எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சமூக வலைத்தலங்களில்
கேலி பதிவுகளை இடுவதனை தவிர்த்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கு போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த தேஷப்பிரியவினால் . பேஸ்புக் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை...!
Reviewed by Madawala News
on
August 13, 2019
Rating: