போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 183 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலை அந்த அணி அனைத்து விக்கட்டுக்களை யும் இழந்து 147
ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.
லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஒட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 77 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செஹான் ஜயசூரிய 34 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுபபெடுத்து ஆடிய பாகிஸ்தான். அணி ஓட்டங்களை 147 மட்டுமே பெற்றது.
முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இரு போட்டிகளிலும் வென்று T20 தொடரை இலங்கை இளம் அணி கைப்பற்றி அசததி உள்ளது.
இளம் இலங்கை அணி அசத்தல்.. இரண்டாம் T20 போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றியது.
Reviewed by Madawala News
on
October 07, 2019
Rating: