குறிப்பிட்டதொரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீவிரவாத சக்திகள் நவம்பர் 16 ஆம் திகதி
தேர்தலுக்குப் பின்பு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை மீள ஆரம்பிக்கக் கூடுமென தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அவ்வாறான கருத்தினை தான் ஒருபோதும் வெளியிடவில்லை எனவும் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
ஊடகங்கள் குறிப்பிட்ட கருத்து தொடர்பில் வினவிய போதே மகேஷ் சேனநாயக்க இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான பொய் கருத்துகளை வெளியிடுவது மிகவும் ஆபத்தானதாகும்.
நான் எங்கும், எப்போதும் தெரிவிக்காத கருத்தினை புனைந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை நான் முற்றாக மறுக்கிறேன். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.-
Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடக்கும் என நான் கூறவில்லை
Reviewed by Madawala News
on
November 12, 2019
Rating: