யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் தங்கையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
22 வயதுடைய சந்தேக நபரே(அண்ணன்) இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் குறித்த தங்கை கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை கலைக்க முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்,
எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்
தங்கை கர்ப்பமாகியது தொடர்பில் அண்ணன் பொலீஸாரால் கைதான சம்பவம் பதிவு.
Reviewed by Madawala News
on
March 19, 2023
Rating: