிமைகள் இருகின்றன? காசாவில் 14 000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதனை நிறுத்துமாறு கூறுகின்றார்களா? மாறாக ஜனாதிபதி அங்கு சென்று ஆயுதங்களையும், நிதியையும் வழங்குகின்றார். எனவே இவ்வாறான நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் இலங்கையிலுள்ள மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை நானும் அங்கீகரிக்கவில்லை.

நீதி அமைச்சராக பதவி வகித்த போது, நான் இது தொடர்பான சட்ட திருத்தமொன்றையும் முன்வைத்திருக்கின்றேன். ஏனைய நாடுகளின் அழுத்தங்களால் நாம் இதனைக் கூறவில்லை. எமது நாட்டிலுள்ள தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அதே வேளை பிரிவினைவாத நிலைப்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்று தற்போதுள்ள இளம் தலைமுறையினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாம் பிரிவினைவாதத்தை விரும்புபவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இலங்கைக்கு வெளியிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் தமது வாக்கு வங்கிகளுக்காக பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்றனர்.

இங்கிலாந்தில் ஹமாஸ் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை கௌரவிக்கும் வகையில் நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன.

இது இரட்டை நிலைப்பாடில்லையா? எனவே தான் இவர்களின் கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்றோம். இதன் அரத்தம் மக்கள் பாகுபாடாக நடத்தப்பட வேண்டும் என்பதல்ல. இங்கும் நிச்சயம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடை சட்டம் மாற்றப்பட வேண்டும். அது அநாவசியமாக பயன்படுத்தப்படக் கூடாது. நினைவேந்தல்களை செய்வதில் பிரச்சினையில்லை.

பிரபாகரனை நினைவு கூர்வதற்கு அவரது பெற்றோருக்கு உரிமையுண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்த அனுமதிக்க முடியாது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை பெருமைப்படுத்துவது நாட்டில் வன்முறையைத் தூண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வை அங்கீகரிக்கின்றோம். உரிமைகளுக்காக அமைதியாகப் போராடுவதில் தவறில்லை என்றார்
பிரபாகரனை நினைவு கூர்வதற்கு அவரது பெற்றோருக்கு உரிமையுண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்த அனுமதிக்க முடியாது. பிரபாகரனை நினைவு கூர்வதற்கு அவரது பெற்றோருக்கு உரிமையுண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்த அனுமதிக்க முடியாது. Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

BMICH இல் ஆரம்பமானது இலங்கை போஹ்ரா முஸ்லிம்களின் "போஹ்ரா பிசினஸ் எக்ஸ்போ" கண்காட்சி



The 'Home and You Lifestyle Fair 2023 கண்காட்சி மற்றும் 'போஹ்ரா பிசினஸ் எக்ஸ்போ' இன்று பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) தொடங்கப்பட்டது.


இலங்கையில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகம் போஹ்ரா பிசினஸ் எக்ஸ்போவின் 5வது பதிப்பை ஆரம்பித்தது.


இரண்டு கண்காட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை (10) .
இரவு 8 மணி வரை இடம்பெறும்.


BMICH இல் ஆரம்பமானது இலங்கை போஹ்ரா முஸ்லிம்களின் "போஹ்ரா பிசினஸ் எக்ஸ்போ" கண்காட்சி BMICH இல் ஆரம்பமானது இலங்கை போஹ்ரா முஸ்லிம்களின் "போஹ்ரா பிசினஸ் எக்ஸ்போ" கண்காட்சி Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

அலி சப்ரி பதவியில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு முன்னேற்றம் இருக்காது: சாணக்கியன்



நேற்றைய தினம் 07.12.2023 இடம்பெற்ற வெளிவிவகார
அமைச்சு தொடர்பான விவாதத்தின் போது. “நிலைக்கால நீதி” என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வித முன்னேற்றமும் இல்லாததாக உள்ளது.


ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்படாது என்பது உறுதியான விடயமாகும்.


கடந்த இரு வாரங்களிலும் நடைபெற்ற கைதுகள் மற்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகளைப் பார்க்கும் போது இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தினை செயற்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.


இதைப் பற்றி இச் சபையில் பேசி எவ்வித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை என்பது தெரியும்.


