15 வயது சிறுமியை தினசரி பல்வேறு நபர்களுக்கு இணையம் மூலம் விற்ற நபர் கைது.


பதின்ம வயது மைனர்  பெண்  ஒருவரை  பாலியல் நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்தியதற்காக 35

வயதான ஒருவர் கல்கிஸ்ஸ பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.


 அந்த நபர் 15 வயது சிறுமியை இணையதளம்  மூலம் பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்றுள்ளார் என போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.


கல்கிஸ்ஸ பகுதியில்  ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்த நபர்  அந்த சிறுமியை   தினசரி  பலருக்கும் பாலியல் தேவைக்காக விற்றுள்ளது  விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


டெல்கொட  பிரதேசத்தில் வசிக்கும் அவரது  தாயிடமிருந்து சந்தேகநபர் சிறுமியை பணம் கொடுத்து  வாங்கியதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார், அதே நேரத்தில் இது தொடர்பாக அந்தப் பெண்ணிடமிருந்து காவல்துறை அறிக்கை பதிவு செய்துள்ளது.


சந்தேகநபர் நேற்று மொரட்டுவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 3 மாதங்களில் சந்தேக நபர் சிறுமியை பல நபர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இந்த காலகட்டத்தில் சந்தேக நபருடன் தொடர்புகொண்டவர்களை  அடையாளம் காண விசாரணை நடந்து வருவதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.

15 வயது சிறுமியை தினசரி பல்வேறு நபர்களுக்கு இணையம் மூலம் விற்ற நபர் கைது. 15 வயது சிறுமியை தினசரி  பல்வேறு நபர்களுக்கு இணையம் மூலம் விற்ற நபர் கைது. Reviewed by Madawala News on June 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.