- ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை பகுதியில் வீதியில்
தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் மற்றும் பீசிஆர் மாதிரிகள் பெறப்பட்டது. குறித்த நடவடிக்கையானது இன்று(23)கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது.கொரோனா தாக்கம் காரணமாக கிண்ணியாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகி தனிமைப்பகுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில் இன்று(23)எழுமாறாக திடீர் பரிசோதனைகள் ஜாவா ஜூம்மா பள்ளிவாயல் வளாகத்தில் வைத்து இரானுவம் பொலிஸார் உதவியுடன் பிசிஆர் அன்டிஜன் மாதிரிகள் பெறப்பட்டது.
வீதியால் செல்வோரை மறித்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தேவையற்ற விதத்தில் வீதியால் நடமாடியவர்களுக்கு பீசிஆர் அன்டிஜன் பரிசோதனை.
Reviewed by Madawala News
on
June 24, 2021
Rating: