ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சி மாகாண சபை
உறுப்பினர்கள் இடையேயான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கை பூராகவும் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் கலந்துகொண்டதாக அக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் தலதா , ஷிரானி, நலீன் பண்டார , அஜித் பி பெரேரா , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹேஷா , மரிக்கார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை நிறுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
கண்டி மற்றும் நுவரெலிய மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அக்கட்சி தகவல்கள் மேலு தெரிவித்தன.
சஜித் பிரேமதாச - UNP மாகாண சபை உறுப்பினர்கள் இடையே விஷேட கலந்துரையாடல்
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: