பிரித்தானியாவில் பிறைட்டன் பிராந்தியத்தைச் சேர்ந்த சாரணர் தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்
தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து 5 பாடசாலைகளில் வைரஸ் தொற்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் தம்மைத் தாமே தனிமைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ள னர். சாரணர் தலைவரான ஸ்டீ பன் வெல்ஷ் (53 வயது) சிங்கப்பூருக்கு வர்த்தக சுற்றுலாவொன்றுக்கு சென்றவேளை வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து பிரான்ஸ் சென்ற அவர் அங்கிருந்த தனது நண்பர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து பிறைட்டன் நகருக்கு திரும்பிய அவர், அங்குள்ள பலருக்கு வைரஸ் தொற்றை பரப்பியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மேற்படி வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டதையடுத்து தானே அந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்பதை ஸ்டீவன் வெளிப்படுத்தியுள்ளார்.
விற்பனை அதிகாரியான அவர் பிரித்தானிய மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்து உரையாற்றுகையில், தான் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் இந்நிலையில் தன்னால் ஏனையவர் களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை உணர்ந்ததாகவும் கூறினார்.
இங்கிலாந்தில் 5 பாடசாலைகளில் வைரஸ் தொற்று எச்சரிக்கை ..
Reviewed by Madawala News
on
February 13, 2020
Rating: