பேருவளை மொல்லியமலை பகுதியில் பணம் பகிர்ந்தளித்து சட்டவிரோத் தேர்தல் பிரசார
நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பிரதேச வாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனால் அங்கு சிறு அமைதியின்மை தோன்றியுள்ளது.பொதுமக்கள் வீதியில் குழுமியுள்ளதாக கூறப்படுகிறது.
கார் ஒன்றில் பணம் பங்கீடு செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மொல்லியமலைக்கு வந்த எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் காரையும் கொண்டு வந்த பணத்தையும் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் மடவளை நியுசுக்கு கூறினார்.
தற்போது பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்துள்ள நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சந்தேகநபர்களால் கொண்டுவரப்பட்ட பாரிய அளவில் பணம் காரில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நபர்களால் பேருவளை முல்லியமலையில் அமைதியின்மை ..
Reviewed by Madawala News
on
August 03, 2020
Rating: