இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,824 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 2517 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 296 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்காபுர பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று .
Reviewed by Madawala News
on
August 03, 2020
Rating: