இன்றைய தினத்தில் (2020.05.26) இதுவரையில் பதிவான புதிய
கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 96 ஆகும்.
இந்த நோயாளர்களில் 88 பேர் குவைத் நாட்டிலிருந்து வந்த பின்னர் மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள்.
ஏனைய 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கடற்படை அங்கத்தவர்களாவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆகும்.
இலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர் கள் பதிவானது இன்று ஆகும்.
இலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.
Reviewed by Madawala News
on
May 26, 2020
Rating: