Video : விலை அதிகரித்தாலும் பரவாயில்லை, பழைய விலைக்கே பெட்ரோல் விற்குமாறு எமது பெட்ரோல் நிலைய முதலாளி கூறினார்.
நேற்று (01) நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பழைய விலைக்கே பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலர் வாகனங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், சில எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டன மற்றும் சில நிலையங்கள் தொடர்ந்து திறந்திருந்தன.
நள்ளிரவுக்குப் பிறகு எரிபொருள் நிலையங்கள் விலையை உயர்த்திய போதிலும், சில எரிபொருள் நிலையங்கள் வருகைத்தந்த அனைவருக்கும் பழைய விலையில் பெற்றோலை விநியோகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பன்னிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றும் பழைய விலையிலேயே அங்கிருந்த மக்களுக்கு எரிபொருளை விநியோகித்துள்ளது.
Video : விலை அதிகரித்தாலும் பரவாயில்லை, பழைய விலைக்கே பெட்ரோல் விற்குமாறு எமது பெட்ரோல் நிலைய முதலாளி கூறினார்.
Reviewed by Madawala News
on
February 02, 2023
Rating: