சஜித் பிரேமதாச மற்றும் - சிவில் அமைப்புகளுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிந்ததுள்ளதாக
கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
நேற்றைய தினம் இரவு மங்கள சமரவீர அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடலில் இணக்கப்படுகள் எதுவும் எட்டப்படவில்லை என கூறப்பட்டது.
ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் கோரிக்கையை முன்னிருத்தி சிவில் அமைப்புகள் செயற்படும் நிலையில் ஜனாதிபதி முறை தொடர்பில் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு தொடர்பில் சிவில் அமைப்புகள் இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத சூழல் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் மைத்திரிபாலவை ஆதரித்த சிவில் அமைப்புகள் ஜனாதிபதி முறைமைக்கு எதிராக தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள கருவை ஆதரிக்கும் என கூறப்படுகிறது.
சஜித் - சிவில் அமைப்புகளுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிந்தது !
Reviewed by Madawala News
on
September 19, 2019
Rating: