கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 811 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,633 பேர் 821 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை குவைட் நாட்டில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதுடைய நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 11 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 811 ஆக உயர்வு
Reviewed by Madawala News
on
June 01, 2020
Rating: