காட்டிக்கொடுப்புக்களில் சிறந்த காட்டிக்கொடுப்பு இதுதான்.


யுத்தம் முடிவடைந்ததன் பின் எல்லா தமிழ் மக்களும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு
சென்றுவிட்டார்கள் என விடுதலைப் புலிகளின் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கூறியிருப்பதானது யுத்த காலத்தில் எல்லா தமிழ் மக்களிடத்திலும் ஆயுதங்கள் இருந்து என்பதை வெளிப்படுத்தும் கருத்தாகும். அப்படியானால் இலங்கையில் எப்படி யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றிருக்க முடியும்? எப்படி மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க முடியும்?


லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை இறுதி யுத்தத்தில் முள்ளி வாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் கொன்றதாக எப்படி கூற முடியும்? அவரின் கருத்துப்படி ஆயுதங்கள் வைத்திருந்த அனைவரும் புலிகள் தானே?

ஆயுதங்கள் விற்ற பணத்தை என்ன செய்தீர்கள்? பழையதை விற்று நவீன ரக ஆயுதங்களை வாங்கினீர்களா? எந்த ஒரு முஸ்லிமும் அரசாங்கத்தோடு ஆயுதமேந்தி சண்டை பிடிக்கவில்லையே? அலுத்கம முதல் தெல்தெனிய வரை அடிவாங்கிக் கொண்டு உயிர் உடமைகளை இழந்து அனாதைகள் போலத் தானே நின்றோம்.


 நீங்கள் சொல்வது போல ஆயுதங்கள் இருந்தால் அதனை அப்போது சரி பயன்படுத்தி இருப்போமே? ஒன்று நீங்கள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றிருக்காமல் ரகசியமாக பதுக்கியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் சொல்வது போல பாவனைக்கு உதவாத ஆயுதங்களை ஏமாற்றி விற்று அந்த பணத்தில் நவீன ரக ஆயுதங்களை வாங்கி மீண்டும் யுத்தம் நடத்த தயாராக வேண்டும். நீங்கள் எல்லா தமிழ் மக்களிடமும் ஆயுதங்கள் இருந்தது என்கிறீர்கள். அவர்கள் ஆயுதங்களை விற்றார்கள் என்கிறீர்கள்.


அப்படியானால் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்கள், போதைக்கடத்தல் குழுக்கள் , கொள்ளைக்குழுக்கள் கிழக்கில் அல்லவா உருவாகியிருக்க வேண்டும். ஏன் வடக்கில் உருவானது? அதில் தமிழ் இளைஞர்கள் மட்டும் இருப்பது ஏன்? தமிழ் மக்களையே அவர்கள் வதைப்பது ஏன்?

 யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு நாதியற்ற நிலையில் வறுமைக்கோட்டில் வாழும் அப்பவாவி தமிழ் மக்களை உங்கள் பேராசை பிடித்த பண மோகத்துக்காக ,யாரோ போடும் எலும்புத்துண்டுக்காக இப்படி காட்டிக்கொடுக்கிறீர்களே? நீங்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது என்று கூறியது நான் மேலே கேட்க கேள்விகளை நேரடியாகவே ஆமோதிப்பதற்கு சமன்.

அஸாம் ஏ கரீம்

காட்டிக்கொடுப்புக்களில் சிறந்த காட்டிக்கொடுப்பு இதுதான். காட்டிக்கொடுப்புக்களில்  சிறந்த காட்டிக்கொடுப்பு இதுதான். Reviewed by Madawala News on August 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.