பாகிஸ்தானில் நடந்த கொலை வன்மையான கண்டனத்துக்குரியது... இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை.
பாகிஸ்தானில் நடந்த கொலை வன்மையான கண்டனத்துக்குரியது
என்பதுடன் இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்பதும் உண்மையாகும்.
கொலை செய்யப்பட்டவர் அங்குள்ள இயக்கம் ஒன்றின் போஸ்டர்களை கிழித்து குப்பையில் போட்டதனால் அந்த இயக்கத்தினர் இக்கொடுமையை செய்திருப்பதுடன் இதன் மூலம் இது கட்சி, இயக்க வெறிச் செயல்தானே தவிர மத வெறியல்ல.
இலங்கையில் ஒரு காலத்தில் ஜேவிபியும் தமது பிரச்சார போஸ்டர்களை தடை செய்தோரை கொன்ற சம்பவங்கள் உள்ளன. அதே போல் தமிழ் ஆயுத இயக்கங்களும் செய்துள்ளன.
எது எப்படியிருப்பினும் பொதுமக்கள் சட்டத்தையும் நீதியையும் கையில் எடுப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
அதே போல் இலங்கையில் கடந்த ரணில், மைத்திரி, சஜித், ஹக்கீம் ரிசாத் ஆகியோரின் நல்லாட்சியின் போது திகனயில் ஒரு முஸ்லிம் வாலிபர் கொல்லப்பட்டு தீயில் எரிக்கப்பட்ட போது அன்றைய அரசாங்கம் இதற்காக எவரையும் கைது செய்யாமல் புதினம் பார்த்த நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையர் கொலையில் ஈடுபட்டோரில் நூற்றுக்கனக்கானோரை கைது செய்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
ஆகவே, தனியார் வெறித்தனமான இயக்கங்கள் உலகில் ஒழிக்கப்படுவதோடு இத்தகைய இயக்கங்கள் உருவாக காரணமான நாடுகளும் அரச இராணுவங்களும் தம்மை திருத்திக்கொண்டு அமைதியான உலகை நோக்கி வரவேண்டும்.
Mubarak Abdul Majeed
- ஐக்கிய காங்கிரஸ் கட்சி
பாகிஸ்தானில் நடந்த கொலை வன்மையான கண்டனத்துக்குரியது... இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை.
Reviewed by Madawala News
on
December 04, 2021
Rating: