கொரோனாவின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ள ஐரோப்பாவின் முக்கிய வல்லரசான பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாளங்களில் 100 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாளங்களில் 113 பேர் பலியானதை அடுத்து பிரிட்டனில் கோரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 578 ஆக உயர்வடைந்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு பிரிட்டன் லொக்டவுன் செய்யப்பட்டுள்ள போதும் அங்கு நிலைமை மேலும் மோசமடையலாம் என கூறப்படுகிறது.
அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11,568 ஐ தாண்டியுள்ளது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அங்கு ரானுவம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் முதல் தடவையாக ஒரே நாளில் 100 க்கும் அதிகமானவர்கள் பலி !
Reviewed by Madawala News
on
March 26, 2020
Rating: