சீதுவ – கொடுகொட வீதியில் பஞ்சானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்றும்
சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சைக்கிளில் பயணித்த 14 வயது மகனும் 45 வயதுடைய தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் வேனில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
விபத்தில் 14 வயது மகனும் 45 வயதுடைய தந்தையும் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
March 19, 2023
Rating: