UNP யில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதற்கட்ட தேர்தல் கொடுப்பனவு ; ரனில் தீர்மானம் ..
ஐக்கிய தேசிய கட்சிக்குள் சஜித் ரனில் அணி இடையே மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில்,
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதற்கட்ட தேர்தல் கொடுப்பனவு வழங்க அக்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்க தீர்மானமானித்துள்ளார்.
நேற்றைய தினம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் இந்த விடயம் தொடர்பில் ரனில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ரனில் தலைமையிலான குறித்த கூட்டத்தில் அகில விராஜ் , ரவி கருணாநாயக்க , முஜிபுர் றஹுமன், சஞ்சீவனி கவிரத்ன , லக்ஸ்மன் கிரியல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக இந்த நிதியை வழங்கவும் தேர்தலுக்கு மேலும் நிதி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டாதாக கூறப்பட்டது.
UNP யில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதற்கட்ட தேர்தல் கொடுப்பனவு ; ரனில் தீர்மானம் ..
Reviewed by Madawala News
on
February 14, 2020
Rating: