ஏறாவூர் நகர பிரதேசத்தில் ஹஜ்ஜுப் பெருநாளான நேற்று (12)
மாலை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்பட்ட நீர் சேறு கலந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் நீர் விநியோகத்திலிருந்து நேரடியாக வழமைபோன்று நீரைப் பருகுபவர்கள் சேறு கலந்த நீரைப் பருக வேண்டியேற்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இதுபோன்று ஏறாவூர் நகர பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதியும் காலையிலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிகப்பட்ட நீர் அருந்துவதற்குப் பொருத்தமில்லாதவாறு நிறமாற்றமடைந்திருந்தது.
பெருநாள் தினத்தன்று ஏறாவூர் நகர பிரதேசத்தில் சேறு கலந்த நீர் விநியோகம்!
Reviewed by Madawala News
on
August 13, 2019
Rating: