அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு தேவையான மணலை இறக்குமதி செய்யத் திட்டம்.



 (சி.எல்.சிசில்)

2024ஆம் ஆண்டு முதல் நாட்டில் அபிவிருத்தி

 நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள ஆறுகளிலிருந்து மணலை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2021-25 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மணல் தேவை 57 மில்லியன் கன மீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் 42 மில்லியன் கனமீற்றரே உள்ளது.

ஆறுகளில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு வருவதாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து மணல் எடுப்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடலில் ஆழமாக தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டாலும், மீனவ மக்களின் எதிர்ப்புக் காரணமாக மணல் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு தேவையான மணலை இறக்குமதி செய்யத் திட்டம். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு தேவையான  மணலை இறக்குமதி செய்யத் திட்டம். Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.