அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வீட்டில் சஜித் அணி கலந்துரையாடல் ஒன்றை
இன்று மாலை நடத்தியுள்ளது.
இந்த சந்திப்பில் சஜித்துக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கும் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நடுநிலை வகித்து வந்த சிலரும் கலந்துகொண்டுள்ளதாக கூறப்பட்டது.
ஏற்பனவே பல்வேறு மட்டங்களில் ரனிலுக்கு அழுத்தம் கொடுத்தும் அவர் விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில் தான் தோன்றித்தனமாக அவர் முடிவொன்றை எடுத்து வேறு ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் முன்னெடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கை தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதாக கூறப்பட்டது.
ஊவா மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்னவின் ஐக்கிய தேசிய முன்னணியில் தனியாக களமிறங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சஜித் அதற்கு இன்னும் கிரீன் சிக்னல் காட்டவில்லை என கூறப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் நாளைய தினம் பிரதமரை சந்திக்க உள்ள அதேவேளை சஜித்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை முன்வைக்க பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டது.
ரஞ்சித் மத்தும பண்டார வீட்டில் சஜித் அணி கலந்துரையாடல் !
Reviewed by Madawala News
on
September 19, 2019
Rating: