இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 5 இலங்கையர்கள் கைது.


சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த

மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படை முகாமை சேர்ந்த படையினர் pier  கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, இந்தியாவில் இருந்து வந்த படகு ஒன்றில் சட்டவிரோதமாக வந்த 5 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தலைமன்னார் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 29, 30, 34,37,49 வயதுடையவர்கள் எனவும், பேசாலை , யாழ்ப்பாணம், மன்னார், தலைமன்னார் பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு இலங்கைக்குள் கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப் படுகிறது.


சந்தேகநபர்களை மேலதிக விசாரணைக்காக தலைமைன்னார்  பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளதுடன் , மன்னார் மஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

குறிப்பு :
இலங்கையை சேர்ந்தவர்கள் என்றாலும்  வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடவுச்சீட்டு இல்லாமல் திருட்டுத் தனமாக கடல் மார்க்கமாக / ஆகாய மார்க்கமாக இலங்கைக்குள் நுழைய முடியாது.
அவ்வாறு நுழைந்தால் அது சட்ட விரோதம். கைது செய்யப் படுவர்.
இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 5 இலங்கையர்கள் கைது. இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 5 இலங்கையர்கள் கைது. Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.