கல்எலிய வர்த்தகரை கடத்தி சென்று மனைவியிடம் கப்பம் கேட்ட கும்பல்.. அதிரடியாக செயல்பட்டு முறியடித்த பொலீஸார்.



வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று அடித்து கப்பம் பெற முயன்ற கும்பலை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (12) காலை கல்எலிய பகுதியில் உள்ள வர்த்தகரின் கடைக்கு காரில் வந்த கொள்ளை கும்பல் வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளது.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர், குறித்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், வர்த்தகரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொழிலதிபரை விடுவிக்க 120,000 ரூபா தேவை எனத் தெரிவித்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் வர்த்தகரின் மனைவி பல்லேவெல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர், குறித்த கப்பம் கோருபவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பல்லேவெல பொலிஸார் ஆரம்பித்தனர்.

அதற்கமைய, பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தலின்படி, குறித்த தொழிலதிபரின் மனைவி, கப்பம் கோரும் கும்பலின் உரிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, தேவையான பணத்தை தரலாம் எனக் கூறியுள்ளார்.

பின்னர் கப்பம் கோரிய பணத்துடன் கடவத்தை நகருக்கு வருமாறு தொழிலதிபரின் மனைவியிடம் கொள்ளைக் கும்பல் தெரிவித்துள்ளது.

பின்னர் பல்லேவெல பொலிஸ் மற்றும் மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குழு வர்த்தகரின் மனைவியுடன் கப்பம் கோருபவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு கறுப்பு நிற காரில் கப்பம் கோரிய கும்பல் கடவத்தை நகரில் உள்ள மேற்கூறிய இடத்திற்கு வந்தனர்.

அதன்படி, தொழிலதிபரின் மனைவி கப்பம் கோருபவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கும் போது, ​​அருகில் இருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு கொள்ளைக் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் 3 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட வர்த்தகர் கடுமையாக தாக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுபோவில மற்றும் நுகேகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் நாட்டின் வேறு பகுதிகளில் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
கல்எலிய வர்த்தகரை கடத்தி சென்று மனைவியிடம் கப்பம் கேட்ட கும்பல்.. அதிரடியாக செயல்பட்டு முறியடித்த பொலீஸார். கல்எலிய வர்த்தகரை கடத்தி சென்று மனைவியிடம் கப்பம் கேட்ட கும்பல்.. அதிரடியாக செயல்பட்டு முறியடித்த பொலீஸார். Reviewed by Madawala News on October 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.