பெளத்த மதத்தை அவமதித்த நடாஷாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.



பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரிய, எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, நிதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
பெளத்த மதத்தை அவமதித்த நடாஷாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. பெளத்த மதத்தை அவமதித்த நடாஷாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி... மேலும் 8 பேர் படுகாயம்



அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியின் ஆலங்குளம் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


4 வயது குழந்தை மற்றும் 38 வயதான கார் சாரதி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த காரின் சாரதி உறங்கியதால் கார் வீதியை விட்டு விலகி அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்து நேற்று (27) இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு கார்களில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் மீட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி... மேலும் 8 பேர் படுகாயம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி... மேலும் 8 பேர்  படுகாயம் Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

டயானா கமகேவின் முயற்சியில் தாமரை கோபுரத்தில் கெசினோ மற்றும் பொழுதுபோக்கு மைய திட்டம் தோல்வி.



சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்துள்ளநிலையில், கொழும்பின் தாமரை கோபுரம், அதன் 44,000 சதுர அடி இரண்டாவது மாடிக்கு முதலீட்டாளர்களைத் தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Kreate Design PTE என்ற சிங்கப்பூர் நிறுவனம் கடந்த ஆண்டு தாமரை கோபுர மேலாண்மை நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் (LTMC) உடன் கோபுரத் தளத்தின் இரண்டாம் மாடிக்காக ஒப்பந்தம் செய்தது.

இந்த கையொப்பமிடும் நிகழ்வில் அமைச்சர் டயானா கமகே மற்றும் அரச சுற்றுலாத்துறை அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அரோஷ பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

எனினும் ஒப்பந்தம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும், தேவையான சூதாட்ட உரிமத்தை நிறுவனம் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்தநிலையில் கோரிக்கையின் பேரில் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த காலப்பகுதியிலும் நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை.

எனவே தற்போது குறித்த தளம் மீண்டும் வாடகைக்கு விடும் நோக்கில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

மூன்று வருடங்களில் மொத்தமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்ளீட்டில் இலங்கையின் "முதல் வெளிநாட்டு நிதியுதவி கெசினோ மற்றும் பொழுதுபோக்கு மையத்தை" Kreate திறக்கும் என்று அமைச்சர் கமகே முன்னதாக கூறியிருந்தார்.

தாமரை கோபுரத்தின் கணிசமான இடம் ஏற்கனவே உணவு வழங்குபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதுவரை 828,000 க்கும் அதிகமான மக்கள் - அவர்களில் 14,700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
டயானா கமகேவின் முயற்சியில் தாமரை கோபுரத்தில் கெசினோ மற்றும் பொழுதுபோக்கு மைய திட்டம் தோல்வி. டயானா கமகேவின் முயற்சியில் தாமரை கோபுரத்தில் கெசினோ மற்றும் பொழுதுபோக்கு மைய திட்டம் தோல்வி. Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீம், வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் வழி ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.



ஆகக் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு எம்.பியொருவரை நீக்குவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு எம்.பி ஒருவரை நீக்க முடியாது.


அரசியலமைப்பில் அவ்வாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, அந்த எம்.பி, வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் பயன்படுத்தும் வழியாக நாட்டுக்குள் நுழைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

மே மாதம் இது​வரையான காலப்பகுதியில் மட்டும் ஐந்து தடவைகள் அவர் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த எம்.பி (தங்கத்தை கடத்தி வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்), தங்கத்தை கடத்திவந்து சிக்கிக்கொண்ட மறுநா​ளே, மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடைபெற்ற நாளன்று வந்த அவர், தன்னை யாரும் காப்பாற்றவில்லை. ஆகையால், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்ததாக கதையைக் கூறுகின்றார். இது நல்ல நாடகம்.

இந்த நாடகத்துக்கான கதை, திரைகதை வசனம், நடிப்பு உள்ளிட்டவற்றுக்கு இம்முறை ஜனாதிபதி விருது வழங்கப்படவேண்டும். இல்லையேல் ரஹிம், சுமத்திபால ஆகிய விருதுகள் வழங்கப்படவேண்டும்.

இந்த கதை எவ்வளவு அவமானமானது. அரசாங்க ஊழியர் ஒருவர், இவ்வாறு தங்கத்தை கடத்திவந்து சிக்கிக்கொண்டு, 75 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்தினால், அவரை விட்டுவிடுவார்களால், அரச தொழிலையும் அவர் இழக்கவேண்டும்.

எனினும், தங்க எம்.பியால் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பூஜ்ஜியத்துக்குச் சென்று மறை (-) க்குச் சென்றுள்ளது.

ஆகையால், அவர் அங்கம் வகிக்கும் கட்சி, அரசாங்கம் அவர் தொடர்பில் நடவடிக்கைகயை எடுக்கவேண்டும். ஆகக்குறைந்தது அந்த மாவட்ட (புத்தளம்) அபிவிருத்தி குழுவின் தலைவர் பதவியில் இருந்தாவது நீக்கவேண்டும் என்றார்.
அலி சப்ரி ரஹீம், வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் வழி ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.  அலி சப்ரி ரஹீம், வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் வழி ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார். Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்ற இளைஞரை கைது செய்துள்ளோம்.



எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.


சனிக்கிழமை (27) மாலை பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த மாணவியிடமே குறித்த நபர், பாலியல் சேஷ்டை புரிய
முயன்றுள்ளார்..


தாக்குதலுக்குள்ளான மாணவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
.

இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதனால் பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்ற இளைஞரை கைது செய்துள்ளோம். அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய  முயன்ற இளைஞரை கைது செய்துள்ளோம். Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு.



புத்தல, கோனகங்கார பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புத்தல, கோனகங்கார வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று (27) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று பிற்பகல் குறித்த இரு இளைஞர்களும் வயல் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த 31 மற்றும் 32 வயதுடைய இரு இளைஞர்களும் புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து கோனகங்கார பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு.  இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

பௌத்த மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் !



பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால் பௌத்தர்கள் கொதித்தெழுவார்கள் ..


பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால் பௌத்தர்கள் கொதித்தெழுவார்கள் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.


நடாஷா என்ற யுவதி  ஸ்டேண்ட் அப் கொமடி  நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை அவமதித்து பேசியமை தொடர்பில் கருத்து கூறிய அவர் இதனை குறிப்பிட்டார்.


பௌத்த மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் ! பௌத்த மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் ! Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

ஜனாஸா அறிவித்தல் ; சம்மாந்துறை யூ. எல். ரஷீட் கொழும்பில் காலமானார்.



சம்மாந்துறை, விளினியடி மூன்றாம் பிரிவைச் சேர்ந்த யூ.எல்.ரஷீட் (42) தொழில் நிமித்தம் கொழும்பில் வசித்து வந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை முஅல்லா மஹல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்.

தகவல் : சம்மாந்துறை அன்சார்
ஜனாஸா அறிவித்தல் ; சம்மாந்துறை யூ. எல். ரஷீட் கொழும்பில் காலமானார்.  ஜனாஸா அறிவித்தல் ; சம்மாந்துறை யூ. எல். ரஷீட்  கொழும்பில் காலமானார். Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

சில பிரதேசங்களில் இன்று மழை எதிர்பார்ப்பு.



சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய, கிழக்கு,வடமத்திய,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

சில பிரதேசங்களில் இன்று மழை எதிர்பார்ப்பு.  சில பிரதேசங்களில் இன்று மழை எதிர்பார்ப்பு. Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

பெளத்த மதத்தை அவமதித்து விட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நடாஷா கைது.



கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையிலேயே நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.



நடாஷா எதிரிசூரியவிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்த பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெளத்த மதத்தை அவமதித்து விட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நடாஷா கைது. பெளத்த மதத்தை அவமதித்து விட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நடாஷா கைது. Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5

மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு.



பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு நதாஷா என்ற யுவதிக்கு கிடைத்தது.

அதன் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.

பௌத்த பாடசாலைகள் குறித்தும் அவர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார்.

அந்த அறிக்கையில் அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு. மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்  முறைப்பாடு. Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

முன்னாள் காதலியின் திருமண தினத்தில் ஆசிட் வீசிய காதலன் - படுகாயமடைந்த மணப்பெண் வைத்தியசாலையில் அனுமதி #இலங்கை



வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



இன்று அதிகாலை 03 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அமிலத்தை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.



படுகாயமடைந்த யுவதி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



தாக்குதலுக்கு உள்ளான யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை முறித்துக் கொண்டார்.



இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அமில வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முன்னாள் காதலியின் திருமண தினத்தில் ஆசிட் வீசிய காதலன் - படுகாயமடைந்த மணப்பெண் வைத்தியசாலையில் அனுமதி #இலங்கை  முன்னாள் காதலியின் திருமண தினத்தில் ஆசிட் வீசிய காதலன் -  படுகாயமடைந்த மணப்பெண் வைத்தியசாலையில் அனுமதி  #இலங்கை Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்...



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம், நேற்று முன்தினம் அவர் டுபாய்க்கு பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 கிலோ கிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளை, டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் கொண்டுவந்த தங்கம் மற்றும் கைபேசிகள் அரசுடமையாக்கப்பட்டன. குறித்த தங்கம் மற்றும் கைபேசிகள், தம்முடையதல்ல என்றும், அது தம்முடைய நண்பருடையதாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர,
இதுபோன்ற விடயங்கள் தொடர்பில், அவசியமான சட்டங்கள் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென, விசேட சிறப்புரிமை அவசியமில்லை. அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி, இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமானால், குறித்த நபரின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்ரசேன,
தங்கம் அரசுடமையாக்கப்பட்டு, 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிரச்சினை முடிவுறுத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.


இவ்வாறான குற்றம் இழைக்கப்பட்டால், சிறைத் தண்டனை அல்லது வேறு தண்டனை விதிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பு அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்... அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்... Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர்.



இந்தியா :
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த திங்கட்கிழமை விடுமுறைக்காக அங்குள்ள கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது விலையுயர்ந்த செல்போன்
(இந்திய ரூபாவில் 96,000) நீர்த்தேக்கத்தில் 15 அடி ஆழத்தில் விழுந்தது. விஸ்வாஸ் தனது செல்போனை தேடுமாறு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மோட்டார் பம்ப் கொண்டு வரப்பட்டு, நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் வெறியேற்றப்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை காலையில் அவரது செல்போன் மீட்கப்பட்டது.


இதுகுறித்து ராஜேஷ் விஸ்வாஸ் கூறும்போது, “ரூ.96,000 மதிப்புள்ள எனது செல்போன் நீர்த்தேக்கத்தில் விழுந்துவிட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை, துணை வட்டார அதிகாரியிடம் பேசினேன். அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் 5 அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது” என்றார். என்றாலும் நீர்த்தேக்கத்தில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதன் நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனிடையே உணவு ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸை கான்கெர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர். மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர். Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால் ஆத்திரமடைந்த பேரன், பாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடிய சம்பவம் பதிவு



பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டதாக கூறப்படும் 24 வயதான பேரனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் லீலாவதி விக்ரமசிங்க என்ற பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்மணி, சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் தனது தாயாருக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி இந்த கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால், ஆத்திரமடைந்து, சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, உடலை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்து பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.p
பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால் ஆத்திரமடைந்த பேரன், பாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடிய சம்பவம் பதிவு பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால் ஆத்திரமடைந்த பேரன், பாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடிய சம்பவம் பதிவு Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்து விட்டோம் ; மனோ



அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையைக் கொண்டுவர, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.


6 கோடி ரூபா பெறுமதியான, மூன்றரை கிலோ கிராம் தங்கத்தை, நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவரின் பயணப் பொதியில் இருந்து, 91 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்து விட்டோம் ; மனோ அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்து விட்டோம் ; மனோ Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்.. 2023 இல் இதுவரை 239 கொலைகள் பதிவாகின.



2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில், "2019 ஆம் ஆண்டில் 273 கொலைகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவாகியுள்ளன. இது தினசரி 1.6% அதிகரிப்பாகும். இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்புடையதல்ல." என்று குற்றப் பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கு வெற்றிகரமான வலுவான புலனாய்வு வலையமைப்பை இலங்கை பொலிஸார் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்
இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்.. 2023 இல் இதுவரை 239 கொலைகள் பதிவாகின. இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்.. 2023 இல் இதுவரை 239 கொலைகள் பதிவாகின. Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5

இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது : முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்



இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.



இதற்கு நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும் பங்களிப்புடன், பரீட்சார்த்தமாக கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது : முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்தார் இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது : முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்தார் Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.... வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.



பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழுவின் கூற்றுப்படி, வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளது,

எனவே அவர் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என அக்குழு மேலும் குறிப்பிடுகிறது.


குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.... வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை....   வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

ஆசிரியை பஹ்மிதா, ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவோடு விஜயம்.



கடந்த திங்கட்கிழமை (22) ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தரப்பிற்கும் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பிற்குமிடையில் இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து வழக்குகள் முடிவுறுத்தப்பட்ட நிலையில் உடன்பட்ட நிபந்தனைகளில் ஒன்றான ஆசிரியை பஹ்மிதா றமீஸின் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தர உயர்வு, சம்பள உயர்வுக்கான ஆவணங்களை உடனே கையெழுத்திடுவதாக அதிபர் தரப்பு ஏற்றிருந்தது.


வழக்கின் நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றும் முகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (23) குரல்கள் இயக்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்ஸான் றுஸ்தி மற்றும் தவிசாளர் சட்டமாணி றாஸி முஹம்மத் ஆகியோருடன் திரு. ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஆசிரியை பஹ்மிதா றமீஸ் ஹபாயா ஆடை அணிந்து சென்று தனது ஆவணங்களை அதிபரினால் கையெழுத்திடப்பட்டு பெற்றுகொண்டார்


எந்த பாடசாலைக் கதவுகளினூடாக ஆசிரியை பஹ்மிதா அவர்கள் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வெளியேறினாரோ, அதே கதவினூடாக ஹபாயா அணிந்த வண்ணம் நுழைந்து எந்த அதிபர் அலுவலகத்தில் இருந்து கடமையேற்க விடாமல் விரட்டப்பட்டாரோ அதே பாடசாலை அலுவலகத்தில் அதிபர் லிங்கேஸ்வரி முன்னால் ஹபாயாவோடு கதிரையில் அமர்ந்து கௌரவமாக தனது ஆவணங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆசிரியை பஹ்மிதா, ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவோடு விஜயம்.  ஆசிரியை பஹ்மிதா, ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவோடு விஜயம். Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

புத்தளம் பகுதியில் ஆசிரியரை தாக்கி கைதான 21 மாணவர்களும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



புத்தளம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இன்று அவர்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிவான் எஸ்.ஏ.எம்.சீ சத்துரசிங்ஹவினால், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, குறித்த 21 மாணவர்களும் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன், எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும், முறைப்பாட்டாளர் தரப்பை, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது தொடர்பில் அறியக்கிடைத்தால், பிணையை இரத்துச் செய்து, வழக்கு முடிவடையும் வரையில், அவர்களை விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


குறித்த வழக்கு, அடுத்த மாதம் 22ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.
புத்தளம் பகுதியில் ஆசிரியரை தாக்கி கைதான 21 மாணவர்களும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். புத்தளம் பகுதியில் ஆசிரியரை தாக்கி கைதான 21 மாணவர்களும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

என்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருகிறார்கள் - ஜெரோம் பெர்னாண்டோ



போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


குற்றப் புலனாய்வு திணைக்களம் தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


பிரதிவாதிகள் தன்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அவர்களைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிரதிவாதிகளுக்கு வழங்குமாறும் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
என்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருகிறார்கள் - ஜெரோம் பெர்னாண்டோ என்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருகிறார்கள் - ஜெரோம் பெர்னாண்டோ  Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது... இருந்ததை விட முன்னெறியுள்ளோம் ; நிதி இராஜாங்க அமைச்சர்



“அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும், இதன்படி நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது எனவும்” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யாகூ பைனஸ் இணையத்தளத்தில் எமது நாடு ஆசியாவில் வறுமை நாடுகளின் பட்டியலில் 20 நாடுகளிடையே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அறிக்கையொன்றாக அது வெளியிடப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 2023 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். அந்த நிலைமையை விடவும் கடினமான நிலைமையில் இருந்து மீண்டு வருகின்றோம். இப்போது நாங்கள் முன்னேற முயற்சிக்கின்றோம். இருந்த நிலைமையை விடவும் முன்னெறியுள்ளோம்.


நாங்கள் அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு படியாக ஏறி வருகின்றோம். நாங்கள் இப்போது முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளோம் என்றார்.

நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது... இருந்ததை விட முன்னெறியுள்ளோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது... இருந்ததை விட முன்னெறியுள்ளோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

இலங்கையின் மிகவும் நீளமான கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும் ; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி



 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற எல்லை நிர்ணய கூட்டத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் மற்றும் கட்சியின் உபதலைவர் ஜெஸ்மின் மௌலவி அவர்களும் கலந்துகொண்டனர்.


இதன் போது


உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளுக்கான‌ எல்லை நிர்ண‌ய‌ க‌மிட்டிக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி பின்வ‌ரும் யோச‌னைக‌ளை முன் வைத்தது.


1. எல்லை நிர்ண‌ய‌ க‌மிட்டியின் நோக்க‌ம் உள்ளூராட்சி தேர்த‌லின் வ‌ட்டார‌ உறுப்பின‌ர்க‌ளை குறைப்ப‌து என‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து.


அந்த‌ நோக்க‌த்தை நிறைவேற்றுவ‌தாயின் ப‌ழைய‌ முறைப்ப‌டி விகிதாசார‌ தேர்த‌ல் முறையே சிற‌ந்த‌தாகும்.


2. சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு பாதிப்பில்லாத‌ வ‌கையிலான‌ தேர்த‌ல் என்ப‌து விகிதாசார‌ தேர்த‌ல் முறையே ச‌ரியான‌து.


3. அத்துட‌ன் சிறு க‌ட்சிக‌ளுக்கும் உறுப்புரிமை கிடைக்கும் வ‌கையில் விகிதாசார‌ முறையுட‌ன்  மேல‌திக‌ வேட்பாள‌ர் ப‌ட்டிய‌ல் த‌யாரிக்க‌ப்ப‌ட்டு ஒரு உள்ளூராட்சி ச‌பைக்கு தெரிவாகும் மொத்த‌ உறுப்பின‌ர் தொகையில் 20 வீத‌மானோர் உறுப்பின‌ர் பெறாத‌ க‌ட்சிக‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் வ‌கையில் தேர்த‌ல் திருத்த‌ம் மேற்கொள்ள‌ வேண்டும்.


அத்துடன்;


04. கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும்


இலங்கையின் மிகவும் நீளமான (73 கி.மி.) பிரதேச சபையாக கல்பிட்டி பிரதேச சபை இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. கடையாமோட்டை உப சபை அமைக்கப்பட்டாலும் அதன் மூலம் மக்கள் முழுமையான பயனை அடைய முடியாத நிலையள்ளது. எனவே கடையாமோட்டை பிரதேச உப சபையை கடையாமோட்டை பிரதேச சபையாக மாற்றி மக்கள் சிரமத்தை போக்க வழியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.



05. கல்பிட்டி பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட வேண்டும்


கடல் வள‌ம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் பிரதேசமாக கல்பிட்டி பிரதேசம் விளங்குகிறது. எனவே இப்பிரதேசத்தை நகரசபையாக மாற்றி அதற்குண்டான அபிவிருத்தி பணிகளை செய்வதனூடாக இலங்கையின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கல்பிட்டி நகர் பெரும் பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறோம். 


06. புத்தளம் நகர சபை மாநகர சபையாக மாற்றப்பட்டது. இருப்பினும் புத்தளம் நகர எல்லைக்குள் இருக்கும் முள்ளிபுரம் மற்றும் மணல்தீவு ஆகிய வட்டாரங்கள் புத்தளம் பிரதேச சபையுடனே இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நகர எல்லைக்குள் இருக்கும் அப்பிரசங்களுக்கு சுத்திகரிப்பு பணிகள் உட்பட்ட அனைத்துவிதமான பணிகளும் நடைபெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே குறித்து  வட்டாரங்களை புத்தளம் மாநகரசபையுடன் இணைப்பதன் மூலம் அபிவிருத்திகளை சிரமமின்றி தொடரலாம் என்று நம்புகிறோம்.


07. உள்ளூராட்சி ச‌பைக‌ளின் எல்லை பிர‌ச்சினை எனும் போது நீண்ட‌ கால‌மாக‌ சாய்ந்த‌ம‌ருது பிர‌ச்சினை உள்ள‌து. இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ வ‌ழ‌க்கொன்றும் உள்ள‌து. அதே போல் க‌ல்முனை த‌மிழ் ம‌க்க‌ளுக்கென‌ செய‌ல‌க‌ கோரிக்கையும் உள்ள‌து.


பிர‌தேச‌ ச‌பைக‌ளோ, பிர‌தேச‌ செய‌ல‌க‌ங்க‌ளோ இன‌ ரீதியாக‌ அமைக்க‌ப்ப‌ட‌ முடியாது என்ப‌தை நாம் அறிவோம். 


இந்த‌ வ‌கையில் க‌ல்முனையை மூன்று பிர‌தேச‌ங்க‌ளாக‌ பிரித்து எல்லையிட்டு உள்ளூராட்சி ச‌பை வ‌ழ‌ங்கும் யோச‌னையை எம‌து க‌ட்சி முன் வைக்கிற‌து.


அவையாவ‌ன‌.

1. மாளிகைக்காடு முத‌ல் ஸாஹிரா க‌ல்லூரி வ‌ரையான‌ எல்லையில் "சாய்ந்த‌ம‌ருது ந‌க‌ர‌ ச‌பை"

2. ஸாஹிரா வீதி முத‌ல் தாள‌வ‌ட்டுவான் வீதி வ‌ரை ந‌ற்பிட்டிமுனை உள்ள‌ல‌ட‌ங்க‌லாக‌ " க‌ல்முனை ந‌க‌ர‌ ச‌பை அல்ல‌து மாந‌க‌ர‌ ச‌பை"

3. தாள‌வ‌ட்டுவான் வீதி முத‌ல் ம‌ருத‌முனை வ‌ரை "பாண்டிருப்பு பிர‌தேச‌ ச‌பை" அத்துட‌ன் பாண்டிருப்பு செய‌ல‌க‌மும்.

ம‌ருத‌முனை, நீலாவ‌ணை ம‌க்க‌ள் விரும்பினால் க‌ல்முனையுட‌ன் அல்ல‌து பாண்டிருப்புட‌ன் இணைய‌ முடியும்.


மேலே நாம் சொன்ன‌ யோச‌னைக‌ளை எல்லை நிர்ண‌ய‌ க‌மிட்டி ஏற்றுக்கொண்டு இவ‌ற்றை அறிக்கையிடும் ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌ய‌வாய் கேட்டுக்கொள்கிற‌து.

இலங்கையின் மிகவும் நீளமான கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும் ; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி இலங்கையின் மிகவும் நீளமான கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும் ; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5

QR முறையில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும்.



நாட்டில் தற்போது QR முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.


அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக பிரிவுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
QR முறையில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும். QR முறையில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும். Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5
Powered by Blogger.