அபாயா அணிந்த முஸ்லிம் பெண்களில் 90 வீதமானோர் விபச்சாரம் புரிவதாகவும் போதை வஸ்த்து கடத்துவதாகவும் கூறப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அபாயா அணிந்த முஸ்லிம் பெண்களில் 90 வீதமானோர் விபச்சாரம்
புரிவதாகவும் போதை வஸ்த்து கடத்துவதாகவும் கூறிய நடராஜா ரவிகுமாரின் கூற்றை நாம் வண்மையாக கண்டிப்பதுடன் முஸ்லிம் பெண்களை கேவலப்படுத்தி அரசியல் செய்வது நியாயம் ஆயின் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் பெண்களை கேவலப்படுத்த வேண்டி வரும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் ரிசாத் பதியுதீன் வீட்டில் எரிகாயங்களுடன் மரணித்த பெண் பற்றி, ஒரு காலத்தில் மனோ கணேசனின் வாலாக இருந்த நடராஜா என்பவர் 90 வீதமான முஸ்லிம் பெண்கள் அபாயா அணிந்து விபச்சாரத்திலும் போதை வஸ்த்து கடத்தலிலும் ஈடு படுவதாக பேசியுள்ளார்.
அவரிடம் நாம் கேட்கிறோம், இப்படி நீ எத்தனை பேரைக்கண்டாய் என்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?
முஸ்லிம் பெண்களின் அபாயா பற்றி கேவலமாக பேசும் போது தமிழ் பெண்களின் சாரி பற்றி மற்றவர்களால் பேச முடியாதா?
ரிசாத் பதியுதீன் விடயத்தில் இந்த அரசாங்கம் மிகச்சரியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறமையான பொலிஸ் குழுவை அமைத்துள்ளார். உண்மை என்ன, யார் குற்றவாளி என்பதை நிச்சயம் பொலிசார் கண்டு பிடிப்பர் என்ற உறுதி எமக்குண்டு.
இது அமைதியாக, இறுக்கமாக இருக்கும் மேல்மாகாண தமிழர், முஸ்லிம்கள் உறவுகளிடையே இனவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
இக்கருத்தை தமிழ் கட்சிகளும் அமைப்புக்களும் கண்டிக்க வேண்டும்.
பெரும்பாலான முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தும் இக்கருத்துக்காக இவர் பகிரங்க மன்னிப்பு கோரி தன் கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என கோருகின்றோம்.
இல்லாவிட்டால் இந்த முட்டாளுக்கெதிராக முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டி வரும்.
- முபாறக் அப்துல் மஜீத்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.
அபாயா அணிந்த முஸ்லிம் பெண்களில் 90 வீதமானோர் விபச்சாரம் புரிவதாகவும் போதை வஸ்த்து கடத்துவதாகவும் கூறப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
Reviewed by Madawala News
on
July 29, 2021
Rating: