சீரற்ற காலநிலை... ரியாத் மற்றும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க வந்த இரு விமானங்கள் மத்தலயில் தரை இறக்கப்பட்டன.
சீரற்ற வானிலையால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு விமானங்கள் இன்று
(21) காலை மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன.
ரியாத் இல் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL266 விமானமும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL 230 விமானமுமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை... ரியாத் மற்றும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க வந்த இரு விமானங்கள் மத்தலயில் தரை இறக்கப்பட்டன.
Reviewed by Madawala News
on
October 21, 2019
Rating: