சுமார் ஒன்றரைக்கோடி பெறுமதியான தங்கத்துடன் கண்டி பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மூவர் சிக்கினர்.


ஒரு கோடியே 43 இலட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாய் பெறுமதியான 2.4 கிலோகிராம்  தங்கத்துடன்
மூன்று இலங்கையர்கள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மும்பாயில் இருந்து வந்துள்ளதாக  விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

24 தங்க பிஸ்கட்கள் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் 48 பகுதிகளாக 6 உலோக குழாய்களில் மறைத்து கடத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2,399.81 கிராம் எனவும் அவை சுமார் 14,398,860 ரூபா பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 48, 46 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கண்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒன்றரைக்கோடி பெறுமதியான தங்கத்துடன் கண்டி பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மூவர் சிக்கினர். சுமார்  ஒன்றரைக்கோடி பெறுமதியான தங்கத்துடன் கண்டி பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் மூவர் சிக்கினர். Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.