பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருள்களாகக்
காணப்பட்ட சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலா 500 கிராம் அபின் போதைப்பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி முன்னிலையில் நேற்று மாலை என்ற கரவெட்டி சோனப்புத்திடல் என்ற இடத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டன.
பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் சந்தேகநபர்களின்றி மீட்கப்பட்ட போதைப்பொருள் சான்றுப்பொருள்களே அதிகளவில் இவ்வாறு அழிக்கப்பட்டன.
சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 350 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுதியான ஒரு கிலோ 500 கிராம் அபின் போதைப்பொருளும் அடங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டன.
5 கோடி பெறுமதியான போதைப்பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
Reviewed by Madawala News
on
February 14, 2020
Rating: