இன்று சஜித் பிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசி வேண்டி பொத்துவிலில் விசேட துஆ பிரார்த்தனை.



ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய இளைஞர் சக்தியின் ஏற்பாட்டில்
 கௌரவ தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை-பொத்துவிலில்


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் இளைஞர் பிரிவான ஐக்கிய இளைஞர் சக்தியின் ஏற்பாட்டில் கட்சியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான கபூர் நிப்றாஸ் தலைமையில் விசேட துஆ பிரார்த்தனை ஒன்று இன்று 2022.01.12 நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ எச் அப்துல் ரகுமான் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

குறித்த நிகழ்வில் தலைவருடைய உடல் உள நலனுக்காகவும் நாட்டில் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வாழ பொருத்தமான ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் அமைப்பாளர் கபூர் நிப்றாஸ் நாட்டின் ஆட்சியாளர்களின் பிழையான கொள்கைகளினால் மக்கள் படும் இன்னல்கள் பற்றியும் சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள இலங்கை நாட்டின் நிலைமை பற்றியும் பேசியதுடன் இந்த நெருக்கடியை மாற்ற ஆட்சி மாற்றம் ஒன்று கட்டாயம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ எச் அப்துல் ரகுமான் மக்கள் இன்று உணவு பஞ்சத்தால் படும் அவஸ்தைகளை பற்றியும் பேசி ஆட்சி மாற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

குறித்த நிகழ்வில் இளைஞர்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று சஜித் பிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசி வேண்டி பொத்துவிலில் விசேட துஆ பிரார்த்தனை. இன்று சஜித் பிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசி வேண்டி பொத்துவிலில்  விசேட துஆ பிரார்த்தனை. Reviewed by Madawala News on January 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.