நுவரெலியா மற்றும் ஹட்டன், கொட்டகலை ஆகிய பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக
நேற்று காலை கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 5 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதோடு இத்தோட்டத்திற்கான போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மேற்படி பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் மரம் முறிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கிப்போய்யுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு சில பிரதேச பிரதான வீதிகளில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.
பனிமூட்டமும் நிலவுவதால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங் களை செலுத்துமாறு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்மழையால் மலைநாட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு.. மக்கள் பாதிப்பு.
Reviewed by Madawala News
on
August 13, 2019
Rating: