மதுஷுடன் கைது செய்யப்பட்ட அமல் பெரேரா DIG நாலக சில்வாவுடன் நெருங்கிய தொடர்பில்
இருந்தமை அம்பலமாகியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சதி தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தனர்.
கடந்த 2016 இல் அமல் பேரேரா டி ஐ ஜி நாலக சில்வாவை சந்திக்க வந்தது ஏன் என அவரிடம் கேட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது டி ஐ ஜி நாலக சில்வா ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தமை மற்றும் அவரை இடம்மாற்றம் செய்தமை தொடர்பில் நீதி மன்றுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே மதுஷ் ஊடாக நாலக சில்வா ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை செய்ய சதி திட்டம் தீட்டியமை தொடர்பில் நாமல் குமார தகவல் வெளியிட்ட நிலையில் சி ஐ டி யினர் இந்த தகவலை நீதி மன்றுக்கு அறிவித்தனர்.
மதுஷ் - அமல் பெரேரா - DIG நாலக சில்வா இடையேயான தொடர்பு ; CID விசாரணைகள் ஆரம்பம்
Reviewed by Madawala News
on
February 13, 2019
Rating: