ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத
நிலையில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்க அக்கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில்,
இதற்கான ஒப்புதல் கட்சி தலைமையினால் வழங்கப்படாவிட்டால் சஜித் பிரேமசாதவை தனி வழியில் செல்லுமாறு அக்கட்சி சஜித் அணியினர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்தை அறிவிக்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால 7 நாட்கள் காலக்கொடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் இறுதி தீர்மானம் எட்டப்படும் என சஜித் அணி தீர்மானித்துள்ளது.
சஜித் தனி வழி சென்றால் மைத்திரியின் ஆதரவு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
யானையில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் தனி வழி !
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: