மூடிய பொருளாதாரம் ஒரு தீர்வல்ல




மூடிய பொருளாதாரம் ஒரு தீர்வல்ல என்று  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அமைச்சர் பொருளாதாரம் மேலும் தளர்த்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை எல்லை மீறிச் சென்றால் உணர்வு பூர்வமான அரசாங்கம் என்ற வகையில் அதன் சுமையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர.கூறினார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போக்கு நாட்டில் இல்லை என்று வலியுறுத்திய அவர் தற்போதைய அரசாங்கம்  2015ம் ஆண்டில் நாட்டை நெருக்கடி நிலைக்கு இட்டுச் சென்ற பொருளாதாரத்தையே பொறுப்பேற்றுக் கொண்டது. 1990ம் ஆண்டில் 21 சதவீதமாகக் காணப்பட்ட அரச வருமானம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது 11 தசம் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தது. 2014ம் ஆண்டில் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளி 601 பில்லியன் ரூபா வரை அதிகரித்திருந்தது. அடிக்கடி ஏற்படும் செலவினம் தொடர்ச்சியாக அதிகரித்ததனால் சிக்கல் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் எரிபொருளின் விலை எல்லை மீறிச் சென்றால் விலைச் சூத்திரம் எப்படி இருந்தாலும் உணர்வு பூர்வமான அரசாங்கம் என்ற வகையில் அதன் சுமையை ஏற்றுக் கொள்ளத் தயார் எனறும் கூறினார்.  
மூடிய பொருளாதாரம் ஒரு தீர்வல்ல மூடிய பொருளாதாரம் ஒரு தீர்வல்ல Reviewed by Madawala News on October 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.