பிரபல பாதாள உலக கோஷ்டி தலைவன் என அறியப்படும் மாகந்துரே மதுஷ் உடன் கைது
செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரானின் சகா என்ற சந்தேகத்தில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதான மொஹம்மட் நிஸ்தார் மொஹம்மட் அஸ்வர் என்பவரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார். ஆமர் வீதியைச் சேர்ந்த அவர், கஞ்சிபான இம்ரானின் நிதி விவகாரங்களைக் கையாண்டுள்ளதுடன், இம்ரானுக்கு சொந்தமான கட்டடம் ஒன்றினையும் நிர்வகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகந்துர மதூஷின் சட்டவிரோதமான மனைவியின் சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய சகா கைது !!
Reviewed by Madawala News
on
February 13, 2019
Rating: