ஆசிய கிண்ணத்தின் இருபதுக்கு இருபது மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ஓட்டத்தினால் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
ஆசிய கிண்ணத்தின் இருபதுக்கு இருபது மகளிருக்கான கிரிக்கெட் போட்டி பங்களதேஷில் நடைபெற்று வருகின்றது.
இதன்படி, இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 26 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.
பதிலுக்கு 123 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதன்படி, இலங்கை அணி ஒரு ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கிக் கொண்டு, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 15ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்.
Reviewed by Madawala News
on
October 13, 2022
Rating: