யாழ். வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு IS பெயரில் வெடிகுண்டு மிரட்டல்!

யாழ்ப்பாணம் வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ் தீவிரவாத
 இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் அங்கு இன்று (31) பெரும் பரபரப்பான நிலை தோன்றியது.


யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்ப்பட்டுள்ளது. 


அப்போது குறித்த கல்லூரியின் அதிபர் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிவித்து அவரது வீட்டு முகவரி தபால் ஊழியரிடம் வழங்கப்பட்டது.


இதனையடுத்து குறித்த கடிதம் முன்னாள் அதிபரின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது . 


கடிதத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் அதிபர் அதனை வாசித்தபோது வேம்படி மகளிர் கல்லூரியில் அடுத்த மாதம் குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெறவுள்ளது. 


இந்தத் தாக்குதலை ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொள்ளவுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து இந்த விடையத்தை கல்லூரியின் தற்போதைய நிர்வாகத்துக்கு அவர் தெரியப்படுத்தியதுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் இன்று முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.


 இந்த நிலையில் அங்கு சற்று நேரம் பரபரப்பான நிலைமை தோன்றியிருந்தது.

 (தி.சோபிதன்) metro
யாழ். வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு IS பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! யாழ். வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு IS பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! Reviewed by Madawala News on October 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.