முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நான் எனது தனிப்பட்ட செல்வத்தை செலவழித்துள்ளேன் ; திலித் ஜயவீர
முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் இலங்கை நாட்டை ஊக்குவிப்பதற்காக தாம் தனிப்பட்ட முறையில் தலையிட்டதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் தனது தனிப்பட்ட செல்வத்தை செலவழித்து தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து ‘நமக்காக நாம்’ என்ற செயற்திட்டம் தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தன் கையில் இருந்த பணத்தைச் செலவழித்து தயாரிக்கப்பட்ட '‘நமக்காக நாம்’ நிகழ்ச்சியின் காரணமாக இளைஞர்கள் வரிசையில் நின்று ராணுவத்தில் சேர்ந்ததாகவும், இதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என்றும் அவர் கூறுகிறார்.
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நான் எனது தனிப்பட்ட செல்வத்தை செலவழித்துள்ளேன் ; திலித் ஜயவீர
Reviewed by Madawala News
on
March 25, 2024
Rating: