-ஹஸ்பர் ஏ ஹலீம்_
வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கும் பாகுபாடுகள் இன்றி அரச நியமனங்கள் வழங்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று(08) ஜனாதிபதி செயலக்த்தின் முன்னால் பட்டதாரிகளால் கவன ஈர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.நாடளாவிய ரீதியில் மூவாயிரத்து எழுநூற்றி நாட்பத்து நான்கு வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகள் காணப்படுகின்றனர்.
2015 ம் ஆண்டிற்கு முன்னர் வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் தற்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதானது மிகவும் வேதனையான தாகும்.
எனவே மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் கற்று பல்கலைக்கழக பட்டத்தினை பெற்ற எமக்கும் பாரபட்சம் இன்றி அரச நியமனங்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன் வைத்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரச நியமனம் வழங்கக் கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் கவன ஈர்ப்பு போராட்டம் .
Reviewed by Madawala News
on
March 08, 2021
Rating: