பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த போதும் நாட்டு மக்களின் வருமானம் 50% இலிருந்து 100 % ஆக அதிகரித்துள்ளது என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்த ஐந்தாண்டில் பொருளாதார கட்டமைப்பு ஸ்திரப்பட்டுள்ளதாகவும் அடுத்து ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர்,கடந்த காலங்களை விட தற்போது மக்களின் தேவைகள்
அதிகரித்துள்ளாதாவும் அதனால் செலவீனம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தங்களது ஆட்சியில் பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் வந்தபோதும் மக்களின் வருமானம் குறையவில்லை அது 50 % இலிருந்து 100% ஆக அதிகரித்தாகவும் அது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் வருமானம் 50% இலிருந்து 100 % ஆக அதிகரித்துள்ளது ..
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: