புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தடுக்கும் நோக்கில் இடம்பெற்ற கைதுகள் - மதுபானம், சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்திய 169 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில், மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்திய 169 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கலால் திணைக்களத்தின் சைபர் குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளுக்கு உதவி வழங்கியுள்ளது.
அரசாங்கம் பெருமளவில் மதுபானம் மற்றும் புகையிலை ஆகிய இரண்டின் வரிப்பணத்தில் தங்கியிருப்பதாக பலர் கூறுகின்ற போதிலும், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தடுப்பதே இந்த கைது நடவடிக்கைகளின் நோக்கமெனவும் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தடுக்கும் நோக்கில் இடம்பெற்ற கைதுகள் - மதுபானம், சிகரெட்டுகளை இணையத்தில் விளம்பரப்படுத்திய 169 பேர் கைது செய்யப்பட்டனர்.
Reviewed by Madawala News
on
September 22, 2022
Rating:

No comments: