புறவி சூறவாளியிலிருந்து பாதுகாப்பு பெற, 21000 குடும்பங்களை சேர்ந்த 75000 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் தங்க வைக்கபட்டனர். #திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் 237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில்

வைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21000 குடும்பங்களை சேர்ந்த  75000 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எப்.முபாரக்

புறவி சூறவாளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள நேற்று(2) மாலை தெரிவித்தார்.


மாவட்டத்தில்  237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21000 குடும்பங்களை சேர்ந்த  75000 அங்கத்தவர்கள் தங்க முடியும்.குறிப்பாக கரையோரங்களில்  மற்றும் அவதானம்மிக்க பிரதேசங்களில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இடைத்தங்கல் நிலையங்களுக்கு  செல்லுமாறும் இடைத்தங்கள் நிலையங்களில் மக்களுக்கான ஏற்பாடுகள் உரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


நேற்று(2) மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 279 குடும்பங்கள் தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களிலும் 1700 குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும் உள்ளதாகவும் 

முப்படை, பொலிசார் , சிவில் பாதுகாப்புபடை, பிரதேச செயலாளர்கள் உட்பட உரிய அனைத்து தரப்பினரும் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படும் இடத்து மக்களை பாதுகாக்க தயார் நிலையில் உள்ளதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

புறவி சூறவாளியிலிருந்து பாதுகாப்பு பெற, 21000 குடும்பங்களை சேர்ந்த 75000 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் தங்க வைக்கபட்டனர். #திருகோணமலை புறவி சூறவாளியிலிருந்து பாதுகாப்பு பெற,  21000 குடும்பங்களை சேர்ந்த  75000  பேர் இடைத்தங்கல் நிலையங்களில் தங்க வைக்கபட்டனர். #திருகோணமலை Reviewed by Madawala News on December 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.