1998ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேற்று 22 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கபட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.



 களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, நேற்று (26) தீர்ப்பளித்தார். 


குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா 1 இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் எம்.பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியன்று களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் எம்.பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


1998ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேற்று 22 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கபட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு  நேற்று  22 வருட கடூழிய சிறை தண்டனை  விதிக்கபட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. Reviewed by Madawala News on October 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.