இருப்பினும் அலி சப்ரி அவர்களின் செயற்பாடு சிங்கள மற்றும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு என்ன தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளது?


நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதியானது பில்லியன் தொகையில் உள்ளது.


உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 1.1 பில்லியனுக்கும் அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட நிதி மீள கொண்டுவரப்பட்டுள்ளது.


அத்துடன் நைஜீரியா நாட்டிலும் கொள்ளையடிக்கப்பட்ட நிதி மீள கொண்டுவரப்பட்டுள்ளது.


இவ்வாறு பல நாடுகளிலும் கொள்ளையடிக்கப்பட்ட நிதி மீள கொண்டுவரப்பட்டுள்ளது.


கடந்த வருட போராட்டத்தின் போதும் “Gota Go Home” எனவும், “சூறையாடிய பணத்தினை மீண்டும் கொடு” எனவுமே மக்கள் கோஷம் எழுப்பினர்.


ஒரு நாட்டின் வெளி விவகார அமைச்சரே நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிதியினை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையினை ஆரம்பிக்க வேண்டும்.


ஆனால் கோட்டபாயவிற்கு எதிரான நடவடிக்கைகளை அலி சப்ரி செய்தாரா?


எனும் கேள்வி மக்கள் மத்தியில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.


ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக வரும் போது புலம்பெயர் தேசத்துடன் பல தொடர்புகளை மேற்கொண்டு பல முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இது வரை ஒரு ரூபாய் நிதி கூட பெற முடியவில்லை.

அண்மையில் நடைபெற்ற Coop 28 கூட்டத்திற்கு ஜனாதிபதியுடன் இணைந்து பலர் சென்றனர். ஆனால் இவர்கள் காலநிலை பற்றிய எவ்வித அறிவினையும் கொண்டிருக்கவில்லை.


அந்த துறையுடன் இணைந்த நிபுணர்களுக்கே இருக்கை இருக்கவில்லை. பாணமையில் மேற்கொள்கின்ற மண் அகழ்வினால் “Sand Dunes” மண் திட்டுக்கள் அகற்றப்படுகின்றது.


அதே போல பல இடங்களிலும் சுற்று சூழல் சமநிலைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் மண் அகழ்வின் காரணமாக கடற்கரைகளே அழிந்து போகின்றன.


இதை பற்றிய கரிசனையினை உள்நாட்டினுள் எடுக்காமல் வெளிநாடுகளுக்கு என்ன இணக்கம் காண்பதற்கு இவர்கள் செல்கின்றார்கள் என்பது தெரியவில்லை. கனடா போன்ற நாடுகளுடன் இருந்த நட்புறவினை முழுமையாக நாசம் செய்துள்ளார் இவ் அலி சப்ரி.
அலி சப்ரி பதவியில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு முன்னேற்றம் இருக்காது: சாணக்கியன் அலி சப்ரி பதவியில் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு முன்னேற்றம் இருக்காது: சாணக்கியன் Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இப்போது பாதியாகி விட்டது ; அக்கட்சி எம்.பி எஸ். பி. திஸாநாயக்க



ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இல்லை எனவும் அதில் பாதியளவு வாக்குகள் மட்டுமே இருப்பதாகவும் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கட்சி வீழ்ச்சியடைந்து விட்டதாகவும், கட்சியை மறுசீரமைத்து புதிதாக உருவாகும் கட்சியாக முன்னோக்கி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம் மாறி வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதை தவிர்க்க முடியாது. பொதுத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறு செயற்படும் என்பது குறித்து கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட இடைவெளியில் பெரும் பற்றாக்குறை நிலவுவதால் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர வேண்டுமானால் சிறு வணிகர்கள் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான பணத்தை பட்ஜெட் மூலம் ஒதுக்க முடியாது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இப்போது பாதியாகி விட்டது ; அக்கட்சி எம்.பி எஸ். பி. திஸாநாயக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இப்போது பாதியாகி விட்டது ; அக்கட்சி எம்.பி எஸ். பி. திஸாநாயக்க Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

சாய்ந்தமருதில் இயங்கிய சட்டவிரோத மதரஸாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை



சாய்ந்தமருதில் இயங்கியது சட்டவிரோத மதரஸா : இந்த சட்டவிரோத மதரஸாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை.

நூருல் ஹுதா உமர்

அண்மையில் குர்ஆன் மனனம் செய்யும் மாணவன் மர்மமான முறையில் மரணித்த சம்பவத்தோடு தொடர்புடைய மதரஸத்து ஷபீலித் ரஷாத் என்ற மதரஸா முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் ஒரு குர்ஆன் மதரஸாவாக (MRCA/QM/AM/303) பதிவு செய்யப்பட்டுள்ளது.. குர்ஆன் மதரஸாவாக பதிவு செய்யப்படும் ஒரு நிறுவனம் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் சுற்றறிக்கைகளுக்கு அமைய ஒரு ஹிப்லு மதரஸாவாக செயல்பட முடியாது. குர்ஆன் மதரசாக்கள் மாணவர்கள் தங்கி இருந்து படிப்பதற்கான விடுதி வசதியை வழங்க முடியாது என்பதோடு ஹிஃப்ளூ மதரஸாக்கள், அரபிக் கல்லூரிகள் மாத்திரமே மாணவர்கள் தங்கியிருந்து படிப்பதற்கான வசதிகளை வழங்க முடியும்.குர்ஆன் மதரஸாவாகப் பதிவுசெய்யப்பட்ட மதரஸத்து ஷபீலித் ரஸாத், ஹிஃபுளூ மதரஸாவாகச் செயல்பட்டது ஒழுங்கு விதிகளுக்கும், திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணானது ஆகும்.

மேலும், இது குறித்த மேலும் கருத்து தெரிவித்த நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் விதிமுறைகளின்படி மதரசத்து ஷபீலித் ரஸாத்தின் சொத்துக்கள் வக்ஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மதரஸாவின் நிலம் மற்றும் வளாகம் வக்ஃப் செய்யபடாமல் தனி நபருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டுகள்களும் இன்று எழுந்துள்ளது.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில், இந்த மதராசாவின் செயல்பாடுகள் குறித்து உடனடி விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறும் விசாரணை முடியும் வரை அதன்குறித்த மதரஸாவின் பதிவை இடைநிறுத்தி வைக்க நீதிக்கான மய்யம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை விடுப்பதோடு திணைக்களத்தின் விதிமுறைகளை வெளிப்படையாக மீறியதற்காக மதரசத்து ஷபீலித் ரஸாத்தின் நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

சாய்ந்தமருதில் இயங்கிய சட்டவிரோத மதரஸாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை சாய்ந்தமருதில் இயங்கிய சட்டவிரோத மதரஸாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திடம் கோரிக்கை Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

தேசிய ‘முவே தாய்’ 2023 சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி மாணவன் சஜித் இஸ்மி தங்கப்பதக்கம் .



கந்தளாய் யூசுப்
நான்காவது தேசிய மட்ட ‘முவே தாய்’ 2023 ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு நாள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

கண்டி க/கழுகமுவ மு.ம. மகாவித்தியாலய கெலிஓயா மாணவன் சஜித் இஸ்மி தாய்’  2023  சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் . 

இலங்கை முவே தாய் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போட்டியில் 12, 14, 16, 18, 23  மற்றும் 40 வயது முவே  தாய் வீரர்கள் கலந்துகொண்டு அத்தோடு இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை மற்றும் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) உட்பட 29 கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600 இற்கும் அதிகமான முவே தாய் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பங்குபற்றிய வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது 12 சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவற்றுள் 06 விருதுகளை இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி முவே தாய் கழகமான ‘IMA Sri Lanka’ கழகம் சுவீகரித்தம்மை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் முன்னணி  முவே தாய் குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளர்  எம்.எச்.எம்.பாஹாட்  அவர்கள் பயிற்றுவித்து வருகிறார்.

119 வீரர்கள் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதிக பதக்கங்களை வென்றெடுத்தனர்.
தங்கம் (45) , வெள்ளி (22), வெண்கலம் (36)

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க மற்றும் விளையாட்டு அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்கள்  பலரும்  கலந்து கொண்டனர்.
தேசிய ‘முவே தாய்’ 2023 சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி மாணவன் சஜித் இஸ்மி தங்கப்பதக்கம் . தேசிய ‘முவே தாய்’  2023  சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி  மாணவன் சஜித் இஸ்மி தங்கப்பதக்கம் . Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

கௌதம் கம்பீரின் பார்வை இம்முறை தில்ஷான் மதுஸங்க மீது ... ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட வாய்ப்பு.



 எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தில்ஷான் மதுஸங்க அதிக விலைக்கு வாங்கப்படலாம் என இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீரின் பார்வை இம்முறை தில்ஷான் மதுஸங்க மீது இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக தில்ஷான் மதுஸங்க ஆறு முதல் எட்டு கோடிக்கு ஏலத்தில் விற்கப்படலாம் எனவும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.

கௌதம் கம்பீரின் பார்வை இம்முறை தில்ஷான் மதுஸங்க மீது ... ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட வாய்ப்பு. கௌதம் கம்பீரின் பார்வை இம்முறை தில்ஷான் மதுஸங்க மீது ...  ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட வாய்ப்பு. Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதே ஜனாதிபதியின் திட்டம் ; முஷாரப் M.P



 ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது ஜனாதிபதியின் திட்டமாகும் - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது ஜனாதிபதியின் திட்டமாகும் என பிரதேச அபிவிருத்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் (8) இடம்பெற்றது


நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது, நமது நாட்டில் அரச சேவையாளர்கள் அதிக அளவில் உள்ளனர் இவர்களுக்கான செலவினங்கள் வருடாந்தம் பல மில்லியன் ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐ.எம்.எப் அறிக்கையின் பிரகாரம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசனை வழங்கப்படுகிறது எனினும் ஒவ்வொரு ஆண்டும் இருந்த அரசியல் சூழல்கள், நெருக்கடிகளால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  திடீரென அவர்களை இப்போது தூக்க முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும் இதற்காக சுற்றுலா பயணிகளை அதிகளவில் நம் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.


2023 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது ஒரு பெரிய அடைவாகும். 2024ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வர வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய எண்ணமமாகும். அண்மையில் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அதில் இலங்கையில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி இலங்கைக்கு இருக்கிறது.  இலங்கையினுடைய சுற்றுலா தளங்கள், காலநிலை, இயற்கை போன்ற அம்சங்கள் இதற்கு வழி வகுக்கின்றன. ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்குள் கொண்டு வருவது ஜனாதிபதி அவர்களுடைய எண்ணத்தில் உள்ள விடயமாகும். அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து செல்வதால் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இதற்கு நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.


பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாம் ஒழுங்கமைக்கும் போது சில திணைக்களின் பொறுப்பு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை அதனால் தீர்மானங்களையும் பொதுமக்களுக்கான சேவைகளையும் வழங்குவதில் நாம் இழுத்தடிப்பு செய்கின்றோம். எனவே 2024 ல் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டி உள்ளது திணைக்களங்களுடைய பொறுப்புதாரிகள் கட்டாயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் எதிர்கொள்ளும் வீட்டு திட்டம், காணி, குடிநீர், கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், மின்சாரம், வீட்டுதிட்டம், வீதி அபிவிருத்தி, காட்டு யானைகளால் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன அதே நேரம் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


இந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளரின் கணக்காளர் றிஸ்வி யஹ்சர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராசா, பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதே ஜனாதிபதியின் திட்டம் ; முஷாரப் M.P  ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதே ஜனாதிபதியின் திட்டம் ; முஷாரப்  M.P Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்தது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது .



நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2014ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


அதன்படி, இவ்வருடம் ஜூலை 1ஆம் திகதி வரையான கடந்த வருடத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 268,920 ஆக குறைந்துள்ளது.


2022 ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 275,321 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


2021 ஆம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2020 இல் 03 லட்சத்திற்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.


இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6,401 ஆக குறைந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,786 பிறப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


நாட்டில் வருடாந்தப் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளது சுகாதார அமைச்சின் அறிக்கைகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள்  சங்கத்தின் தலைவி  தேவிகா கொடித்துவக்கு, நாடளாவிய ரீதியில் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்தது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது . இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்தது மீண்டும்  உறுதிப்படுத்தப்பட்டது . Reviewed by Madawala News on December 08, 2023 Rating: 5
Powered by Blogger.