வாழைச்சேனை பொலிஸாரினால் துண்டுப் பிரசுரம் விநியோகம்.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸில் இருந்து எமது குடும்பத்தையும் 

தேசத்தையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் துண்டுப் பிரசுரங்கள் வாழைச்சேனை பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கொடிய கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்புப் பெற வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கடைப்பிடிக் வேண்டிய ஒழுங்கு முறைகள் உள்ளடக்கிய பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ள பிரசுரம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி வாழைச்சேனை பொலிஸார் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள்,வீதி அறிவித்தல்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பொலிஸாரினால் துண்டுப் பிரசுரம் விநியோகம். வாழைச்சேனை பொலிஸாரினால் துண்டுப் பிரசுரம் விநியோகம். Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.