திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க படிமம்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ள சிங்கள இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பல சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது எனவும், அண்மையில் நடத்திய புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்த புதையலில் தங்கத்திற்கு மேலதிமாக உலோகமும் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது உலக சந்தையில் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் செப்பு இந்த புதையலில் உள்ளதாகவும்,
இதனை உரிய முறையில் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டால் அதிக கடனில் சிக்கி தவிக்கும் இலங்கையை மிகவும் சிறிய காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க படிமம் ...? சிங்கள மொழி ஊடகங்கள் தகவல்.
Reviewed by Madawala News
on
January 10, 2021
Rating: