வீதிக்கு உடனடியாக பெயர் மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த பிரதமர்.



Slave Island" என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக 'கொம்பன்ன வீதிய' என
 மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.



75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.



பெயரை மாற்றுவதற்கு உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.



"Slave Island" (ஸ்லேவ் ஐலண்ட்) என்ற ஆங்கில பதம் தமிழில் 'அடிமைத்தீவு' என்ற அர்த்தத்தை வழங்குகிறது.



எனவே, அந்த பெயரை மூன்று மொழிகளில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) உச்சரிக்க வசதியாக மாற்றப்பட்டுள்ளது.



இது தொடர்பில் அஞ்சல்மா அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
வீதிக்கு உடனடியாக பெயர் மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த பிரதமர். வீதிக்கு உடனடியாக பெயர் மாற்றுமாறு  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த பிரதமர். Reviewed by Madawala News on February 02, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.