வெலிக்கடை சிறைக்கலவர வழக்கில் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவை குற்றமற்றவர் என விடுதலை செய்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்று, வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றை சட்டமா அதிபர் நியமித்தார்.
நீதியரசர்களான கிஹான் குலதுங்க, (தலைவர்) மஞ்சுள திலகரத்ன மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது
வெலிக்கடை சிறைக்கலவர வழக்கு.. முன்னாள் சிறை ஆணையாளர் எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை தீர்ப்பு.
Reviewed by Madawala News
on
January 12, 2022
Rating: