இன்று சில பிரதேசங்களில் ஓரளவு மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு.



 மத்திய, சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடும்.


ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற வேளைகளில்   பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட  திசைகளில் இருந்து காற்று வீசும். 


காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 

இன்று சில பிரதேசங்களில் ஓரளவு மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு. இன்று சில பிரதேசங்களில்  ஓரளவு மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு. Reviewed by Madawala News on October 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.