ஓட்டமாவடி நிருபர் .அ.ச.முகம்மது சதீக் -
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்டதும் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்டதும்
மட் /மம மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் பதினொன்றில் கல்வி பயிலும் ஆதம்லெப்பை பாத்திமா றிஹா எனும் மாணவி தேசிய தமிழ் தின 2018 ல் குறுந்நாடகம் நான்காம் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இம்மாணவியை பயிற்றுவித்த அப்பாடசாலை தழிழ் பாட ஆசிரியர்கள் மற்றும் இம்மாணவிக்கு மேலதிகமான ஆலோசனைகளை வழங்கிய மூத்த எழுத்தாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எல்.எம் ஹனிபா ஆகியோர்கள் பாராட்டுக்குரியவர்கள்;
இம்மாணவி மீராவோடை நான்காம் வட்டாரத்தில் வசிக்கும் மீராலெப்பை ஆதம்லெப்பை அப்துல்காதர் பாத்திமா பாயிஸா ஆகியோரின் மகளும் காலஞ்சென்ற முஸ்தபா அன்னாவியாரின் பூட்டிப்பிள்ளையுயாவார்
மீராவோடை அல் ஹிதாயாமாணவி பாத்திமா றிஹா, தேசிய மட்டத்தில் முதலாம் இடம்.
Reviewed by Madawala News
on
August 19, 2018
Rating: